Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Friday, January 27, 2012

103. யூதா


இயேசு, யாக்கோபின் சகோதரன், யூதா நிருபத்தின் எழுத்தாளன்.

முக்கிய வசனம்: “பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக் குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும் கருத்துள்ளவனாயிருக்கையில், பரிசுத்தவான்களுக்கு ஒரு விசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாகக் கண்டது.”(வசனம். 3)

சுருக்கமான குறிப்புகள்:

v  இயேசுவின் சகோதரன் இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரன், இயேசுவின் சகோதரன் என்று தானே அழைத்துக் கொள்கிறான்.
v  அவன் இயேசுவின் சகோதரர்களில் ஒருவனாக மத். 13:55ல் எண்ணப்படுகிறான்.
v  யூதா நமது பொதுவான இரட்சிப்பு சம்பந்தப்பட்டதை எழுதத் தேவையானதைக் கண்டுபிடித்தான். அப்போஸ்தலர்களின் நம்பிக்கையின் சக்திவாய்ந்த தற்காப்பின் மிகுந்த விவாதத்தின் வழி கடமையைச் செய்யக் கண்டுபிடித்தான்.
v  நமது தேவனின் கிருபையின் மதிப்பைக் குறைவாக்கி, நமது ஒரே எஜமான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மறுதலிக்கும் கேள்விக்குரிய போலி ஆசிரியர்களைத் தாக்குவது அவசியமாகிறது என்று அவன் அறிந்துகொண்டான்.
v  முதல் நூற்றாண்டிலிருந்து சபை மதத்திற்கு எதிரான கொள்கை, போலியாகக் கற்பிக்கப்படுவதின் மூலம் அச்சுறுத்தப்பட்டு வருகிறது.  யூதா தன்னைக் காப்பாற்றிக்கொண்டான்.

1.    அறிமுகம்அவன் விவரம்

தீங்கிலிருந்து பாதுகாக்க, தாக்குதலிலிருந்து காப்பாற்ற, எதிரிகளைத் துரத்தநூற்றாண்டுகளாக முரட்டுத்தன்மையுள்ள பாதுகாவலர்கள் அவர்களை எழுப்பினார்கள்.  ஆயுதங்களை உபயோகித்தார்கள், யுத்தத்தை நடத்தினார்கள், தேசங்களையும், நகரங்களையும் காப்பாற்ற யுத்தத்தில் மூலப்பொருட்களையும், மனித ஆதாரங்களையும் விரிவுபடுத்தினார்கள். முழு ஒத்துழைப்போடும், தைரியமான கைவிடப்பட்டவர்களோடும் சேர்ந்து தனித்து விடப்பட்டவர்கள் தங்கள் குடும்பத்தாருக்காக யுத்தம் செய்தார்கள்.  நாம் பிழைத்திருக்க யுத்தம் செய்வது, நமக்கு எது மிகுந்த விசேஷமாயிருக்கிறதோ அதைப் பெற ஒவ்வொரு ஆர்வம் அல்லது கற்பனைத் தாக்குதல் இவைகளை அடக்க முழுப்பலத்தோடு எதிர்கொள்ள வேண்டும் என்பது வாழ்க்கையின் சட்டம்.

தேவனின் வார்த்தை, நிலையான வாழ்வின் பரிசு மிகுதியான மதிப்புடையது.  இவைகள் கிறிஸ்துவைப் பின்பற்றும் விசுவாசிகளுக்கு நம்பிக்கை கொடுக்கும்.  அங்கே தேவனுக்கும் அவரின் சீஷர்களுக்கும் எதிராக அநேக மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.  அவர்கள் தேவனின் உண்மையை மாற்றிச் சொல்லி ஜாக்கிரதையில்லாதவர்களை ஏமாற்றி, அழித்துப்போட வழி தேடுகிறார்கள்.  ஆனால் தேவனின் உண்மை தொடர்ந்து முன்னே செல்லும்.  தேவ குமாரனிடம் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பாதுகாக்கப்படும்.  இது ஒரு முக்கியமான கடமை.  ஒரு பக்தியான பொறுப்பு, இந்த வேலை பொறுப்புள்ள சலுகை. 

