Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Tuesday, May 18, 2010

மலேசியாவில் நமது முஸ்லீம் நண்பர்களை அறிந்து கொள்வோம்

அத்தியட்சாதீன நீள்விரி இறையியல் கல்வித் திட்டம் (TEE)


Click her to download in PDF

முன்னுரை

முகமது தீர்க்கதரி அரபியாவில் போதித்தது மூலம் தோன்றிய சமயம் இஸ்லாம். இஸ்லாத்தைச் செயல்முறைப் படுத்துவோர் முஸ்லீம்கள் என்றழைக்கப்படுகிறார்கள். இஸ்லாம் என்றால், இறைவனுக்குக் கீழ்ப்படிந்து சரணடைதல் என்று பொறுள். ஒரு முஸ்லீம் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து அவரிடத்தில் சரணடைகிறான்.

முகமது இந்த மார்க்கத்தை கிபி610ல் போதித்து வந்தார். முகமதுவின் மரணத்திற்குப் பிறகு அரபிய முஸ்லீம்கள் இந்த மார்க்கத்தை உலகின் பிற பகுதிகளுக்குக் கொண்டு சென்றனர். எல்லா முஸ்லீம்களும் முகமதுவை இறை தூதன் என்று மதிக்கிறார்கள். அவர்கள் குர்ஆனை ஏற்றுக் கொள்கிறார்கள்.

1. முகமது – இறை தூதர் (1)

முகமதுவின் காலத்துக்கு முன்பு, அரபியர்கள் பலவிதமான தெய்வங்களைத் தங்கள் வழிபாட்டு நிலையங்களில் வணங்கி வந்தனர்..

இறைவர் முகமதுவை அழைத்தல்: முகமது மெக்காவில் பிறந்தவர். மெக்காவின் மிகவும் பிரபலமான ஆலயம் காபா என்றழைக்கப் படுகிறது. (காபா என்றால் சதுக்க முகாம் அல்லது கட்டிடம் என்று பொறுள்) அதில் ஹூபால் என்ற விக்கிரகம் உள்ளது. அது சிவப்பு மணற்கல்லில் மனித வடிவமாக செதுக்கப்பட்டுள்ளது. காபாவைச் சுற்றி இன்னும் பல புனித விக்கிரகங்களும் உள்ளன. அவை யாவும் ஒன்றுக்கொன்று அருகருகில் அமைந்துள்ளன. அப்படிப்பட்ட ஒன்றில் விண்ணின் கருங்கல் உள்ளது. மெக்காவிற்கு யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் இன்னும் அதனைத் தொட்டு (வணங்கி) வருகிறார்கள்.

குஷாய் குடும்பத்தினர் காபாவின் பொறுப்பதிகாரிகள் ஆவர். அவர்கள் குராய்ஸ் வம்ச வழியினர்.

முகமதுவின் இளம் பிராயம்: அவர் சுமார் கிபி570ல் பிறந்தார். அவர் குஷாய் குடும்ப வம்சத்தைச் சேர்ந்தவர். அவர் பிறப்பதற்கு முன்பே தகப்பனார் காலமாகி விட்டார். அவருக்கு ஆறு வயதாய் இருக்கும்போதோ தாயார் அமினாவும் மரித்து விட்டார். பின்னர், அவருடைய தாத்தாவாகிய அப்துல் ஐ-நுதாலிப் அவரைப் பேணி வந்தார். அவரும் மரித்தபிறகு, தாத்தாவின் சகோதரனாகிய அபு தாலிப் தமது பாதுகாப்பில் வைத்துக் கொண்டார். 25வது வயதில் கத்திஜா என்ற ஒரு செல்வந்தரான விதவைத் திருமணம் செய்து கொண்டார். கத்திஜா முகமதுவைவிட பல வயது மூத்தவர். உண்மையில் கத்திஜாவிற்காக முகமது வாணிபத்தைக் கவனித்துக் கொண்டார். கத்திஜாவோடு சேர்ந்து கொண்ட பிறகு முகமதுவிற்குத் தன்னம்பிக்கையும் அதிகமான ஓய்வும் கிடைத்த்து. அவருக்கு 4 பெண்களும் 2 ஆண்களுமாய் பிள்ளைகள் பிறந்தனர்.

அவருக்கு உண்டான பொறுப்பு: அவர் உண்மையும், நேர்மையும் நம்பிக்கைக்குப் பாத்திரருமாக்க் காணப்பட்டார். ஆன்மீகம் நிறைந்தவராகவும் காணப்பட்டார். குர்ஆன் 88.17-21 மற்றும் 80.24-32 ஆகிய வசனங்கள் அவருக்கு உண்டான பொறுப்பை அறிந்து கொள்ள உதவும்.

