Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Tuesday, September 27, 2011

119. சீமோன் பேதுரு


119 அப்போஸ்தலனும் இரத்தசாட்சியுமாகிய
சீமோன் பேதுரு


கரு வசனம்:
மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. மத்தேயு 16:18

சுருக்கத்திரட்டு
·       மீன் பிடிக்கிறவனாகிய சீமோன் பேதுருஎன பெயர் மாற்றம் பெற்றான்.
·       தன் எஜமானைச் சுற்றி மிகவும் நெருக்கமாக இருந்தவர்களில் இவனும் ஒருவன்.
·       பேதுரு கிறிஸ்துவை அறிந்திருந்ததை மறுதலித்தான்.
·       இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப்பின், சபைக்கு தலைமையேற்று நடத்துமாறு  அவரது  அழைப்பைப்பெற்றவன்.
·       பெந்தைகொஸ்தே என்னும் நாளில் இவன் பிரசங்கித்த போது 3000 போ; இரட்சிக்கப் பட்டனர். 


1. அறிமுக உரை - இவனது கதை

1.1 முன் வரலாறு
எபிரேய மொழியிலே தெளிவாக சொல்லப்படுகிற சீமோன் என்ற பெயர் தான் பேதுருவின் உண்மையான பெயர். (அப்போஸ்தலர் 15:14, 2பேதுரு1:1). இவனுடைய தகப்பனார் பெயர் யோனா (மத்தேயு 16:17, யோவான் 21:15). இவன் திருமணமானவன் (மாற்கு1:30) இவனது மனைவியும் இவனது மிஷனரி ஊழிய நாட்களில், இவனோடு இணைந்திருந்தாள் (1கொரிந்தியர் 9:5) இவன் பெத்சாயிதா ஊரான் என்று நான்காம் சுவிசேஷம் கூறுகிறது (யோவான் 1:44). ஆனால் இவனுக்கு கலிலேயாவிலுள்ள கப்பர்நகூமில் வேறு ஒரு வீடு இருந்ததாக  மாற்கு 1:21ம் வசனம் கூறுகிறது. இந்த இரண்டு இடங்களும் ஏhpயின் கரையோரமாகவே இருந்தது. இவன் இங்கு மீன் பிடிக்கிறவனாக காணப்பட்டான். இந்த இரண்டு இடங்களிலேயும் புறமதஸ்தர் அநேகர் வாழ்ந்தபடியால் அவர்களோடு அதிக தொடர்பு இவனுக்கு இருந்தது. கிரேக்க மொழியில் இவனுடைய சகோதரன் பெயர் அந்திரேயா என்பதாகும். இவன் அராமிக் மொழியை வலுவான வட நாட்டு உச்சரிப்புடன் பேசுகிறவனாகவும் (மாற்கு14:70) தெய்வ பக்தியுடையவனாகவும் காணப்பட்டான் (அப்போஸ்தலர்10:14). ஆலோசனை சங்கத்தில் நிறுத்தப்பட்ட போது பவுலைப் போன்று சட்ட அறிவு இல்லாத போதும் மிகவும் ஞானமாய் பேசி அலோசனை சங்கத்தினரால் அனுப்பிவிடப்படுகிறான்  (அப்போஸ்தலர் 4:14). யோவான் ஸ்நானகனுடைய நடவடிக்கைகள் இவன் உள்ளத்தில்  தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. (அப்போஸ்தலர் 1:22). இவனுடைய சகோதரன் அந்திரேயா, யோவான் ஸ்நானகனின் சீஷனாயிருந்தான் (யோவான்1:39)

1.2 இவனது அழைப்பு
பேதுரு இவனுடைய சகோதரன் அந்திரேயாவால் இயேசுவிடம் அறிமுகப்படுத்தப்பட்டான் (யோவான் 1:41). இதனிமித்தம் பின்னர் இயேசு இவனை கடலோரத்தில் கண்டு அழைத்தபோது அதிக புரிந்துணர்வோடு உடனே பின்சென்றான் (மாற்கு1:16). இவர்களுடைய அழைப்பைத் தொடர்ந்து  மற்ற சீஷர்களும் இயேசுவின் அழைப்பைப் பெற்றனர் (மாற்கு3:16).

புதிய பெர் சீமோன் பேதுரு, கேபா(அராமிக் மொழி) என்னும்  புதிய பட்டப் பெயரைப் பெற்றான். அராமிக் மொழியில் கேபா என்றால் கல் அல்லது பாறை என்று பொருள் (1கொரிந்தியர் 1:12,15:5, கலாத்தியர் 2:9). வழக்கமாக புதிய ஏற்பாட்டில் காணப்படுகிற பத்ரோஸ் என்னும் பெயர் கிரேக்க பதம் ஆகும். இயேசு தாமே இந்த பெயரை பேதுருவுக்கு வழங்கினார்.


1.3 இயேசுவின் ஊழியத்தில் பேதுரு
சீஷர்களிலே முதலாவது அழைப்பைப் பெற்றவன் இந்த பேதுரு. சீஷர்களுடைய பெயர் பட்டியலில் இவன் எப்பொழுதும் முதலில் நிற்பவன். இயேசுவுக்கு மிகவும் நெருக்கமான 3 சீஷர்களில் இவனும் ஒருவன் (மாற்கு5:37,9:2). இவனுடைய உணர்ச்சிப்பூர்வமான பக்தி அவ்வப்போது சித்தரிக்கப்படுவதை நாம் காணமுடிகிறது (மத்தேயு 14:28,மாற்கு 14:29, லூக்கா5:8). இவன் பன்னிருவருக்கும் பிரதிநிதியாக செயல்பட்டான் (மத்தேயு15:15). பேதுரு தன்னை மறுதலிப்பான் என இயேசு கூறிய போது அதை ஏற்க மறுத்தான். அவனுடைய இராஜ பக்தியை குறித்து தாக்கிப் பேசுகையில் எதிர்ப்புரைக்கிறதை இங்கு காணலாம். ஆனால் பின்னர் அவனே இயேசுவை மறுதலித்தான் என்பதையும் காணமுடிகிறது. பிலிப்பி, செசரியா பட்டணங்களில் கடந்து போகையில் இயேசு கேட்ட ஒரு கேள்விக்கு (மாற்கு 8:27-29) பதிலளிக்கையில் இவன் முழு குழுவிற்கும் பிரதிநிதியாக செயல்பட்டு பதிலளிக்கிறான். இதினால் இதனைத் தொடர்ந்த கடிந்து கொள்ளுதலுக்கும் அனைவரும் பங்காளர்கள் என தோன்றுகிறது. (மாற்கு 8:33)

பேதுருவுக்கு இயேசுவின் மறுரூபமாகுதலை காணும் ஒரு வாய்ப்பும் அதற்கு சாட்சியாகும் ஒரு சந்தர்ப்பமும் கிடைத்தது (மாற்கு 9:1). பேதுரு இயேசுவை மறுதலித்தானானாலும் அவனுடைய இராஜ பக்தியையும் வெளிப்படுத்துகிறதை மாற்கு 14:66-72 வசனங்களில் காணலாம். பேதுரு உயிர்த்தெழுந்த இயேசுவை முகமுகமாய் காணும் வாய்ப்பைப் பெற்றான் (லூக்கா24:34, 1கொரிந்தியர்15:5).
 