எல்லா இடங்களிலும் உள்ள கிறிஸ்தவர்களுக்கு இது யூதாவின் செய்தி.  எதிர்ப்புகள் ஏற்படும்.  தேவனற்ற ஆசிரியர்கள் எழும்புவார்கள்.  ஆனால் கிறிஸ்தவர்கள் விசுவாசத்தில் திருப்தியாயிருக்க வேண்டும். (வசனம்: 3)  எல்லா போலியானவைகளையும், பாவகரமானவைகளையும் தள்ளிவிடுதல்.(4-19 வசனங்கள்)  தேவனின் வல்லமையான காப்பாற்றுதலையும் தண்டனைகளையும் நினைவுகூறுதல். (5-11, 14-16 வசனங்கள்)  அப்போஸ்தலர்களின் எச்சரிக்கை. (17-19 வசனங்கள்)  அதை வாசிக்கிறவர்கள் தங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின் மேல் ஜெபத்தின் மூலம் தங்களை உறுதிப்படுத்திக் கொண்டார்கள். (வசனம் 20)  கிறிஸ்துவிடம் நெருக்கமாயிருங்கள்.(வசனம் 21)  மற்றவர்களுக்கு உதவுங்கள்.(22-23 வசனங்கள்)  பாவத்தை வெறுத்துத் தள்ளுங்கள்.(வசனம் 23)  பிறகு யூதா தேவனுக்கு மகிமையான ஆசீர்வாதமான ஸ்தோத்திரம் செலுத்தி முடிக்கத் தீர்மானித்தான்.(24 – 25 வசனங்கள்) 

தேவனின் வார்த்தைகள், சபையின் கூட்டமைப்பு, இயேசு கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிதல் இவைகளை நீங்கள் எவ்வளவு மதிக்கிறீர்கள்?  அநேக போலியான ஆசிரியர்கள் உங்கள் கிறிஸ்து சம்பந்தப்பட்ட வாழ்க்கையை நம்பத் தகுந்த தேவனின் வார்த்தை, கிறிஸ்து சபை ஒற்றுமை இவைகளினால் அழிக்கக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.  யூதா நிருபத்தை வாசித்து உங்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்க உறுதிகொண்டு எந்த நிலையிலும் தேவனின் உண்மையைக் காப்பாற்றுங்கள்.  வேறு ஒன்றும் அதை விட மதிப்பு உள்ளதல்ல. 

2.    அவனுடைய கருப்பொருள் அதின் முக்கியத்துவம்.

கருப்பொருள்
முக்கியத்துவம்
போலியான ஆசிரியர்கள்

யூதா கர்த்தராகிய கிறிஸ்துவையும் மற்றவர்களின் விசுவாசத்தை குறைவாக எடை போடுவதையும் ஏற்க மறுக்கும் போலி ஆசிரியர்களுக்கும், தலைவர்களுக்கும் விரோதமாக எச்சரிக்கிறான்.
நாம் கிறிஸ்தவ உண்மைகளைப் பலமாக ஆதரிக்க வேண்டும்.  தங்கள் நோக்கத்திற்கு ஏற்றபடி வேதாகமத்தைத் திரித்துச் சொல்லும் தலைவர்களை விட்டு விலகுங்கள்.


அந்தத் தலைவர்கள் அவர்களை வழி தவறும்படி செய்கிறதற்காகத் தண்டிக்கப்படவேண்டும்.
உண்மையான தேவனின் ஊழியக்காரர்கள் தங்கள் வார்த்தையிலும், குணத்திலும் கிறிஸ்துவை விசுவாசத்தோடு வர்ணிப்பார்கள்.


அப்போஸ்தலத் தன்மை

யூதா கிறிஸ்துவை விட்டு விலகிப்போன அப்போஸ்தலத் தன்மையையும் எச்சரித்தான். அவனுக்கு விரோதமாகக் கலகம் செய்பவர்களைத் தேவன் தண்டிப்பார் என்பதை நினைவுகூரவேண்டும். கிறிஸ்துவுக்கு விசுவாசமுள்ள ஒத்துழைப்பிலிருந்து விலகிக் கொள்ளாமல் இருப்பதில் நாம் கவனமாயிருக்கவேண்டும்.