மாந்தர்: இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்யத் தவறும் ஜனங்களை முகமது அடிக்கடி கடிந்து கொள்வார். (80.16-23). குர்ஆனில், இறைவன் தம்மை வணங்குவதற்கும் தமது தூதுவர்களை விசுவாசிப்பதற்கும் அழைத்திருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. நற்செய்கையுடையவர்களாகத் திகழவும் அழைத்த அவர், விதவைகளையும் எளியோர்களையும் உதாசீனப்படுத்துகிறவர்களையும் கடிந்து கொள்கிறார். (89:17-26)

முகமது தனது சீடர்களிடம், தங்கள் வாழ்வு முழுவதிலும் கடவுளின் வழிகாட்டலை நாடுமாறு கேட்டுக் கொண்டார். அனுதின ஜெபத்தின் மூலம் இதனைச் செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார். முஸ்லீம்களும் இந்த ஜெபத்தை (தொழுகை) ஒவ்வொரு நாளும் ஐந்து முறை மேற்கொள்கின்றனர். இந்த ஜெபம், குர்ஆனின் தொடக்க அதிகாரமாகிய அல்-ஃபாத்தியாவில் கூறப்பட்டுள்ளது.

முகமது – கடவுளின் தூதுவர்: அவர் கடவுளின் தூதுவராக அல்லது தீர்க்கதரிசியாக உபதேசித்து வந்தார். பலர் அவரை ஆட்சேபித்தனர் (46:7-9). தனது உபதேசத்தில் பல நிந்தனைகளைச் சந்தித்தார். அவருடைய உபதேசம், மெக்காவின் முக்கிய தலைவர்களுக்குத் திண்டாட்டத்தைத் தந்தது. செல்வந்தர்களும் பிரபுக்களும் அவரைப் புரக்கனித்தனர். மெக்கா மக்களில் முக்கிய தெய்வமாகிய லேசர் தெய்வத்திற்கு விரோதமாக அவர் பேசினார். மெக்கா ஜனங்கள் முஸ்லீம்களைச் சில வருடங்களாகத் துன்புறுத்தத் தொடங்கினர்.

2. முகமது – இறைவனின் தூதுவர் (2)

a. மதினாவில் முகமதுவின் ஆட்சி: 1394ல் முகமது மெக்காவில் இருந்து மதினாவிற்கு மேற்கொண்ட பயணத்தை ஹிஜ்ரா என்று அழைக்கிறார்கள். முஸ்லீம்களுக்கு இது ஒரு முக்கியமான வருடம் ஆகும். இதன் மூலம் முகமது ஒரு தீர்க்கதரிசியாகவும் தூதுவராகவும் வெளிப்பட்டார்.

b. குர்ஆனின் தொகுப்பு: உலகம் படைக்கப் படுவதற்கு முன்பே குர்ஆன் பரலோகத்தில் எழுதப்பட்டது என்றும் அது அரபிய மொழியில் இறக்கப் பட்டது என்றும் முஸ்லீம்கள் நம்புகின்றனர். ஆனால், குர்ஆன் ஏகோபத்திய நேரத்தில் முகமதுவிற்கு வழங்கப்படவில்லை. அது 20 வருட காலக் கட்டத்தில் (அல்லது அதற்கும் மேலான காலக்கட்டத்தில்) அவருடைய பெரும்பணியின் போதும், பல்வேறு சம்பவங்களின் போதும் வெளிப்படுத்தப் பட்டது.



குர்ஆனில் பல்வேறு உபதேசப் பொருள்கள் அடங்கியுள்ளன:-

a. சில பகுதிகளில் போர்களும் பயணங்களும் எழுதப்பட்டுள்ளன. வேறு சிலவற்றில் முகமது மற்றும் அவரின் சகாக்களின் சுகதுக்கங்கள் இடம் பெற்றுள்ளன.

b. சில பத்திகளில் பிற தீர்க்கதரிசிகளின் கதைகள் கூறப்பட்டுள்ளன. அவை, அரபியர்கள் முகமதுவிற்குச் செவி சாய்க்கும்படி எச்சரிக்கை விடுவனவாக அமைந்துள்ளன.

c. சில பத்திகளில் இஸ்லாத்திற்கும் யூதம் கிறிஸ்தவம் ஆகிய பிற சமயத்திற்கும் உள்ள தொடர்பை விளக்குகின்றன. கிறிஸ்தவர்களைப் பற்றியும் குர்ஆன் குறிப்பிடுகிறது.

d. சில பத்திகளில் முஸ்லீம்களுக்குத் தங்கள் நடத்தையைப் பற்றி வழிகாட்டும் வகையில் எழுதப்பட்டுள்ளன.



நிலை குலையாத முகமதுவின் கைபற்றல்:-

a. மதினா

b. மெக்கா, அரபிய ஆதிவாசி ஜனங்கள், அரபிய தேசத்திற்குள்ளும் அப்பாலும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். அவர் ஒரு மஹா வீரனானார். விக்கிரகங்களை அழிப்பதற்கும் அவர் கட்டளையிட்டார்





3. உலக சமயத்தின் அஸ்திபாரம்

அவர் கிபி632ல் மரித்தார். இஸ்லாம் என்று அறியப்படுகிற மாபெரும் சமயத்திற்கான அஸ்திபாரத்தை அப்பொழுது அமைத்து விட்டார். இதனைப் பல வழிகளில் நிறைவேற்றினார்:-

a. உலகின் அனைத்து மக்களும் புரிந்து கொண்டு விருப்பப்பட்டால் நிறைவேற்றக் கூடிய ஜெபத்தையும் தொழுகையையும் அவர் போதித்தார்.

b. குர்ஆன் எனப்படும் கடவுளின் வார்த்தையைத் தனது சீடர்கள் பெறத்தக்கதாக ஒரு கருவியாகச் செயல்பட்டார்.

c. தனது இறை தூதுவர் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அரபிய இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தினார். அரபியாவை ஒரு முஸ்லீம் நாடாக மாற்றுவதற்கு ஒரு கருவியாகச் செயல்பட்டார்.

d. இஸ்லாமிய சமுதாயத்திற்காக ஒரு நடத்தை முறைமையைப் போதித்து, தானே அதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்.