ஈ) பேதுருவின் தனி பொறுப்பு 

புதிய எற்பாட்டில் அதிகமாக விவாதிக்கப்படுகிற பகுதி மத்தேயு 16. இயேசு கிறிஸ்து தாமே பேதுருவுக்கு பாறை என பொறுப்பு உரிமை அளிக்கிறார். பேதுருவின் நம்பிக்கையும், இயேசுவே இரட்சகர் என இவன் ஒப்புக்கொண்டதும் ஆகிய இவை இவனது ஊழியத்தின் முக்கிய பகுதி ஆகும். வரலாற்றுப் பூர்வமாக பாறை என்பது கிறிஸ்துவின் மேல் வைக்கப்பட்ட நம்பிக்கை மாத்திரமல்ல கிறிஸ்துவைக் குறித்த அப்போஸ்தலர்களின் அறிக்கையும் கூட. வேறு ஒரு இடத்தில் இவன் சபையின் அஸ்திபாரம் என்று  கூறப்பட்டுள்ளது (எபேசியர் 2:20). தெர்துல்லியன் போன்ற வேதாகம வல்லுனர்கள் பேதுரு சபையின் அஸ்திபாரம் எனக் ஒப்புக்கொள்ளுகின்றனர். ஆனால் குல்மான் என்பவர் இந்தக் கருத்தை மறுக்கிறார்.


உ) பேதுரு ஒரு அப்போஸ்தல சபை
பெந்தேகொஸ்தே என்ற நாளுக்கு முன்னர் வரை சமூகத்தில் முன்னணியில் இருந்தவன்(அப்போஸ்தலர் 1:15) பின்னர் இவன் முதன்மைப் போதகனானான் (அப்2:14,3:12). பேதுரு தெய்வீக சக்தியினால் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தான் (அப்5:15). இவன் புறஜாதிகளின் ஊழியத்தில் பங்குள்ள முதல் நபராக காணப்பட்டான் (10:1). பின்னர் ஒரு கட்டத்தில் பவுல் இந்த புறஜாதிகளின் ஊழியத்தைப் பொறுப்பெடுத்துக் கொண்டார். அப்போஸ்தலனாகிய பவுல் பேதுருவோடு உண்மைக்காக எதிர்த்து நின்றார்; (கலாத்தியர் 2:11). யூதரல்லாதோரை தவிர்க்காமல் இருக்குமாறும்  அனைவரையும் தேவனுடைய குடும்பத்தில் ஏற்குமாறும் வேண்டிக்கொண்டார். பேதுரு ஒரு போலியான வாழ்க்கை வாழ்ந்து வந்தான், ஆனால் பவுல் இவனை நேசித்ததினால் அவைகளை நேரடியாக அவனுக்கு எடுத்துரைத்தார்.


ஊ) பேதுருவின் முதலாம் நிருபம்
இந்த கடிதமானது இந்த அப்போஸ்தலனுடைய பெயரியிலேயே அனுப்பப்பட்டது. பேதுருவின் இரண்டு நிரூபங்களும் பவுலின் இறை சித்தாந்தத்தைத் தழுவியது என்று பலர் கருதுகின்றனர்.

எ) பேதுரு ரோமாபுரியில் நீரோ அரசனின் காலத்தில் (கி.பி 6ல்) இரத்த சாட்சியாக மரித்ததாக நம்பப்படுகிறது. இதை குறித்து யோவான் 21:18-19ல் காணலாம்.

முடிவுரை

பேதுருவின் வாழ்க்கையில் இயேசு நுழைந்த போது, மீன் பிடிக்கிறவனாய் இருந்தவன் புதிய நோக்கத்தோடும் புதிய முன்னுரிமையோடும் ஒரு புதிய மனிதனாக மாறினான். இன்னும் இவன் ஒரு நிறைவான மனிதனாக மாறவில்லை, அவன் சீமோன் பேதுருவாக இருப்பதை இன்னும் மாற்றிக் கொள்ளவில்லை. பாறை என்று அவனது பெயர் காணப்பட்டாலும் அவன் பல நேரங்களில் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. கிறிஸ்து இவனை தம்முடைய பணியில் பயன்படுத்தினாh;. இயேசு தம்முடைய சீடர்களை தெரிந்தெடுக்கும்போது போலியானவர்களைத் தேடாமல்  உண்மையானவர்களையே தேடினார். அவர் தேர்தெடுத்தவர்கள் அவருடைய அன்பினால் மாறக்கூடியவர்களாயிருந்தனர். பின்னர் அவர் அவர்களை வெளியே அனுப்பி மற்றவர்களையும் (குறைவுள்ளவர்களாயினும்) தாம் ஏற்றுக்கொள்வதாக அறிவிக்கும் படிக்கு தொடர்பு கொள்ள அனுப்புகிறார். இயேசு பேதுரு அவ்வாறு குறைவுள்ளவன் என்றபோதிலும் அவனையும் ஏற்றுக் கொண்டார். பேதுரு தேவனுக்காக பெரிய காரியங்களைச் செய்ய புறப்பட்டான்.


2. பெலனும் பெலவீனமும் 
2:1 இயேசுவின் சீடர்களில் அங்கிகரிக்கப்பட்ட ஒரு தலைவனாகவும், மிகவும் நெருங்கிய வளையத்தில் மூவரில் ஒருவனாகவும் காணப்பட்டான.

2:2 பெந்கொஸ்தே காலத்திலும் அதற்குப் பின்னரும் சுவிசேஷத்தை அறிவபிப்பதலில் முன்னோடியாக நின்றான்.

2:3 மாற்குவிற்கு, மாற்கு என்கிற சுவிசேஷத்தை எழுத பேதுரு பல தகவல்களை வழங்கியதாக கூறப்படுகிறது. (1பேதுரு5:13)

2:4 1பேதுரு, 2பேதுரு ஆகிய நிறுபங்களை எழுதினவன்.



3. பெலவீனமும் தவறுகளும்

3:1 அடிக்கடி சிந்திக்காமல் பேசுபவன். அவசரமாக மற்றும் திடீர் உணர்ச்சி    வசப்படுபவன்.

3:2 இயேசுவின் விசாரனையின் போது, அவரைத் தெரிந்திருந்தும் தெரியாது என  
   கூறி 3 முறை மறுதலித்தான்.

3:3 புறஜாதி கிறிஸ்தவர்களைச் சமமாக நடத்துவதில் அதிக சிரமத்தை    எதிர்கொண்டான்.


4. இவனது வாழ்க்கையிலிருந்து பாடங்கள்

4:1 நம்பிக்கை மற்றும் புர்ந்துணர்வு இவைகளின் ஆதரவு இல்லாமல்  உற்சாகமானது தோல்வியில் முடியும்.

4:2 நமது நம்பிக்கை கடவுளுடைய நம்பிக்கைக்கு ஒரு போதும் ஈடு கொடுக்க முடியாது.