தேவனின் வார்த்தையிலுள்ள உண்மைகளை அறியக் கவலைப்படாதவர்கள்  அப்போஸ்தலத்தில் பாதிக்கப் படுவார்கள். கிறிஸ்தவர்கள் அப்போஸ்தலர்களால் போதிக்கப் படுகிறவைகள், தேவனின் வார்த்தைகளால் எழுதப்பட்டிருந்தால் அதற்கு விரோதமாகப் போலியான போதனைகளால் அவர்கள் உண்மையிலிருந்து விலகச் செய்வார்கள் என்பதை அறிந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.


3.    பெரிய சபைகளுக்கு இது முக்கியமானது.

இந்தக் கடிதம்கத்தோலிக்கக் கடிதங்கள்என குறிப்பிடப்பட்டிருக்கிறது.  அந்தக் கடிதம் சந்ததியின் கஷ்டங்களுக்கு எதிரான விசுவாசத்தைக் காப்பாற்ற, அந்தச் சந்ததியின் முக்கியமாக பெரிய அளவிலான குணாதிசயங்களைக் காட்டுகிறது.  அது 2பேதுருவுக்கு மிக நெருங்கிய சம்பந்தமுள்ளது.  இந்தக் கடிதத்தின் முக்கியமானது சபையினுள் சமய பேதத்தின் சிக்கலான கதையில் பங்கு கொள்வதில் அடங்கியிருக்கிறது.  அது முன்னுள்ள போராட்டமானஆஸ்தீகம்வசனங்கள்மதபேதம்அது தொடர்ந்து அப்போஸ்தல வழக்கமான சபை அதிகாரி, பரம்பரை வழக்கம், அதிகாரமுள்ள மொழி பெயர்த்தல் இவைகளை ஏற்படுத்த தொடர்ந்து சபையைக் கட்டாயப்டுத்த பங்கு கொண்டது.

4.    நோக்கம்

எழுத்தாளன், அழைக்கப்பட்டவர்கள் பிதாவாகிய தேவனில் அன்பு கூர்ந்தவர்கள், இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள் இவர்களுக்கு முக்கியமான கிறிஸ்தவனாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

5.    வேதாகமக் குறிப்புகள்: யூதாவின் கடிதம் எழுத்தாளரைப் பற்றி அறிந்து கொள்ள உதவுகிறது.

6.    விவாதத்திற்குரிய கேள்விகள்

6.1          யூதா யார்?
6.2          அவன் எப்படி இயேசு கிறிஸ்துவுக்கு சொந்தமாயிருந்தான்?
6.3          அந்த நிருபத்திற்கு அவனின் முக்கியமான தொடர்பு என்ன?
6.4          அவன் யாருக்காக எழுதினான்?
6.5          இயேசு கிறிஸ்து சம்பந்தமாகத் தற்காலப் பிரச்சினை என்ன?

மொழிபெயர்ப்பு
திருமதி மேபல் பட்டு,
பரி.யாக்கோபின் ஆலயம்.

Thursday, January 26, 2012

102. யூதாஸ்காரியோத்,


கேரியோத் என்னும் மனிதன்.

கிறிஸ்துவைக் காட்டிக்கொடுத்த ஒருவன்.
முக்கிய வசனங்கள்: “அப்பொழுது பன்னிருவரில் ஒருவனாகிய ஸ்காரியோத்தென்னும் மறுபேர் கொண்ட யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான்.  அவன் பிரதான ஆசாரியர்களிடத்திலும், சேனைத்தலைவர்களிடத்திலும் போய் அவரைக் காட்டிக் கொடுக்கும் வகையைக் குறித்து அவர்களோடே ஆலோசனை பண்ணினான்.(லூக். 22:3–4)”


சுருக்கமான விவரங்கள்

v  அப்போஸ்தலர்களில் மிகவும் அறிமுகமானவன்.
v  அவன் கிறிஸ்துவைக் காட்டிக் கொடுத்தான்.
v  அவன் பலவீனங்களில் ஒன்று பண ஆசை. (லூக். 12: 4 -5)
v  யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான்.
v  யூதாஸ் கிறிஸ்துவைக் காட்டிக்கொடுத்த பின்பு குற்ற உணர்வினால் பாதிக்கப்பட்டான்.
v  அவன் நான்று கொண்டு செத்தான்.