4. பன்னாட்டு அரங்கில் இஸ்லாம் – அரபிய வல்லரசுகள்

a. கிபி632ல் முகமது மரித்த பின்பு, அவருடைய தோழர் அபு பாக்கார் அவருடைய பொறுப்பை ஏற்றார். அபு பாக்கார் ஒரு தீர்க்கதரிசியும் அல்லர்; அப்போஸ்தலரும் அல்லர். குர்ஆனில் போதிக்கப்பட்ட படியும் முகமது கூறியபடியும் முஸ்லீம் மக்களை வழிநடத்துவதுதான் அவர் கடமையாய் இருந்தது.

b. இந்த மாபெரும் இஸ்லாமிய வல்லரசை ஆட்சிசெய்பவர் பின்னுரிமையாளர் என்றழைக்கப்பட்டனர். அதற்கு அரபியாவில் கலிஃபா என்ற சொல் வழங்கப்பட்டது. கலிஃபாக்கள் குர்ராஷ்ய வம்சாவழியினராகவும் முகமதுவின் ஞாதிகளாகவும் (உறவினர்) திகழ்ந்தனர்.

குறிப்பு: இஸ்லாமிய வல்லரசு பிற்காலத்தில் பல்வேறு காரணங்களுக்காகப் பிளவுபட்டது.



c. இஸ்லாமிய விரிவாக்கம்:-

i. வியாபாரிகளும் வணிகர்களும் பெருமளவில் உதவியுள்ளனர். கலப்புத் திருமணமும் கைகொடுத்துள்ளது.

ii. குருமார்களும் புனிதர்களும்: சட்டதிட்டத்தை உபதேசித்ததோடு சமய சடங்குகளையும் வழிநடத்தினர்.

iii. முஸ்லீம் ஆட்சியாளர்கள்: சிகாது (ஜிஹாட்) என்ற மரணயுத்தமும் தோள் கொடுத்துள்ளது.

iv. ஆப்ரிக்கா, கிழக்கு ஐரோப்பா, ஆசிய நாடுகளுள் வணிக வளர்ச்சியும் இஸ்லாத்தைப் பரப்ப உதவிற்று.



5. இஸ்லாமிய நாகரிகம்

3 அஸ்திபாரங்கள் மூலம் இஸ்லாமிய நாகரிகம் கட்டப்பட்டது:

a. அரபியாவில் இருந்து புறப்பட்ட இஸ்லாமிய மார்க்கம்.

b. அரபிய மொழியும் கவிதைகளும்.

c. அரபியர்கள் கைபற்றிய தேசங்களில் இயற்கையாக தோன்றியிருந்த நாகரிகங்கள்.

21ம் நூற்றாண்டு இஸ்லாமியர்கள்: உலகில் சுமார் 1 பில்லியன் (100 000 000) முஸ்லீம்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.



6. இஸ்லாமிய உபதேசங்கள்



6.1 இறைவனைப் பற்றி முஸ்லீம் நம்பிக்கை

ஷஹாடா என்ற விசுவாசப் பிரமாணம், அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று தொடங்குகிறது. அல்லாஹ் என்றால் வேறு ஒருவர் கிடையாது என்று பொருள். அரபிய பண்டிதர்கள் அல்-இல்லாஹ் என்ற அரபிய மொழியின் சுருக்கத்தைதான் அல்லாஹ் என்று கூறுகிறார்கள். அதாவது, மற்ற இறைவர்களையும் தெய்வங்களையும் வேறுபடுத்துகிற ஒரே ஒரு கடவுள் என்று பொறுள்.



a1 இறைவனின் தனிச் சிறப்பு: இறைவன் அபூர்வத் தன்மை மிக்கவர். படைக்கப்பட்டதில் இருந்தும் படைப்புகளில் இருந்தும் அவர் மாறுபட்டவர். முஸ்லீம் போதனையின்படி, வேறொன்றும் அவருக்கு இணையாக முடியாது, இணையாக்கவும் முடியாது; ஒப்பாக்கவும் முடியாது; ஈடாக்கவும் முடியாது. (குர்ஆன் 112). இறைவனோடு வேறு எதையும் ஒப்பாக்குது இஸ்லாத்தில் க்ஷிரிக் என்றழைக்கப்படும் மிகப் பெரிய பாவமாகும்.

a2. இறைவனின் குணாதிசயங்கள்: இறைவன் மற்ற எல்லா படைப்புகளிலிருந்தும் மாறுபட்டவர். ஆயினும், குர்ஆன் பின்வரும் வாக்குகளை ஆதரிக்கின்றது:-

i. இறைவன் பிறப்பும் இறப்பும் இல்லாமல் நீடித்து வாழ்பவர்.