4:3 பின்தொடர முடியாத ஒரு சீடனாக இருப்பதைக் காட்டிலும் பின்தொடர்ந்தும்    தோல்வியைத் தழுவுகிற சீடனே மேல்.

5. வேதாகமக் குறிப்புக்கள்

பேதுருவின் கதையானது சுவிசேஷங்களிலும், அப்போஸ்தலர் புத்தகத்திலும்  மற்றும் கலா.1:18,2:7-14, 1கொரி1:12,9:5,15:5லும் இவன் எழுதின 1, 2 பேதுரு நிருபங்களிலும் காணலாம்.


6. கலந்தாலோசனைக்கான கேள்விகள்

6:1 தேவன் சீமோனை பேதுருவாக மாற்றியது ஏன்?
6:2 இவன் ஏன் கிறிஸ்துவை மறுதலித்தான்?
6:3 இயேசுவின் உயிர்தெழுதலுக்குப் பின் இவன் எப்படிப்பட்ட மாற்றத்தைப் பெற்றான்?
6:4 பெந்தெகோஸ்தே நாளில் இவன் செய்த ஊழியத்தை குறித்து கருத்துரை.
6:5 இவனுடைய பெலவீனங்கள் என்ன?
6:6 இவனது வாழ்க்கையிலிருந்து நாம் கற்கும் பாடங்கள் யாவை?


மொழிபெயர்ப்பு
ஜான் ஆரோக்கியசாமி,
பரி.பர்னபாவின் ஆலயம், கிள்ளான்

Saturday, September 24, 2011

125. சக்கரியா

 
ஸ்தாபக அருளப்பர் / ஸ்தாபக அருளப்பரின் தந்தை

 

 

 
முக்கிய வசனங்கள்
6 அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின் படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள். 7 எலிசபெத்து மலடியாயிருந்தபடியினால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; இருவரும் வயதுசென்றவர்களாயும் இருந்தார்கள். (லூக்கா 1:6-7)

 

 

 
முக்கிய வசனங்கள்:
  • இவர் ஸ்தாபக அருளப்பரின் தந்தை
  • இவர் கடமை தவறாதவர்.
  • குடும்ப வழக்கப்படி இவருக்கு அருளப்பர் என்று பெயர் சூட்டினார்.
  • இவருடைய மனைவி எலிசபெத் ஒரு மலடி. கடவுள் இவர்கள் வாழ்க்கையில் ஒரு மகனைத் தந்து புதுமை புரிந்தார். அவர் ஒரு போதகராக இரந்தார்.
  • இவர் குருத்துவ பணிகளைக் கடமை தவறாமல் செய்து வந்தார்.

 

 

 
1. முன்னுரை

 
சகரியா என்றால் இறைவன். இவர் குருகுலத்தைச் சார்ந்தவர். அபியாவைச் சேர்ந்தவர். இவர் திருமுழுக்கு அருளப்பரின் (ஸ்நாக அருளப்பர்) தந்தை. அவர் தம் குருக்களின் பணியை (கடமையை) செய்து கொண்டிருக்கையில் உனக்கு ஒரு மகன் பிறப்பான் என்று கேட்டவுடன் அவர் மௌனமானார். தன் மகன் ஜான் என்று உச்சரித்தவுடன் வாய் அடைப்பு நீங்கியது. சகரியா பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டார். அவர் ‘பெனடிக்குஸ்’ என்ற பாடலைப் பாடினார் (லூக்கா 1)

  
சக்கரியாவைப் பற்றி சற்று தெரிந்து கொள்வோம். அவர் உலகில் ஜனனம் செய்வதற்கு முன்னே கடவுள் அவரை அறிந்நதிருந்தார். அவர் தம் துணைவி எலிசபெத். அவர் ஆலயத்தில் தூபம் காட்டி இறைவனுக்குப் பணி செய்து வந்தார். அவர்கள் இரவரும் இறைவனின் முன்னிலையில் பரிசத்தவானாக வாழ்ந்தவர்.

 

அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லாதிருந்தது யூதர்கள் மத்தியில் பெரும் குறையாக இருந்தது. இறை அருள் அவர்களுக்கு இல்லை என மக்கள் நினைத்தனர். காரணம் இருவரும் வயது முதிர்ந்தவர்களாக இருந்தனர். அதனால் கடவுளிடம் குழந்தை வரம் கேட்பதையும் விட்டுவிட்டார்கள்.


 
இம்முறை ஆலயத்தில் தூபம் காட்டும் முறை சக்கரியாவுக்குக் கிடைத்தது. உண்டில் குழுக்கி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் புனித இடத்தில் தூபம் கட்டுதல் திடீரென்று ஒரு எதிர்பாராத நிகழ்வு நடைபெற்ற்றது. அவர் முன் ஒரு வானதுதர் தோன்றி நம்பமுடியாத செய்தியைக் கூறினார். அதை அவரால் நம்பமுடியவில்லை. அது நம்பத்தக்கதாக இல்லை. மிகவும் ஆச்சரியமாகவும் திகைப்பாகவும் இருந்த்து. அதனால் சக்கரியாவானதூதருக்குப் பதில் சொல்லமுடியவில்லை. அதை அவர் சந்தேக்க் கண்ணோடு பார்த்தார். அவர் நிலைமைக்கு ஏற்றதாக இல்லை. அவர் தகப்பனாகும் தகுதியில் இல்லை. அவர் மிக முதுமை வயதில் இருந்தார். அவர் நம்ப மறுத்த காரணத்தினால் இறை தூதன் பேசும் திறனை எடுத்துவிட்டார். இறை துதன் சொன்ன நிகழ்வு நடைபெறும் வரை அவர் வாய் பேசும் திறனை இழந்து விட்டார்.

 
இதுவே, கடைசியாக மக்கள் மத்தியில் தோன்றியது. பல புனிதர்கள் போல் அவரும் அந்த நிகழ்விலிருந்து மறந்து போனார். அவர் ஒரு தலைவராக காட்சி தந்தார். கடவுள் மீது அவநம்பிக்கையும், கீழ்ப்டியாமையும் .???? இதிலிருந்து நாம் கற்றுக் கொள்வது கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை அனைத்தும் அவரால் நடைபெறும் என்ற நம்பிக்கை.

ஒரு சில நேரத்தில் இறைமக்கள் கூட இறைவன் மீது நம்பிக்கை இழந்து தன் சொந்த அனுபவத்தின் மீத மிகுந்த நம்பிக்கை வைத்து செயல்படுகின்றனர். இறைவனின் வாக்குறுதி மீது நம்பிக்கை இழந்து அது நடைபெறாது என்று நம்புகின்றனர். கடவுளின் ஆற்றலை மீட்புத் திட்டத்தில் பாருங்கள். குறுகிய காரியங்களில் அல்ல; பெருந் திட்டங்களில். இயேசுவின் மீது முழு நம்பிக்கை அவசியம். அவரால் மீட்படைவோம். அவரை நம் கடவுள்>>>>

 

 

 
2. செம்மைப் படுத்துதலும் முடிவும்
2.1. அவர் ஒரு நீதிமான்
2.2. இறை ஊழியம் செய்பவர் (கடவுளுக்கும் மனிதருக்கும் உறவு பாலம்)
2.3. இறை தூதனால் நேரடியாக உரையாடியவர்களில் ஒருவர்.
2.4. வயது முதிர்ந்தவராக இருந்தாலும் இறைவனின் துணையோது யோவானுக்குத் தந்தையானார்.