1.    அறிமுகம்அவன் விவரம்

அவன் மிகவும் அறிமுகமான அப்போஸ்தலர்களில் ஒருவன். அவன் பெயர் மற்றவர்களைக் காட்டிக்கொடுக்கும் யாராயிருந்தாலும் அவர்களுக்குப் பழமொழியாக எண்ணப்பட்டது. யூதா என்ற சொல்லுக்கு துதி என்று பொருள்.  யூதாஸ் என்பது யூதா என்ற எபிரேய சொல்லின் கிரேக்க முறை.  இது புதிய ஏற்பாட்டின் மிக அறிமுகமான பெயர். (மத். 1: 2-3; அப். 9:13)  பர்னபாஸின் தகப்பன் பெயர் யூதாஸ். நமக்குக் கலிலேயனாகிய யூதாசும் இருக்கிறான்.(அப். 5:37) நமக்கு யாக்கோபின் யூதா, நினைவுகூற ஒரு யாக்கோபின் குமாரன் ததேயு என்று அழைக்கப்பட்டவனும் இருக்கிறான். யோவான் 14.22ல் ஸ்காரியோத்தல்லாத யூதா என்று அறிமுகப்படுத்தப்பட்டான். இன்னும் கர்த்தரின் சகோதரனும் யாக்கோபின் சகோதரனும் இருந்தான். இயேசுவின் சகோதரர்கள் இயேசு உயிர்த்தெழுதல் வரைக்கும் அவரை விசுவாசிக்கவில்லை. (யோவான் 7:5)  நாசரேத்தில் வசிப்பவர்கள் கூற்றுப்படி தங்கள் அண்டை வீட்டுக்காரரின் குமாரனின் அதிசயமான போதனையை ஆச்சரியமாகக் கவனித்தார்கள்.(மத். 13:55) அவன் தன்னை இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரன், யாக்கோபின் சகோதரன் என்று விளக்கப்படுத்தி யூதா நிருபத்தை எழுதினான். (யூதா. 1)