ii. இறைவனால் எல்லா காரியத்தையும் செய்ய முடியும்.

iii. இறைவனின் சித்த்த்தின்படி எல்லா காரியங்களும் தோன்றியுள்ளன.

iv. இறந்த காலத்திலும், நிகழ் காலத்திலும், எதிர் காலத்திலும் உள்ள எல்லாவற்றையும் இறைவன் அறிந்திருக்கிறார்.

v. இறைவன் எல்லா ஓசைகளையும் செவிமடுக்கிறார்.

vi. இறைவன் எல்லா காரியங்களையும் காண்கிறார்.

vii. இறைவன் மனிதர்களோடு உறவாடுகிறார்

a3. மிகச் சௌந்தரியமான நாமங்கள் (அவருக்கு 99 நாமங்கள் உள்ளன)

6.2 வெளிப்படுத்தலைப் பற்றி முஸ்லீம்களின் நம்பிக்கை

i. இயற்கை உலகத்தின் மூலம் (30:46-50)

ii. அவருடைய தூதர்கள், தூதுவர்கள் மூலம்.

iii. வேதங்கள் மூலம்: ஷொராத் (தோரா), ஷாபுர் (சங்கீதம்), பைபிள் (சுவிசேஷம்).

iv. தீர்க்கதரிசிகள் மூலம்



6.3 தீர்ப்பைப் (விதி) பற்றிய முஸ்லீம்களின் நம்பிக்கை

ஒவ்வொரு விசுவாசியையும் இறைவன் நீயாயந் தீர்ப்பார். அவர்களுடைய செயல்கள் ஒரு துலாபாரத்தில் நிறுக்கப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் பரலோகத்தில் அனுமதிக்கப் படுவார்கள். தேறாதவர்கள் நரகத்திற்கு அனுப்பப் படுவார்கள் (18:49, 17:13-15). ஒவ்வொருவரும் தங்கள் சொந்த நடத்தைக்கும் தண்டனைக்குப் பொறுப்பாளிகள்.



7. இஸ்லாமிய நடைமுறை

7.1 இஸ்லாத்தில் குர்ஆனும் அதன் பாரம்பரியமும் பேணப்படுகின்றன. புதிய சூழ்நிலையின் படி முகமதுவின் தோழர்கள் இந்தப் பாரப்பரிய அப்பியாசத்தை செயல்படுத்துகிறார்கள். இதற்கு அரபிய மொழியில் சுன்னா என்று பெயர். இதனைப் பின்பற்றுகிறவர்கள் சன்னி முஸ்லீம்கள் என்றழைக்கப்படுகிறார்கள்.



7.2 ஷாரியா: இஸ்லாமிய சட்டம்: ஷாரியா என்றால் அரபிய மொழியில் நீரோடையின் பாதை என்று பொறுள். எல்லா முஸ்லீம்களும் பின்பற்ற வேண்டிய ஷாரியா சட்ட திட்டம் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

மற்ற விதமான சட்ட திட்டங்க்ளும் முஸ்லீம்களின் வாழ்வுக்கு வழிகாட்டுகின்றன:-

a. கலாச்சாரத்தை அணுசரிக்கும் சட்ட திட்டங்கள் (ஆப்ரிக்கா போன்ற தேசங்களில் உள்ளூர் பழக்க வழக்கங்களோடு ஷாரியா சட்ட திட்டம் அணுசரித்துப் போகிறது.

b. அரசாங்கத்தின் சமுதாய மற்றும் குற்றவியல் சட்டதிட்டங்கள்.



7.3 இஸ்லாத்தின் தூண்கள்:-

a) இஸ்லாமிய விசுவாசப் பிரமாண பிரகடனம்: ஷஹாடா

b) தொழுகை: சொலாத்

c) தானம்: ஷக்காத்

d) ரமதான் மாதத்தில் நோன்பு நூற்றல்

e) மக்காவிற்குப் புனித பயணம்: ஹாஜ்

பிரகடனம்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முகமது அவருடைய தூதுவர் என்றும் நான் சாட்சி பகர்கிறேன்.

தொழுகை: தொழுகை ஒரு மதுரமான பிரவாகம் என்று முகமது கூறுகிறார். ஒருவர் ஒவ்வொரு நாளும் 5 முறை தொழுகை நடத்த வேண்டும்.



8. இஸ்லாமியப் பிரிவினைகள்



8.1 சன்னி முஸ்லீம்கள்: சுமார் 90% பேர் இந்தப் பிரிவினையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் முதல் 4 கலிஃபாக்களை ஏற்றுக் கொள்கிறார்கள். முகமது பாரம்பரியமாக போதித்த சட்ட விதிகளைப் பின்பற்றுகிறார்கள்.