  

 
3. இயலாமையும் தவறும்
3.1. ஒரு சில விநாடி இறை தூதன் வார்த்தையில் சந்தேகம் ஏற்பட்டாலும், தன் முதிர்ந்த வயதே காரணம்.
3.2. தாவிதும் கோலியத்தும் இறைவனின் வல்லமையில் நம்பிக்கை.


 
4. அவரின் வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை
4.1. உடல் பலம் கடவுளின் செயலைக் கட்டுப்படுத்தாது. அவர் எல்லாம் செய்யக் கூடிய வல்லமை படைத்தவர்.
4.2. நாம் எதிர்பார்க்காத விதத்தில் அவர் செய்து முடிப்பவர்.
4.3. அவருடைய வேண்டுதல் நிறைவேறும்போது, கடவுள் தன் மன்றாட்டைக் கேட்கப்படும்போது அவர் தன் சொந்த முறையில், நிறைவேறும் நேரத்தில் அனைத்தும் நிறைவேறும். ஒரு சில நேரம் நம்ப முடியாத விதத்தில் சூழ்நிலையில் செயலாற்றுவார். சக்கரியாவின் மனைவி ஒரு மலடி. இறை வாக்கினர் உரைத்தபடி அவர் அனைத்தையும் நிறைவேற்றினார்.

 
நம்முடைய ஜெபங்கள் கேட்கப்பட வேண்டுமானால் இறைவன் அனைத்தையும் செய்ய வல்லவர் என்று நினைத்து உரிய காலத்திலும் நேரத்திலும் அனைத்தும் நிறைவேறும்.

  
5. வேதத்தின் மேற்கோள்
சக்கரியாவின் கதை லூக்கா 1ல் காணப்படுகிற்து.

 

 

 
6. விவாத்த்திற்கான வினாக்கள்
1. சக்கரியாவைப் பற்றி உனக்கு என்ன தெரியும்?
2. இறை தூதன் என்ன வாக்குறுதியைத் தந்தார்?
3. அவன் ஏன் உடனடியாக இறைதூதனின் வார்த்தையை நம்பவில்லை.
4. இறைவனால் அனைத்தும் முடியும் என்று அடிப்படையின் உரையாடு
5. அவரின் வரலாற்றிறலிருந்து நாம் என்ன கற்றுக் கொள்கிறோம்?

 

 

 
Biblografi not yet done!

 

 

 

 

 
மொழிபெயர்ப்பு:

 
எஸ்.அல்வி, தைப்பிங்

 
(கத்தோலிக்க திருச்சபை)

 

 

 
குறிப்பு: எங்கள் ஆலயத்தில் பாடகல் ஜோலி ஆபிரகாம் பாடல் கச்சேரியை நடத்திக் கொண்டிருக்கும் போது இதனை எனது மடிக் கணினியின் மூலம் பதிவேற்றம் செய்கிறேன்.

 

123. தீத்து




பரி.பவுலால் மனமாற்றம் அடைந்தவர்; அவரின் பயணத் தோழரும் ஆவார்



முக்கிய வசனம்:
Titus 1:5 நீ குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, பட்டணங்கள்தோறும் மூப்பரை ஏற்படுத்தும்படிக்கும், உன்னைக் கிரேத்தாதீவிலே விட்டுவந்தேனே.



சுருக்கம்:

• தீத்து ஒரு ரோமாபுரி நம்பிக்கையாளர்
 • தீத்து புனித சின்னப்பரால் போதனை செய்து நன்னெறிப் படுத்தப்பட்டார். ஒரு முன்னோடு தலைவராக நின்று எருசலேம் ஆலயங்கள், உயிரோட்டமுள்ள இயேசு கிறிஸ்து செய்ததுபோல் பிற இனத்தாரிடம் செய்து காட்டினார்.
• தீமத்தேயு போல் புனித சின்னப்பருக்கு மிக நம்பிக்கையுள்ள பயண தோழராக செயல்பட்டார்.
• இறதியில் சின்னப்பரின் விசேஷ தூதுவராக மாற்றினார்.
• கிறிஸ்தாவிலுள்ள ஆலயங்களுக்கு மேற்பார்வையாளர் ஆனார்.



1. முன்னுரை:

புற இனத்தாரைச் சேர்த்து தீத்துவைப் புனித சின்னப்பர் நல்ல படிப்பினையில் செம்மைப்படுத்தினார். மிக சிறந்த தலைவராக ஜொலித்தார். அதேபோல் தீமத்தேயுவும் சின்னப்பரின் நம்பிக்கைக்குறிய உடன் செல்லும் நெருங்கிய நண்பரானார். அவர் கிறிஸ்தாவிலுள்ள ஆலயங்களுக்கு மேற்பார்வையாளராக நியமித்தார். சின்னப்பர் தீத்துவை ஒரு முதிர்ந்த கிறிஸ்வராக, பொறுப்புள்ள தலைவராக தயார்படத்தினார். புனித சின்னப்பர் தன் திருமுகத்தின் கிறிஸ்தவர்களின் நற்செயல்கள் அனைவரின் நல்ல செயல்களைக் கூறியுள்ளார். அவற்றை வாழ்த்து மடல் மூலம் வெளிப்படுத்தினார்.


2. அமைப்பு

சின்னப்பர் தீத்துவைக் கிறிறஸ்தாவுக்கு அனுப்பிய நோக்கம் அங்குள்ள ஆலயங்கள், மக்கள் அனைவரையும் மேற்பார்வை செய்யவும், தீத்துவின் மடல் ஏற்றக்குறைய கிபி.64ல் எழுதப்பட்டது. மடலின் நோக்கம் தீத்து தன் கடமையைச் செம்மையாக செய்து கிறித்தாவில் உள்ள ஆலயங்களின் மக்களை மேற்பார்வை செய்வதாகும்.



3. சின்னப்பரின் கடுமையான மடலைப் பெற்றவர்
• ஆலயத் தலைவர்களை நியமித்தல்.
• சின்னப்பர் ஆலய ஒழுங்குமுறையைச் சீர்செய்தல். அங்கு வசிப்பவர்கள் கிரேத்த தீவினர்; ஓயாப் பொய்யர்; கொடிய காட்டுப் பிராணிகள்; பெருந் தீனிச் சோம்பேறிறகள்.
• போதனைக்கு ஏற்ப வாழ்ந்து காட்டுதல் (2:1-15)
• மக்கள் மத்தியில் நல்வாழ்க்கை வாழ்தல்.







முக்கிய கருப்பொருள்

பொருள் விளக்கம் முக்கியத்துவம்

பரிசுத்த வாழ்வு நல்ல முறையில் வாழ்ந்தால் மட்டும் நாம் மீட்பைப் பெற முடியாது. விசுவாசத்தினால் மட்டுமே மீட்படைய முடியும். வேதாகமம் மனிதனை மாற்றமடையச் செய்யும். நம்முடைய நற்செயலால் அது ஆகாது. வேதாகமத்தின் வல்லமையால் நம் வாழ்க்கைக நன்னெறிப் படுத்தப்படுகிறது. நல்ல செயலும் அவசியம்.

