Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Thursday, September 2, 2010

தேவ ஊழியத்திற்காக ஏன் உங்களை வளர்த்துக் கொள்ளக் கூடாது?

அத்தியட்சாதீன நீள்விரி இறையியல் கல்வி


கோலாலம்பூர் – பரி.யாக்கோபின் ஆலயம், கிள்ளான் – பரி.பர்னபாவின் ஆலயம்



2010ல் நடைபெற்ற நீர்விரி இறையியல் பயிற்சியில் சுமார் 70 ஆங்கிலிக்கன்கள் பயிற்சி பெற்றனர்.

1. லே ரீடர்

2. லே பாஸ்டர்

3. அறிவார்ந்த சபையார்



போதிக்கப்பட்டுத் தரப்படும் பாடங்கள்?

1. பழைய ஏற்பாடு – ஓர் அறிமுகம்

2. புதிய ஏற்பாடு – ஓர் அறிமுகம்

3. கிறிஸ்தவ இறையியல் – ஓர் அறிமுகம்

4. பிற மார்க்கத்தின் அயலார்களை அறிந்து கொள்ளுதல் – ஓர் அறிமுகம்

5. சுவிசேஷம் பற்றிய ஓர் அறிமுகம்

6. நமது ஜீவியத்திற்காகவும் சாட்சிக்காகவும் பிற இன அயலாரை அறிந்து கொள்ளுதல்



இறுதியாக நடைபெற்ற பயிற்சியில் எந்தத் தரப்பினர் கலந்து கொண்டனர்?



1. லே ரீடர்

2. லே பாஸ்டர் / சுவிசேஷகர்

3. இல்லத்தரசிகள்

4. கல்லூரி மாணவர்கள்

5. பல்கலைக் கழக விரிவுரையாளர்

6. ஒரு நிறுவனத்தின் மேலாளர்

7. சில குருமார்கள்

8. ஒரு வர்த்தகர்





கால வரம்பு

ஆறு மாதக் காலக்கட்டத்தில் மாதத்தில் ஒரே ஒரு சனிக் கிழமை காலை 10.00 – மாலை 4.00 வரை சந்திப்பு நடைபெறும்.



கலந்து கொண்டதற்கான அங்கீகாரம்

கலந்து கொண்டதற்கான அத்தியட்சாதீனத்தின் சான்றிதழ்



பயிற்சிக்கான கட்டனம்

100 ரிங்கிட் மட்டும். தங்களைப் பதிந்து கொள்ளும்போது செலுத்த வேண்டும்.



முதல் சந்திப்பு – ஜனவரி 2011 காலை மணி 10.00

பரி.யாக்கோபின் ஆலயம், கோலாலம்பூர் – ஜனவரி 15

பரி.பர்னபாவின் ஆலயம், கிள்ளான் – ஜனவரி 29



தொடர்புக்கு

பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை (விரிவுரையாளர்)

திரு. சிம்சன் (019-2169147)

சங்கை ஜெஸ்விண்டர் சிங் (016-6367722)

சங்கை பிளமோன் (016-6253505)



பேராயர் டத்தோ டாக்டர எஸ்.பத்துலை, பிஎச்டி

ஒருங்கிணைப்பு விரிவுரையும்

26.06.2010

ஏன் முழுநேர குருத்துவப் பயிற்சிக்கு ஒரே சிலரே முன்வருகின்றனர்?

1. தற்காலத்தில் வாலிபர்கள் முழுநேர குருத்துவப் பயிற்சிக்கு ஒரு சிலரே முன்வருவதாகக் காணப்படுகிறது.

2. 60களிலும் 70களிலும் போலல்லாமல் தற்போது அதிகமான வெளி வேலை வாய்ப்புகள் மலிந்து கிடக்கின்றன.

3. உண்மையில், முழுநேர குருமார்களாகத் தங்களை அர்ப்பணித்துக் கொள்வதற்கு முன்னுதாரணமாக வாழ்ந்து சபையாரை ஏவிவிடும் குருமார்களும் குறைந்து விட்டனர்.