8.2 ஷியா முஸ்லீம்கள் மற்ற இஸ்லாத்தில் இருந்து மிகப் பெரிய அளவில் பிரிந்து வந்த மார்க்கம் இது. ஹுசேனுக்குப் பிந்திய பின்னுரிமையாளர்கள் தலைமறைவாகியிருக்கிறார்கள் என்றும் ஏற்ற காலத்தில் அவர்கள் தங்களை வெளிப்படுத்துவார்கள் என்றும் நம்புகிறார்கள். இவர்களை இமாம் என்று அழைக்கிறார்கள்; கலிஃபாக்கள் அல்ல. அவர்களுக்கென்று தனியான கலாச்சாரங்கள் உள்ளன. அவர்கள் 4 சன்னி விதிகளையும் புறக்கனிக்கின்றனர்.

8.3 ஷாபி முஸ்லீம்கள்: இவர்கள் மிகவும் சுதந்திர உணர்வைக் கொண்டவர்கள்.



முஸ்லீம்கள்: சராசரி முஸ்லீகளின் விசுவாசங்களையும் செயல்முறைகளையும் பின்வறுமாறு விவரிக்கலாம்:

i. முஸ்லீம்கள் தாங்கள் இறைவனின் சேவகர்கள் என்று அறிந்திருக்கிறார்கள். அவர்கள் இறைவனின் காரியஸ்தர்கள்.

ii. இறைவன் அவர்களுடைய ஒட்டு மொத்த வாழ்வையும் நிர்வாகிக்கிறார் என்று நம்புகின்றனர்.

iii. நியாயத் தீர்ப்பு நாளில் தங்கள் செய்கைகளின் கணக்குகளை இறைவனிடத்தில் வழங்க வேண்டும் என்று அறிவார்கள். முகமது அவர்களுக்காக பரிந்து பேசுவார் என்று நம்புகிறார்கள்.

iv. இறைவனுக்கு முன்பாக சில கடமைகள் உள்ளன என்று அறிவார்கள். (உம் – 5 விதி முறைகள்)

v. எளியோருக்கு தானம் செய்வதில் தயாளம் மிக்கவர்கள்.

vi. முகமது இறைவனின் சிறப்பு தூதுவராக நின்று தோற்றுவித்த மதமாகிய இஸ்லாத்தில் முஸ்லீம்களாக வாழ்வதில் பெருமையும் நன்றியும் உடையவர்களாக உள்ளனர்.

vii. திருமனம் மரபுரிமை விவகாரங்களில் ஆன மட்டும் ஷாரியா சட்டத்தைப் பின்பற்றுகிறார்கள்.

viii. தாங்கள் அறிந்து கொண்ட மட்டும் முகமதுவின் வாழ்க்கை முன்மாதிரியைப் பின்பற்றுகிறார்கள்.

ix. குர்ஆனில் காணப்படுகிற பழக்க வழக்கங்களையும் அவர்கள் பின்பற்றக் கூடும். உதாரணமாக வசீகரப்படுத்துவதற்கு குர்ஆனிய வசனங்களைப் பயன்படுதலைக் குறிப்பிடலாம்.



நிறைவுரை: மலேசிய இஸ்லாம்

மலாய்க் காரர்கள் எல்லா விததிலும இஸ்லாமியர்களாக்கப் பட்டுள்ளனர். மலேசியர்கள் அனைவரும் எல்லா வித்த்திலும் தங்களைப் பின்பற்ற வேண்டும் என்று விரும்புகிறார்கள். மலேசியா ஓர் இஸ்லாமிய நாடாக மாறக் கூடும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது. ஒவ்வொரு முஸ்லீம்களும் எப்படி முகமதுவின் குணாதிசயங்களைப் பின்பற்றப் போகிறார்கள் என்பதுதான் சவால். திறந்த மனம் கொண்ட மற்ற மார்க்கத்தார், குருஆன் மற்றும் இஸ்லாம் சமயத்தைக் கற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும். இஸ்லாத்தையும் முஸ்லீம்களையும் நேசிப்பதோடு மதிக்கும் செயல் ஒரே மலேசியா கொள்கையை நிலைநாட்டுவதில் முக்கிய பங்காற்றும்.



பேராயர் டத்தோ டாக்டர் எஸ் பத்துமலை (Ph.D)

ஏப்ரல் 2010

Monday, May 17, 2010

நமது இந்து நண்பர்கள்

அத்தியட்சாதீன நீள்விரி இறையியல் கல்வித் திட்டம்

Click here to download in PDF

பேராயர் பத்துமலையால் தொகுக்கப்பட்டது

A. இந்து தர்ம்ம் என்றால் என்ன?

1. உலகில் அதிகமாக விசுவாசிக்கப்படுகிற சமயங்களில் இந்து மதமும் ஒன்று 8கோடி மக்கள் இந்து மார்க்கத்தார். இந்தியர்களில் 80 சதவிகித்த்தினர் இந்துக்கள். மலேசியாவின் இந்தியர்களில் சுமார் 7 சதவிகித்த்தினர் இந்துக்கள்.
கிறிஸ்தவம், பௌத்தம், இஸ்லாத்தைப் போலல்லாமல் இந்து சமயம் பிரச்சாரத்தால் பரவ்வினது கிடையாது. ஆனாலும், சமீப காலங்களில் மேற்கத்திய நகரங்களில் இந்து பிரச்சாரக் குழுக்கள் ஆன்மீக நிலையங்களைத் திறந்துள்ளனர். எல்லா சமயமும் ஒருவனை பரலோகத்திற்கு வழிநடத்திச் செல்கிறது என்பதால், யாரையும் மதமாற்றத் தேவையில்லை என்று இந்து இந்து மார்க்கம் சொல்ல விளைகிறது.
பல கிழக்காசிய நாடுகளில் இந்து சமய கலாச்சார அடையாளங்கள் தெள்ளந் தெளிவாகக் காணப்படுகிறது. பௌத்தம் இந்து சமயத்தின் வழி தோன்றியதாகும்.