செயல் முறை தீத்துவின் பொறுப்பு தலைவர்களை நியமிப்பது ஆகும். சரியான குழுக்களை ஏற்றபடுத்துவதும் ஆகும். சின்னப்பர் தலைவர்களுக்கான சில தகுதிகளைத் தேவை, செம்மையாகச் செயல்பட ஒருவர் மனக்கட்டுப்பாடு வேத நெறிமுறைகள் தகுதிகள் பெற்றிருத்தல். நீ யார் என்பது முக்கியம், நீ என்ன செய்ய தகுதிப் பெற்றவர்?

முறையான வாழ்வு திருச்சபையின் போதனை அனைவருக்கும் பொருத்தமாக இருத்தல். முதிர்ந்த கிறிஸ்தவர்கள் இளையோருக்கு முன்திரியாக இருத்தல் அனைத்து வயதினரும் தெரிந்து கொள்ள வேண்டி பாடங்களும் செயல்பட வேண்டிய கடமைகளும் உண்டு. முறையான வாழ்வுக்கு முறையான உறவும் ஒன்றை ஒன்று பின் தொடர்ந்து செல்லும். பிற மதத்தைச் சார்ந்தவர்களோடு நாம் அனுக்கமாக செல்வதே நம் விசுவாசம்.

பிரஜா உரிமை கிறிஸ்தவர்கள் நல்ல குடிமகனாக மக்கள் மத்தியில் இருத்தல். நம்பிக்கை உள்ளவர்கள் அரசாங்கத்திற்குக் கட்டுப்ப்பட்டு, உண்மையுள்ள பணியாளனாக இருத்தல். நீ எவ்வாறு உன் பொது உரிமையை சாட்சியாக உலகிற்றகுக் காண்பிக்கிறாய்? உன் பொது வாழ்வு கிறிஸ்துவை மையமாகக் கொண்டு கிறிஸ்துவின் பிரதிபலிப்பை வெளிப்படுத்த வேண்டும்.





1. முன்னுரை

யூதர் – முடியப்பர் – முடி. இதுதான் முதல் முறையாக விசுவாசிகளுக்குப் பணிவிடை செய்யத் துணை தொண்டர்களை ஏற்படுத்தினார்கள். இவர் தலை சிறந்த போதகராகவும் வேதசாட்சியாளராகவும் திகழ்ந்தார்.

உலகம் முழுவதும் வேதாகமம் பரவத் தொடங்கியது. ஒரு வேதாகமத்திற்காக தன் உயிரைப் பலியாகக் கொடுத்தார். எது எப்படி இருப்பினும் வேதாகமத்திற்காக உயிர் வழ வேண்டியதாயிற்று.



2. அமைத்தல்

புனித சின்னபர் தீத்துவைக் கிரேத்தா எனும் ஊருக்கு அனுப்பி அங்குள்ள ஆலயங்களைச் சீராக்க அவற்றைக் கண்காணிக்குமாறு பணித்தார். அவர் எழுதிய மடலில் என்னென்ன செய்ய வேண்டுமென தெளிவாக விளக்கியுள்ளார். நான் செய்து முடிக்காத காரியங்களையும் ஏற்றபடுத்தும் பணியையும் கூறி இருந்ததாக இந்த மடல் தீமோத்திக்கு எழுதிய மடலுக்கு ஒப்பாகும். இந்த மடல் கி.பி.64ல் எபதியது. காரணம் தீத்துவின் கடமைகள் அங்குள்ள ஆலயங்களை மேற்பார்வை செய்வதாகும்.



3. மடலைப் பெறுபவர் மிக சக்தி வாய்ந்த மடல் சின்னப்பர்


• தலைமைத்துவம் ஆலயத்தில் (1:1-16) ஒழுங்குமுறை படுத்திச் சரியான முறையில் வாழ பணித்தார். அந்தத் தீவில் உள்ளவர்கள் ஓயாப் பொய்யர்; காட்டு மிராண்ட்டிகள், பெருந் தீனிச் சோம்பேறிகள்.
• முறையான வாழ்க்கை
• மக்கள் மத்தியில் முறையாக வாழ்தல்.



4. வேதாகமத்தின் மேற்கோள்கள்

தீத்துவும் திருமுகத்தின் மூலம் அறிந்து கெள்ளலாம்.





5. பகிர்வுக்கான கேள்விகள்

• புனித சின்னப்பர் பயிற்சி தந்த இரண்டு தலைவர்களின் பெயர்களைக் கூறு.
• ஏன் சின்னப்பர் தீத்துவையும் பர்னபாவையும் கூட்டிக்கொண்டு எருசலேமுக்குப் போனார்?
• அவர் ஏன் விருத்தசேதனம் செய்யவில்லை?
• அவர் தீமத்தேயுவைவிட மிக வலுவானவர் என நினைக்கிறாயா?
• எவ்வாறு தீத்து சின்னப்பருக்கு மக்கதோனியாவில் உதவினார்?


மொழிபெயர்ப்பு:
எஸ்.அல்பி, தைப்பிங்
(கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்தவர்)





குறிப்பு: எங்கள் ஆலயத்தில் பாடகர் ஜோலி ஆபிரகாம் பாடல் கச்சேரியை நடத்திக் கொண்டிருக்கும் போது இதனை எனது மடிக் கணினியின் மூலம் பதிவேற்றம் செய்கிறேன்.

Saturday, September 17, 2011

118 சீலாஸ்


(பவுலின் ஊழியத்தில் கூடச்சென்றவன்)

 

 

 
கரு வசனம்

25 நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்காகத் தங்கள் பிராணணையும் ஒப்புக்கொடுக்கத் துணிந்தவர்களும் எங்களுக்குப் பிரியமானவர்களுமாயிருக்கிற பர்னபா பவுல் என்பவர்களோடுங்கூட.

26 எங்களால் தெரிந்துகொள்ளப்பட்ட சில மனுஷரை உங்களிடத்திற்கு அனுப்புகிறது ஒருமனப்பட்டுக் கூடின எங்களுக்கு நலமாகக் கண்டது.

27 அந்தபடியே யூதாவையும் சீலாவையும் அனுப்பியிருக்கிறோம். அவர்களும் இவைகளை வாய்மொழியாக உங்களுக்கு அறிவிப்பார்கள். (அப்போ 15: 25-27)

 

 

 
சுருக்கத்திரட்டு
  • யூதாவும் சீலாவும், பவுலின் ஊழியத்திற்குத் துணையாக இருந்தவர்கள். ரோம மொழியில் சீலாவின் பெயர்; சில்வான்ஸ் என்பதாகும்.
  • ஆற்றல் வாய்ந்த சமய ஏற்பாளன். பவுலோடு இணைந்து செய்த இவனுடைய ஊழியங்கள் முடிந்த பின்னரும் தொடர்ந்து ஊழியம் செய்தவன்.
  • பவுலுக்கும், பேதுருவுக்கும் எழுதும் செயலாளனாக சீலா பணியாற்றினான்.
  • சீலா, பவுல், பர்னபாஸ், மற்றும் தீமொத்தேயு ஆகிய இவர்கள் சம காலத்தவர்கள்.