4. எல்லா நிலையிலும் உலக சிந்தனையும் லௌகீக இன்பங்களும் மலிந்து விட்டன.

5. முழுநேரக் குருத்துவ விழிப்புணர்ச்சிக்காக எல்லா நிலையிலும் சபைகள் இதைப் பற்றி உபதேசிக்க வேண்டும். ஏனென்றால், (பவுலைப் போன்று) தேவ அழைப்புக்கு தியாகவுள்ளம் தேவைப்படுகிறது.

6. தங்கள் பிள்ளைகள் முழுநேரக் குருத்துவ பயிற்சியில் ஈடுபட, பெற்றோர்கள் ஆக்க்கரமான முறையில் செயல்பட வேண்டும். சாமுவேலின் பெற்றோர்களைப் போல், நாமும் பிள்ளைகளை அர்ப்பணிப்புக்கு வழிநடத்த வேண்டும்.

7. தகுதியான மாணவர்களை லிட்சிபீல்ட் போன்ற இடங்களுக்கு 6 மாதங்களாவது அனுப்பி வைப்பதைப் பற்றி அத்தியட்சாதீனம் சிந்தித்துப் பார்க்கலாம்.

8. சபையில் பணியாற்றும் குருமார்களை, பீசிசி அதிகமாகக் குறைகாணாமல், அவர்களின் சிறப்பம்சங்களைப் பாராட்ட வேண்டும். வருடாந்திர குருமார் பாராட்டு விழா நடத்துவதைப் பற்றி சிந்தித்துப பார்க்கவும்.

9. எல்லா சபைகளும், சுவிசேஷ வட்டங்களும் அத்தியட்சாதீனமும் இறையியல் கல்லூரியும் நடத்தும் நீள்விரி இறையியல் பயிற்சியில் கலந்து கொள்ள தங்கள் சபையாரை ஈடுபடுத்த வேண்டும். இதன் மூலம் பயிற்சியில் ஈடுபடுகிறவர்கள் தன்னார்வ குருமார்களாக (LOM / NSM) பிற்காலத்தில் தங்களை ஒப்புவிக்க முடியும். இவ்வண்ணமாக அவர்களுக்கு தன்னம்பிக்கையைப் பிறப்பிக்கலாம்.

10. கிளை அத்தியட்சாதீனங்கள், அத்தியட்சாதீனத்தில் இருந்தும் பிற ஊழிய நிலைகளில் இருந்தும் பேச்சாளர்களை வரவழைத்து, குருமார்களின் பற்றாக்குறையை விளக்கும் வகையில் உரை நிகழ்த்தலாம்.

11. தற்போது குருமார்களும் பிற ஊழியர்களும் பெறுகின்ற ஊதியத்தையும் பிற உதவிகளையும் விளக்கும் வகையில் கையேடுகள் வெளியிடலாம். சுமார் 40 ஆண்டுகளாக ஆங்கிலிக்கன் திருமண்டலத்தில் பணியாற்றிய காலத்தில், குருமார்களும் பிற முழுநேர ஊழியர்களும் படிப்படியாக ஆவியின் பிரகாரமாகவும் உலகப் பிரகாரமாகவும் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளதைக் கண்டுள்ளேன்.

12. குருமார்களும் டீக்கன்மார்களும் தாங்கள் அடைந்த ஆனந்தத்தையும் நிறைவையும் சாட்சியாகப் பகர்ந்து வருகின்றனர்.

13. பேராயர் எங் மூன் ஹிங், சீடத்துவப் பயிற்சியைக் குறித்த தேவ கட்டளையின் தரிசணத்தைத் தெளிவாக புரிந்து கொள்வது, சபைகளைத் தனது திட்டத்தை நிறைவடையச் செய்யும், என்று கூறியுள்ளார்.

14. பெற்றோர்கள் பிள்ளைகள் வளர்ப்பதை ஒரு முக்கியக் கடமையாகக் கருத வேண்டும். நீதிமொழிகள் 22.6ல், பிள்ளையானவர் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான், என்று கூறப்பட்டுள்ளது.