2. நீடித்து வாழும் பழங்கால சமயம்
ஒரு வேளை இந்து சமயம்தான் உலகின் நீடித்து வாழும் பழய சமயமாகத் திகழலாம். இந்தியா என்ற சொல்லைப் போல் இந்து என்பது சிந்தி நதியின் பெயரில் இருந்து மறுவியிருக்கலாம். ஆனால், அந்த மார்க்கம் அதற்கும் முந்திய வரலாற்றைக் கொண்டிருக்கிறது. தொடக்கத்தில் அது ஆரிய தருமம் அல்லது ஆரிய மார்க்கம் என்று அறியப்பட்டது.
தர்மம் என்றால், கடமை, நியாயம், நற்குணம், நன்னெறி, சட்டம், சத்தியம், சன்மார்க்கம் ஆகிய கருப்பொருள்களைத் தாங்கி வருகிறது. தர்மம் ஒருவரை முக்திக்கும் (விடுதலை) மோட்ஷத்திற்கும் கொண்டு சேர்க்கிறது.

3. இந்து மார்க்கம் ஓர் இனம் சார்ந்த மதம்
a) இந்து மார்க்கத்துக்கு ஸ்தாபகர் கிடையாது. கிறிஸ்தவத்தைப் போன்று அவதார தேதி கிடையாது.
b) இந்து மார்க்கத்திற்குப் பொதுவான விசுவாசப் பிரமாணம் கிடையாது (கிறிஸ்தவர்களின் அப்போஸ்தல விசுவாசப் பிரமாணத்தைப் போன்று)
c) இந்து மார்க்கத்திற்கு என்று ஒரு ஸ்தபாகம் கிடையாது. பொதுவான ஆராதனை முறைமையைப் பின்பற்றுகிறவர்களுக்கோ அல்லது ஒரு பொதுவான வாழ்வு நெறியைப் பின்பற்றி வாழ்கிறவர்களுக்கென்றோ ஒரு ஸ்தாபகம் கிடையாது.


4. மார்க்கக் குடும்பம் 
இந்துத்துவம் நெகிழ் தன்மை வாய்ந்த விசுவாசம். அது உள்வாங்கிக் கொள்ளக் கூடிய, மற்றும் காலத்திற்கேற்ப புதிய கருத்துகளை ஜீரனித்துக் கொள்ளக் கூடிய தன்மை வாய்ந்த்து. இந்தியாவின் முதல் பிரதமாரான பண்டிதர் நேரு, இந்துத்துவத்தைப் பின்வருமாறு வர்ணிக்கிறார்:-
“இந்துத்துவம் தெளிவும் (அற்ற), நிச்சயமும் (அற்ற) வடிவமுமற்ற பல காட்சிகளைக் கொண்ட எல்லாருக்கும் பொருத்தமான அனைத்தையும் கொண்ட மார்க்கம் ஆகும். அதனை விளக்கப் படுத்தி பார்க்கலாகாது. தற்கால வடிவத்திலும் இறந்த காலத்திலும் பல விசுவாசங்களையும் செயல்முறைகளையும், அடி முதல் நுனி வரை முரண்பாடுகளையும் உடைய அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டுள்ளது. வாழ்வதையும் வாழ விடுவதையும் அதன் அடிப்படைக் கொள்கையாகக் காணலாம்.


B. இந்து மார்க்க ஆன்முக நூல்கள்


1. சுருதியும் சிமிர்தியும் (Sruti and Smriti)
சுருதி என்றால் கேட்கப்பட்டது என்று அர்த்தம். அவை முனிவர்களுக்கு வெளிப்படுத்தப் பட்ட சத்தியம். சுருதிக்கு 4 வேதங்கள் உள்ளன.
சிமிர்தி என்றால் ஞாபகத்தில் கொள்ளப்பட்டவை. சுருதியை கிறிஸ்தவ வேததிதிற்கு ஒப்பாக்கினால், சிமிர்தியையும் உபதேசங்களையும் வேதத்தில் இருந்து திரண்ட கலாச்சாரத்திற்கும் ஒப்பாக்க வேண்டும். வேதத்தைத் தவிர்த்து எல்லா ஆன்மீக நூல்களையும் சிமிர்திகளாகக் கருதப்பட வேண்டும். ராமாயணமும் மகாபாரதமும் இந்து தர்மத்தில் இருந்து தோன்றிய பரம்பரைச் சொத்தாகும்.