 
1. அறிமுகம் - இவனது கதை
ஆரம்ப கால திருச்சபையில் முக்கியமான ஒரு அங்கத்தினராக திகழ்ந்தவன். ரோம குடியுமை கொண்டவன் (அப்போ 15:22). ஆரம்ப கால கிறிஸ்தவ மிஷனரிகளின் வாழ்கையைப் பல வார்த்தைகளால் விவரிக்கலாம், ஆனால் “அலுப்பு” என்ற வார்த்தை அதில் ஒன்றாக இருக்க முடியாது. இயேசுவைக் குறித்து கேள்விப்பட்டிராத அநேக ஆண்களும், பெண்களும் சுவிசேஷத்தைக் கேட்டு பலன் அளித்த ஆச்சரியமிக்க நாட்கள் அந்நாட்கள். நிலத்திலும் நீரிலும் ஆபத்தான பயணம் மேற்கொள்ள வேண்டியதாயிருந்தது. உடல் நலக் குறைவுகளும் பசியும் இவர்களது அன்றாடக வாழ்க்கையில் ஒன்றாக காணப்பட்டது. மேலும் பல நகரங்களில் கிறிஸ்தவத்திற்கு விரோதமாக வெளிப்படையான தடைகளும் எதிர்ப்புக்களும் காணப்பட்டதன. இயேசுவுக்காக ஊழியம் செய்வது என்பது ஒரு அலுப்பு தட்டாத காரியம்என கண்டறிந்தான் இந்த முதல் மிஷனரிகளில் ஒருவனான சீலா.

சீலா என்ற பெயர் அப்போஸ்தலர் புத்தகத்தில் புற ஜாதிகளுக்கும், யூதர்களுக்கும் இடையே நடந்த பிரச்சனைகளைத் தீர்க்க அமைக்கப்பட்ட தேவாலய மன்ற உறுப்பினர் குழுவின் பட்டியலில் காணப்படுகிறது. ஆரம்ப கால கிறிஸ்தவர்களில் பெரும்பாலனவர்கள் யூதர்களே.

இயேசு என்பவர், பழைய ஏற்பாட்டில் தேவன் தம்முடைய ஜனங்களுக்குக் கொடுத்த வாக்குத் தத்தத்தின் நிறைவேறுதல் என இவர்கள் உணர்ந்தனர். எனினும் இந்த வாக்குத்தத்தம் உலகளாவிய அளவில் புறக்கணிக்கப்பட்டது. இதனால் அநேகர் கிறிஸ்தவர்களாவதற்கு முதலாவது யூதர்களாக மாற வேண்டும் என்ற முன் நிபந்தனை இருப்பதாக கருதினர். தேவன் புறஜாதிகளையும் ஏற்றுக்கொண்டது ஆச்சரியமான ஒன்றாகக் காணப்பட்டது. புறஜாதியினர் கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்ட போது, அவர்களது வாழ்க்கை மாறியது கர்த்தருடைய ஆவி அவர்களை ஆவியினால் நிரப்பி அவர்களது மாற்றத்தை உறுதிப்படுத்தினது. சில யூதர்கள் இன்னும் தயக்கம் காட்டினர் எனினும் மாறாக இந்தப் புதிய கிறிஸ்தவர்கள் பல்வேறு யூத பழக்க வழக்கங்களைக் கடைபிடித்தனர். இந்தக் காரியமானது இதன் உச்ச கட்ட கொதி நிலையில் எருசலேமின் மன்ற உறுப்பினர் குழு (கவுன்சில்) கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு பிரச்சினை ஏதும் இன்றி தீர்வு காணப்பட்டது. எருசலேமிலிருந்து பவுல் மற்றும் பர்னபாவுடன் அனுப்பப்பட்ட பிரதிநிதிகளில் சீலாவும் ஒருவன். இவர்கள் அந்தியோகியா பட்டணத்திற்குப் புற ஜாதிக் கிறிஸ்தவர்களை வரவேற்கவும் ஏற்றுக்கொள்ளவும், இந்த பணியை பூர்த்தி செய்யக் கூடிய நிருபத்தோடு சென்றனர். இந்தப் பணியை நிறைவேற்றினதினிமித்தம் சீலா எருசலேமுக்குத் திரும்பினான். ஒரு குறுகிய காலத்தில் பவுல் வேண்டிக் கொண்டதின் நிமித்தம் அந்தியோகியாவில் இரண்டாவது மிஷனரி பயணத்தில் அவரோடு இணைந்தான்.

பவுல், சீலா, தீமோத்தேயு ஆகிய இவர்கள் ஒரு பரந்த தீவிரமான ஊழியத்தை ஆரம்பித்தனர். பவுலும், சீலாவும் கடுமையாக தாக்கப்பட்ட பின்பும் பிலிப்பியச் சிறையில் இரவு முழுவதும் பாடல்கள் பாடி தேவனைத் துதித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது பூமி அதிர்ந்தது, அவர்கள் கட்டுக்கள் கழன்று போயின, இந்தப் பீதியின் முடிவு அந்த சிறைச்சாலையின் காவலர்கள் மனம் மாறி இரட்சிக்கப்பட வழி வகுத்தது. பின்னர் இவர்கள் தெசலோனிக்கேயாவில் மற்றொரு அடிக்கு தப்பி தடுத்து வைக்கப்பட்டனர். பின்னர் பெரோயா பட்டணத்திற்குச் சென்றனர், அங்கேயும் இன்னும் அதிகமான தொந்தரவுகள் காணப்பட்டதன. ஆனால் சீலாவும். தீமொத்தேயுவும் அங்கேயே தங்கி இளம் விசுவாசிகளுக்குப் போதித்து வந்தனர். அப்பொழுது பவுல் அத்தேனே பட்டணத்திற்குப் பயணப்பட்டார். இறுதியாக இந்தக் குழுவானது கொரிந்து பட்டணத்தில் இணைந்தது. அவர்கள் பார்வையிட்ட ஒவ்வொரு இடத்திலும் அவர்கள் ஒரு சிறிய கிறிஸ்தவ குழுவைப் பின் வைத்துச் சென்றனர்.

சீலா என்பவன் கதையில், நுழைந்தது போல் காணப்பட்டாலும் திடீரென மறைகிறான். பேதுரு குறிப்பிடும்போது பேதுரு நிருபத்தை எழுத உதவிய இணை ஆசிரியர் என்று குறிப்பிடுகிறான். இவன் எப்போது பேதுருவோடு இணைந்தான் என்பதை இதன் மூலம் அறியமுடிகிறது. எருசலேமை விட்டு வெளியேறும் போது இவன் ஒரு தீவிர விசுவாசியாக காணப்பட்டான். பவுலோடு இவனுடைய வேலைகள் முடிந்த பின்னரும் தொடர்ந்து ஊழியம் செய்ய நிச்சயமுடையவனாக காணப்பட் பின்னடைவுகளையும் இவன் சோர்ந்து போகாமல் வாய்ப்புகளாகவும் நன்மைகளாகவும் எடுத்துக் கொண்டான். சீலா என்பவன் ஆரம்ப கால மிஷனரிகளில் அதிகமாக புகழ்பெறாத நபராக காணப்பட்டாலும் இவன் ஒரு முக்கிய ஹீரோவாக போலி மதிப்படைகிறான்.