     நமக்குத் தேவை அவன் பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவன்.  நமது கர்த்தரைக் காட்டிக் கொடுத்தவன். அவன் சீமோனின் குமாரனாகிய யூதாஸ் காரியோத் என்று அழைக்கப்பட்டான்.
(யோவான். 6:71) இந்த நடபடியின்படி அவனின் உண்மையான குணம் எப்போதும் அவன் தலைவருக்குத் தெரியும். (யோவான். 6:64) அவனுடைய பலவீனம் பெத்தானியாவில் அபிஷேகம் பண்ணப்பட்ட வேளையில் வெளியரங்கமானது. (யோவான். 12: 4 – 5) “ஏன் இந்த வீண் செலவு?” என்று சொல்லப்பட்டது பன்னிரண்டு பேரின் எண்ணம். ஆனால் இந்தக் கூற்று இந்தத் தைலத்தை விற்று, அந்தப் பணத்தைத் தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்பது யூதாஸிடமிருந்து வந்தது. யோவானிடமிருந்து நாம் கற்றுக் கொண்டபடி காட்டிக் கொடுத்தவனின் உண்மையான எண்ணம் என்ன என்பது தெளிவாகிறது. ஏனென்றால் அவன் திருடன். அவன் பணப்பையைச் சுமக்கிறவன். (அல்லது கொண்டு போகிறவன், விருப்பு வெறுப்பற்றவன்) என்ன உள்ளே வைத்திருக்கிறதோ அவைகள். (யோவான். 12: 4–6) குணத்தின் தன்மை வெளிப்பாட்டில் யூதாஸின் முடிவான துரோகம் போதுமானபடி விவரிக்கப்பட்டிருக்கிறது. பேராசை, நமது தேவனின் ஊழியத்தின் இயற்கைத் தன்மையில் ஏமாற்றம் இதில் இணைத்தல், யூதாஸின் மன சிந்தனையின் விருத்தி மதிப்புப் பெற, முடிவான ஒப்புக்கொடுத்தலில் உச்ச நிலையை அடைந்தான் என்று சுட்டிக்காட்டப்படும் வசனம்சாத்தான் அவனுக்குள் புகுந்தான்”. (யோவான். 13: 27) அது பிரதான ஆசாரியர்களோடு தொடர்புள்ளது. நமது கர்த்தரைக் காட்டிக்கொடுத்தது ஏன் யூதாஸ் இயேசுவைக் காட்டிக்கொடுத்தான். டி. க்யூனி யும், மற்றவர்களும் யூதாஸின் நோக்கம் தேசப்பற்று ஆவலுள்ளவனாய், அவன் எஜமான் மக்களிடம் முறையீடு செய்யத் தூண்டினார்கள் எனினும் மற்றவர்கள் காட்டிக்கொடுத்தலைத் தர்க்கிக்க எண்ணினார்கள். இயேசு உண்மையாகவே மேசியாவாக இருந்தால் அவரின் விடுதலைக்கு ஆவியின்  வல்லமையைக் கொண்டுவா. அவர் மேசியா இல்லையென்றால் அவருடைய அழிவு தகுதியானது. இந்தத் தத்துவங்கள் சுவிசேஷம் விவரிக்கும் வசனங்களுக்கு முரண்பாடாயிருந்தால் சொல்லப் போதுமானது. பெத்தானியாவில் நடந்த காட்சி திருப்புமுனையாக வந்து சேர்ந்தது. (மத். 26: 14) சாத்தான் தன் கருவியைக் கண்டுபிடித்தான். யூதாஸ் பிரதான ஆசாரியர்களிடம் சென்றான். (லூக். 22:3-4) அவன் 30 வெள்ளிக்காசை எதிர்பார்த்தான். (மத். 26:15) அவன் துரோகியாக நடிக்க ஒப்புக்கொண்டு, தன்னுடைய தகுந்த நேரத்திற்காகக் காத்திருந்தான். அவன் தன் எஜமானோடும், தன்னுடன் வேலை செய்பவர்களுடனும் முன்போலவே பெத்தானியா, எருசலேம் இவ்விரண்டு இடங்களுக்கும் போய் வந்தான். அவன் கெத்செமனேக்கும் அவர்களோடு போனான். (யோவான். 18:2) கடைசி பஸ்காவிலும் அவர்களோடிருந்தான். இரட்சகரால் அவன் கால்கள் கழுவப்பட்டன.  ரபீ நானோ என்று கேட்டவர்களோடும் இருந்தான். (மத். 26:25) அவன் எஜமானை ஒரு முத்தத்தினாலே காட்டிக் கொடுத்தபொழுது அவன் ஊழியம் முடிந்து போயிற்று.  ஒரு செயல், அவனால் மோசம் செய்யப்பட்டவரின் மனவேதனையை அதிகப்படுத்தினது. (லூக். 22:48)

     யூதாஸ் காட்டிக்கொடுத்த பிறகு குற்ற உணர்வால் பாதிக்கப்பட்டான்.  அவன் குற்ற உணர்வு மிகவும் உண்மையாய் இருந்ததால், அவன் செய்த பாவமான காரியங்களை இனிமேல் செய்யக்கூடாது என்று விண்ணப்பம் பண்ணினான். (மத். 27:3-4) இந்த மனத்திட்டத்தின்படி அவன் முப்பது வெள்ளிக்காசைத் திரும்ப எடுத்துக்கொண்டு போனபோது அவன் பரிகாசம் செய்யப்பட்டான். அவன் கேட்டின் மகன். (யோவான். 17:12) இந்த வாழ்க்கையில் அவனுக்கு மன்னிப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லை. அதினால் அவன் விலகிச் சென்று, புறப்பட்டுப்போய் நான்று கொண்டு செத்தான். (மத். 27:5)