2. வேதங்களும் உப்பனிசாத்துகளும் (விளக்க நூல்கள்)
ரிக் வேதம், சாம வேதம், யாசுர் வேதம், அதர்வண வேதம் ஆகியவை இந்து தர்ம வேதங்கள். ஒவ்வொரு வேதத்தில் 4 பெரும் பகுதிகள் உள்ளன:-
a. மநதிரங்கள் (கடவுளைத் துதித்துப் பாடுகிற பாமாலைகளும் பாடல்களும்)
b. பிராமணா (உரை அல்லது சடங்கு வழிமுறைகள்)
c. அரண்யகா (காட்டில் வாழும் முனிவர்களின் உரை)
d. உபநிடங்கள் (வேதங்களுக்கான தத்துவ உரைகள்). இவை உலக இயல்பையும் மனிதய உறவையும் விவாதிக்கின்றன.

3. ராமாயனணமும் மகாபாரதமும்
ராமாயணம் என்பது அசூர்ர்களின் அரசனாகிய ராவனனைக் கொன்று, பூமியில் தர்மத்தை மறுபடியும் நிலைநாட்டியவரின் கதை. ராமரும் அவருடைய துணைவியார் சீதையும் சால்புடைய தம்பதிமாராகக் கருதப்படுகின்றனர். அவர் அவதாரமாக நம்பப்படுகிறார்.
மகாபாரத்த்தில் ஒரு மஹா யுத்தம் நடைபெறுகிறது. நூறு கௌரவ சகோதரர்கள் அசூர்ர்களாக, நல்வர்களாகிய பாண்டவ சகோதரர்களோடு போரிடுகிறார்கள். ஸ்ரீ கிருஷ்ணனின் உதவியோடு, கடவுள் அவதாரம் எடுத்து தீயவர்கள் பாண்டவர்கள் மீது ஜெயம் கொள்கிறார்கள்.
இந்தப் புராணம் மனித தரத்தையும் மனித நிலைமையையும் எடுத்துக் காட்டுகிறது. ஊக்கத்தையும், விசுவாசத்தையும், பக்தியையும் உண்மையையும், இணைபிரியாமையையும் இப்புராணம் உபதேசிக்கிறது.

4. பகவத் கீதை (கடவுளின் பாடல்) மிகவும் பிரபலமான இந்து புனித நுலாகும். இது மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும்.  ஒரு மஹா யுத்தத்தில், பாண்டவர்களின் சகோதரனான அஜ்ஜுணன் குழப்பத்தில் மூழ்கிப் போனான். நியாயமாக இருந்தாலும் எப்படி தன் சொந்த சகோதரர்களோடு போரிட முடியும்? அந்தப் போர் முனையில் கிருஷ்ணர் மனித செயலின் நெறியையும் தத்துவத்தையும் வெளிப்படுத்துகிறார். கீதையின் அடிப்படை உபதேசம், தன்னலமற்ற செய்கையின் அவசியத்தை உணர்த்துகிறது. இது மனிதன் தெய்வத்தின் மீது கொள்ள வேண்டிய பக்தியைக் காட்டுகிறது.


C. இந்து மார்க்கத்தின் வரலாறு

மெய்யான குறிக்கோளுக்கான தேடல் என்ற தேவ தேடல் ஒன்று உண்டு. ஒரே ஒரு மெய்யான நிலைமை மாத்திரமே உண்டு என்று கூறப்படுகிறது. பிரம்மம் என்பது இந்த உலகின் ஆவி. மனிதன் என்பது அதன் ஆன்மா.

வருணப் (ஜாதி) பிரிவு முறைமை: ரிக் வேதத்தில், குருமார்களாகிய பிராமணர்கள் படைப்பாளராகிய பிரம்மாவின் வாயில் இருந்து தோன்றியவர்கள் என்று கூறப்படுகிறது. சாஸ்திரியர்கள் அல்லது ஆட்சி செய்பவர்கள் பிரம்மாவின் கரத்தில் இருந்து தோன்றியவர்கள்.  வணிகப் பிரிவினர்கள் பிரம்மாவின் தொடையில் இருந்து தோன்றிவர்கள். சூத்திரர்கள் அல்லது வேலைக்காரர்கள் பிரம்மாவின் பாதத்தில் இருந்து தோன்றியவர்கள்.

ஆரம்பத்தில் ஒரு மனிதனின் வருணப் பிரிவினை அவனி தொழிலின் நிமித்தம் தீர்மானிக்கப் பட்டது. தனது தொழிலை மாற்றுவதன் மூலம் அவனது வருணப் பிரிவினையையும் மாற்றலாம். ஆனால், பிற்காலத்தில் அது குலமரபுக் கோத்திரமாகி விட்டது.

கரும வினைத் தத்துவம்: வருண முறையைச் சார்ந்துள்ள கரும வினைத் தத்துவம் இந்து விசுவாசத்தின் மையமாகத் திகழ்கிறது. ஆதிகால இந்து சமய போதனையின்படி மனித வாழ்வின் குறிக்கோள், மறைபொருளின் மெய்மையை உணர்வதாகும். கரும வினை தீருமட்டும் பிறவியும் மறுபிறவியும் சூழன்று கொண்டே வரும். கரும வினை தீரும் நிலையை மோக்ஷ்ச (முக்தி அல்லது பரலோகம்) என்றழைக்கிறார்கள். மனித வாழ்வின் மாற்றத்திற்கும் நல்ல தரத்திற்கும் கரும வினை ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.