 

 

 
2. வலிமையும் சாதனையும்
2.1 இவன் எருசலேம் தேவாலயத்தில் ஒரு தலைவன்.
2.2 அந்தியோகியாவிலுள்ள புற ஜாதி விசுவாசிகளுக்கு எருசலேம் சங்கத்தினர் கொடுத்தனுப்பிய ஒப்புதல் கடிதத்தை எடுத்துச் சென்ற ஒரு பிரதிநிதி.
2.3 பவுலின் இரண்டாவது மிஷனரி பயணத்தில் இவன் பவுலுடன் அவரது ஊழியத்தில்
நெருங்கிய தொடர்புடையவனாக காணப்பட்டான்.
2.4 பிலிப்பே பட்டணத்தில் பவுலோடு சிறையிலடைக்கப்பட்ட போது தேவனைத் துதித்து பாடினவன்.
2.5 பவுலுக்கும் பேதுருவுக்கும், எழுதும் செயலாளனாக பணியாற்றினவன்.

 

 

 

 

 
3. இவனுடைய வாழ்க்கையிலிருந்து பாடங்கள்
3.1 கூட்டாக இணைந்து ஊழியம் செய்வது சிறந்த ஊழியத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்.
3.2. தம்முடைய ஊழியர்களுக்கு பாதிப்பே ஏற்படாது என்று தேவன் ஒருபோதும் உத்திரவாதம் அளித்ததில்லை.
3.3 கடவுளுக்கு கீழ்ப்படிதல் என்பது பொதுவாக எதைக்குறிக்கிறது என்றால் நமக்கு பாதுகாப்பு என கருதுகிற ஒன்றை விட்டுக்கொடுப்பதையே குறிக்கிறது.

 

 

 
4. வேதாகமக் குறிப்புகள்
சீலாவின் கதையை அப்.15:22-19:10, 2கொரி.1:19, 1தெசலோ 1:1, 2தெசலோ 1:1 மற்றும் 1பேதுரு 5:12லும் காணலாம்.

 

 

 
5. கலந்தாலோசனைக்கான கேள்விகள்
5.1 யூதாவும்,சீலாவும் எருசலேமிலுள்ள மன்ற உறுப்பினர் குழு(கவுன்சில்) கூட்டத்திற்கு ஏன் அனுப்பப்பட்டனர்?
5.2 பவுல் சீலாவை எப்படி பயிற்றுவித்தான்?
5.3 பவுலுக்கும் பேதுருவுக்கும் சீலா எங்ஙனம் உதவினான்?
5.4 ஆதிச் சபைக்கு உதவிய சீலாவின் வேறு திறன்களை வரையிட்டு காட்டவும்.

 

 

 

 

 
மொழிபெயர்ப்பு
ஜான் ஆரோக்கியசாமி,
கிள்ளன்.

 

Sunday, September 11, 2011

36. ஏசாயா தீர்க்கதரிசி

கரு வசனம்:

பின்பு: யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன். (ஏசாயா 6:8)
கதைச் சுருக்கம்
1.     பெரிய தீர்க்கதரிசிகளில் ஒருவர். நியாயத் தீர்ப்பு மற்றும் நம்பிக்கையை உள்ளடக்கிய செய்திகளைக் கொண்டு வந்தான்.
2.     மனாசேயின் ஆட்சிக் காலத்தில் அவன் இரத்த சாட்சியாக கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
3.     இவனின் செய்திகள் அனைத்தும் ஜனங்களுக்கு ஆறுதலையும் அதே நேரத்தில் சவால் விடுவதாகவும் அமைந்திருக்கிறது.

1.     முன்னுரைசுய சரிதை
யெகோவா தேவனின் இரட்சிப்புஎன்பது இவன் பெயரின் பொருள். பெரிய தீர்க்கதரிசிகளில் ஒருவன் என்று இவன் அழைக்கப்பட்டான். இவனை சதுசேயர் என்றும் தீர்க்கதரிசியென்றும் கூறுவார்கள். இவன் தேசப் பற்று மிக்கவனும் ஒரு தீர்க்கதரிசியாகவும் பொது வாழ்க்கையில் தன்னை அர்ப்பனித்தவனாகவும் இருந்தான். உசியா, யோதாம், ஆகாய் மற்றும் எசேக்கியா ராஜாக்கள் ஆண்ட காலக் கட்டத்தில் மேற்கூறப்பட்ட காரியங்களைச் செய்தான். இவன் தந்தையான ஆபோங் பற்றிய தகவல்கள் ஏதுவும் தெரியாது. மனாசே ராஜா எந்த சம்பிரதாயத்தின்படி அல்லது கலாச்சாரத்தின்படி, ஏசாயா தீர்க்கதரிசியை இரத்த சாட்சியாக கொலை செய்தான் என்றும் தெரியவில்லை. ஒருவேளை ஏசாயா தான் கடவுளைக் கண்டதாக சொன்னதின் நிமித்தம், அவன் தேவ தூஷனம் சொன்னதாக குற்றம் சாட்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்க்க் கூடும்.(மோசே கடவுளைக் காண முடியாது என்ற கூற்றின்படி கொலை செய்யப்பட்டிருக்கலாம்). இவனின் மனைவி ஒரு தீர்க்கதரிசியும் கூட (ஏசா.8:3). இவனின் இரு ஆண் பிள்ளைகளின் நாமம் மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளன. மூத்தவன் சேயார்; யாசூப் இளையவன். மகேர்சாலால் ஆஷ்பாஸ் (ஏசா.7:3, 8:3-4). மற்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. ராஜா மரித்த வருடம் தொடங்கி (கி.மு.740) முதல் எருசலேம் பட்டணம் விடுதலையாக்கப்பட்டு, சென்னாசெரிப்பிடம் ஒப்படைக்கப்பட்ட வருடம் வரை தொடர்ந்து (கி.மு.701) திடுதிடுப்பென்று ஏசாயா வரலாற்றுச் சுவடுகளிலிருந்து மாயமாய் மறைந்து போனான். இவன் ஊழியம் கிட்டதட்ட 40 ஆண்டு செய்தான். இவனுடைய மற்ற தீர்க்கதரிசிகள் இஸ்ரவேலில் உழியம் செய்தவர்கள்; ஓசியா மற்றும் மீகா ஆகியோர்.