     யூதாஸ் நான்று கொண்டு செத்தான் என்று சொல்லப்படுகிறது. இங்கே குயவனுடைய நிலம் இருந்தது.  அதன் பிறகு இரத்தப் பணத்தினால் வாங்கப்பட்டது.  அது இரத்த நிலம் என்று அழைக்கப்பட்டது.  அப்.1:18ன் படி யூதாஸ் தானே ஒரு நிலத்தை வாங்கி, தலைகீழாக விழுந்தான். அவன் வயிறு வெடித்து, குடல்களெல்லாம் சரிந்து போயிற்று.

2.    வல்லமையும் நிறைவேற்றுதலும்

a)    கலிலேயன் அல்லாத இவன் ஒருவன் மட்டும் 12 சீஷர்களில் ஒருவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான்.
b)    அவன் குழுவின் செலவுக்காக பணப்பை வைத்திருந்தான்.
c)    அவனுக்கு இயேசுவைக் காட்டிக்கொடுத்த பாவத்தை உணர்ந்து கொள்ள முடிந்தது.
d)    நாம் நம்பிக்கையில்லாமை, மரணத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.  அல்லது நாம் செய்த குற்றத்திற்காக வருந்துதல், மன்னிப்பு, நம்பிக்கை, நிலையான வாழ்வு இவைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
e)    இயேசுவின் இலவசமான பரிசுகளை ஏற்றுக்கொள்ள அவன் நமக்கு ஞாபகப்படுத்துகிறான்.  அல்லது காட்டிக்கொடுப்பவனாக இருப்பது, மோசமான நிலைமையை அனுபவிப்பது.

3.    பலவீனங்கள் தவறுகள்.

a)    அவன் பேராசை கொண்டவன்.(யோவான். 12:6)
b)    அவன் இயேசுவைக் காட்டிக்கொடுத்தான்.
c)    அவன் மன்னிப்புப் பெறுவதற்குப் பதிலாக தற்கொலை செய்து கொண்டான்.

4.    அவன் வாழ்க்கையின் மூலம் பாடங்கள்.

a)    பாவத்தின் திட்டம், எண்ணம் நம்மை இன்னும் அதிகமான பாவங்களைச் செய்ய சாத்தானால் தூண்டப்படும் நிலைக்குத் தள்ளப்படுவோம்.
b)    பாவத்தின் பலன் நாசம் விளைவிக்கும். சிறு பொய்கள், சிறு தவறுகள் கூட அபாயகரமான முடிவைக் கொண்டு வரும்.
c)    தேவனின் திட்டம், நோக்கம் மோசமாக நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளில் கூட வேலை செய்யும்.
d)    இயேசுவைக் காட்டிக்கொடுத்தது அவசியமானது. ஆனால் யூதாஸ் அதைக் கொண்டு வர தன் சொந்த முயற்சியை உபயோகித்தான்.
e)    யூதாஸ் மனவருத்தப்பட்டது முக்கியமானது. (லூக். 15:7)

5.    வேதாகமக் குறிப்புகள்: யூதாஸின் விவரம் சுவிசேஷங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.  அவன் அப்:1:18-19ல் குறிப்பிடப்பட்டிருக்கிறான்.

6.    விவாதிக்க வேண்டிய கேள்விகள்.
6.1          அவன் வாழ்க்கையில் உள்ள சூழ்நிலையை விவாதித்தல்.
6.2          அவன் ஏன் கிறிஸ்துவைக் காட்டிக்கொடுத்தான்?
6.3          அவன் எப்படி மரணமடைந்தான்?
6.4          அவன் பெத்தானியாவில் மரியாளின் தாராள குணத்தைப் பார்த்து என்ன கூறினான்?
6.5          அவனுடைய சக்திகளும் பலவீனங்களும் எவைகள்?

மொழிபெயர்ப்பு
திருமதி மேபல் பட்டு,
பரி.யாக்கோபின் ஆலயம்.