ஊசியாவின் நடவடிக்கைகள்என்ற தலைப்பில் இவன் 2 நாளாகமம் 26:22ல் எழுதியுள்ளான். இது மற்ற தீர்க்கதரிசிகளின் எழுத்துச் சுவடுகள் மூலம் மறைந்து போனது.
இவனின் ஜீவியம் சமாரியா, யூதேயா தேசத்து வரலாற்றோடு பிணைக்கப்பட்டுள்ளது. விசேஷமாக யூதேயாவின் வரலாற்றோடு பிணைக்கப்பட்டுள்ளது. ஆகவே, இவைகளின் ஆராய்ச்சிகள் ஏசாயாவின் வாழ்க்கை வரலாற்றோடு ஒப்பிட்டுப் பார்த்து ஆராய வேண்டியுள்ளது.
ஏசாயா புஸ்தகம் ஏசாயாவின் வரலாற்றை அறிந்து கொள்ள உதவும். இவன் புஸ்தகத்தில் ஒரு சில முரண்பாடுகள் காணப்படுகின்றன. இவனின் புஸ்தகம் இரண்டு பாகங்கள் உண்டு.
                 
) அதிகாரம் 1 – 39
                 
) அதிகாரம் 40 – முடிய

முதல் 39 அதிகாரங்கள் ஏசாயாவைப் பற்றி சொல்லுகிறது. ஆனால் 40 முதல் இறுதி அதிகாரங்கள் பெயர் குறிப்பிடப்படாத ஒரு தீர்க்கதரிசியையே குறித்து எழுதப்பட்டுள்ளது. முதல் பத்தி, தனித் தனி தீர்க்கதரிசனங்களாக எழுதப்பட்டுள்ளது. பிற்பகுதி தொடர்ச்சியாக ஒரே நபரைக் குறித்துக் கவிதை நடையில் எழுதப்பட்டுள்ளது. முற்பாதி எழுதப்பட்ட விதமும் பிற்பகுதி எழுதப்பட்ட விதமும் மற்றும் சொல்லாட்சிகள் முற்றிலும் மாறுபட்டுள்ள மன நிலையைக் குறிக்கிறது. 150 ஆண்டுகள் கடந்த பின்பு ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தின் உண்மை தன்மை வெளிப்பட்டது.

பிற்பகுதியான அதிகாரங்களான 40-66 வரை இஸ்ரவேல் நிலை நாட்டப்படும் என்ற திர்க்கதரிசனத்தைக் கொண்டதாயிருந்த்து.
NIV
ஆராய்ச்சி வேதாகமத்தின் அடிப்படையில் ஏசாயா மிகவும் ஈடுபாடோடுதான் தீர்க்கதரிசன ஊழியங்களைச் செய்துவந்தான். ஊசியா ராஜா மரித்த பின்பு, அவன் எருசலேமில் ராஜாவின் அரண்மனையில் ஒரு வேதபாதகராக ஏற்படுத்தப்பட்டான்.

இப்பதவி ஒரு பொறுப்பு நிறைந்த பதவியாயிருந்தது. ஆனால், கடவுளின் திட்டம் வேறு விதமாயிருந்தது. கடவுள் அவனை ஒரு தீர்க்கதரிசியாக அழைத்து, ஒரு தரிசனத்தையும் கொடுத்தார். இந்தத் தரிசனம் ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.

கடவுளோடு ஏற்படும் சந்திப்பு, நிரந்திரமாக ஏசாயாவின் குணாதிசயங்களை மாற்றிப் போட்டது. இந்த குணாதியசம் தான் பிரதிபலிக்கும் தேவனின் செய்திகளில் வெளிப்பட்டன. அவனின் செய்திகள் ஆறுதலாகவும் அதே நேரத்தில் சவால் நிறைந்ததாகவும் அமைந்தது. இதினிமித்தம் ஒரு சில வேதாகம அறிஞர்கள் வேறொரு தீர்க்கதரியிடமிருந்து வந்திருக்கலாம் என்று யூகித்துக் கூறினார்கள். ஆனால், ஏசாயாவின் சாட்சியின்படி கடவுள் ஒருவரே நியாயமாகவும் கிருபையாகவும் இருக்க முடியும் என்று கூறினான்.

ஏசாயா ஒவ்வொரு தடவையும் தீர்க்கதரிசனம் உரைக்கும் பொழுது அதைத் துல்லியமாகவும் பெற்றியுள்ளதாயும் உரைக்குமாறு கடவுள் ஊக்குவிக்கவில்லை. ஜனங்கள் செவி சாய்க்க மாட்டார்கள் என்று ஏற்கனவே கடவுள் ஏசாயாவிடம் தெரிவித்து விட்டார். ஆனால், அதையே சொல்லவும் எழுதவும் ஏவினார். ஒரு வேளை ஒரு சிலர் அதைக் கேட்டு வாசித்து மனமாறக் கூடும். ஏசாயா 6:13ன் படி, இஸ்ரவேல் ஜனங்களைக் கர்த்தர் பின் கூறப்பட்டுள்ள உவமைக்கு ஒப்பிடுகிறார்.

காவலாலி மரமும் அரச மரமும இலையற்றுப் போனபின்பு, அவைகளின் அடிமரம் இருப்பதுபோல, அதின் அடிமரம் பரிசுத்த வித்தாயிருக்கும், என்றார் (ஏசா.6:13).

சாதனைகளும் அவனின் பெலனும்
a.     உன்னதமான தீர்க்கதரிசி.
b.     புதிய ஏற்பாட்டில் குறைந்தது 590 முறையாவது குறிப்பிடப்பட்டுள்ளது.
c.     நம்பிக்கை, நியாத் தீர்ப்பு போன்ற அம்சங்களை உள்ளடக்கிய தேவ செய்தியை உடையவனாயிருந்தான்.
d.     தன் ஊழியத்தில் கண்ணும் கருத்துமாயிருந்தான். தன்னுடைய தேவ செய்தியைக் கேட்டும் கேளாதர்கள் போல இருந்தவர்களைக் குறித்து கவலைப்படவில்லை.
e.     அவனின் ஊழியம் உசியா ராஜா முதல் தொடங்கி, யோதாம், ஆகாஸ், ஏசேக்கியா மற்றும் மனாசே ராஜா வரைக்கும் தொடர்ந்தது.

கற்றுக் கொண்ட பாடங்கள்
a.     ஜனங்களை ஆற்றித் தேற்றவும், பாவங்களைக் கண்டித்து உணர்த்தவும் கடவுளின் அணுக்கிரகம் தேவை.
b.     மன்னிப்பு பெற்றவனே மற்றவர்களிடம் மன்னிப்பைப் பகிர்ந்து கொள்ள முடியும்.
c.     கெகோவா தேவன் பெய்யாகவே பரிசுத்தரும், பூர்ணமானவரும், நீதியானவரும் அன்பானவருமாயிருக்கிறார்.
வேதாகம ஆதாரம்
a.     ஏசாயாவின் கதைகள் 2 இராஜா.19:2-20ல் சொல்லப்பட்டுள்ளது. மற்றும் 2 நாளாகமம் 26:22, 2 நாளாகமம் 32:20, மத்தேயு 3.3, மத்தேயு 8:17, மத்தேயு 12:17-21, யோவான் 12:35, ரோமர் 10:16:20, 21ல் கூறப்பட்டுள்ளது.
b.     பேக்கர் வேதாகம களஞ்சியம் (முதலாம் வரிசை)
c.     பிரான்ட் ரெப்பிட்ஸ், 1995, (பக்.1046-1052)


மொழிபெயர்ப்பு
ஜெ.ஜி.ராபின்சன் விக்டர்
சிலிம் ரிவர்