நவீன காலம்: கீபி 1750க்குப் பிறகு
பிற சமயங்களைப் போல இந்து மார்க்கமும் மறுமலர்ச்சியைக் கண்டு வருகிறது.  ஸ்ரீ ராமகிருஷ்ணன் பரமஷம்சர் தொடக்கி வைத்த மறுமலர்ச்சி கொள்கை மிகவும் பிரபலம் வாய்ந்தது. அவர் ராமகிருஷ்ணரின் போதனையைப் பரப்பி வந்தார். அவர் கிறிஸ்துவின் தரிசணத்தைக்கூட கொண்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது. விவேகானந்தர் அவருடைய சீடர்களில் ஒருவர். தனது குருவானவரின் போதனையைப் பரப்புவதற்கு ராமகிருஷ்ணர் மடங்களை நிரூவினார். அது சிறந்த சமூக சேவை மையங்களாகவும் திகழ்ந்தன. தாகூர் என்பவரும் இந்து விசுவாசத்திற்குப் புண்துணர்ச்சியூட்டியுள்ளார். அவருடைய பாடல்களும் கவிதைகளும் கடவுள் – மனிதனைப் பற்றி உபதேசிக்கிறது.

இந்து மார்க்க விசுவாசத்தில் முக்கியமாகக் கருதப்படுவது மனிதன்தான் கடவுள் என்பதாகும். மனிதன்தான் கடவுள் என்றும் மனிதனின் மார்க்கம்தான் கடவுளின் மார்க்கம் என்றும் தாகூர் பாடியுள்ளார். தற்கால இந்து மார்க்கப் பிரதிநிதியாகக் காந்தியைக் கருதலாம். அவர் மார்க்க போதனையை வாழ்ந்து காட்டியவர். ஆனால், அவருடைய நடவடிக்கைகள் விசுவாசத்தின் விளைவுகள் ஆகும். அவர் தம்முடைய மார்க்கத்தை அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டார் – அதாவது இந்தியாவின் சுதந்திரத்திற்காக. டாக்டர் ராமகிருஷ்ணரும் ஸ்ரீ ஔரோபிந்தோவும் தற்கால இந்து உபதேசப் பிரதிநிதிகளாகக் கருதலம்.


D. இந்து விசுவாசங்கள்

1. வாழ்வின் நான்கு குறிக்கோள்கள்:
a) வாழ்வு தர்மம் ஆகும் (நியாயப்பூர்வமான செயல்)
b) வாழ்வு அர்த்தப்பூர்மானது ஆகும் (ஆஸ்திகளும் சுகபோகங்களும்)
c) வாழ்வு கர்மம் நிறைந்ததாகும் (காமமும் சுகமும்)
d) வாழ்வு மோஷ்சத்தை நாடியதாகும் (விடுதலை). வாழ்வின் இறுதி இலக்கு, இந்த மாம்சத்தில் இருந்தும் மரணம் சார்ந்த வாழ்வில் இருந்தும் விடுதலையடைவதாகும்.

வாழ்வின் நான்கு படிநிலைகள்:-
a) மாணவப் பிராயம்: ஒருவன் குருவின் இல்லத்தில் தங்கி வாழ்வது.
b) இரண்டாவது நிலை தலைவன் பருவமாகும். அவன் குடும்பத்தின் சொத்துடைமைகளை நிர்வாகிக்கிறான். அவன் தனது மனைவியோடு வாழ்கிறான்.
c) மூன்றாவது நிலையில் அவன் ஓய்வு பெற்று  தனது மனைவியோடு வாழ்வின் நெறிகைளை தியானிக்க காட்டுக்குச் செல்கிறான்.
d) நான்காவது (கடைசி) நிலை புனிதமானது. இந்நிலையில் அவன் உலகையும் அதில் அடங்கியுள்ள யாவற்றையும் துறந்து விடுகிறான். (ஹிந்து மார்க்கம் துறவறத்தை ஏற்கிறது).

2. மூன்று வழிகள்
a) முதலாவது - நற்கிரியை
b) இரண்டாவது - பக்தி
c) மூன்றாவது - ஞானம்
குறிப்பு: சிலர் யோகா என்ற தியான நிலையையும் சேர்த்துக் கொள்கிறார்கள்

3. கடவுளும் மனிதனும்
a) தேவன் பொதுவுடைமையும்  பூரணமுமானவர் என்று போதிக்கும் அதே வேளையில்,
b) தனி மனிதனுக்கும் சொந்தமானவர் என்றும் போதிக்கிறது. அவர் மனித நலனில் அக்கறை கொண்டு பூலோகத்திற்கு அவ்வப்போது வருகை தந்து தர்மத்தைக் காக்கவும் அதர்மத்தை அழித்துப் போடவும் கிரியை செய்கிறார். கடவுளே மனிதனின் இலக்கு. அந்தப் பரம பொருளில் ஐக்கியப்பட்டு (அனுபூதி அடைந்து) விடுதலை (முக்தி) பெற வேண்டும் என்பது இந்து தர்மத்தில் இலக்கு.

E. பிரபலமான இந்து தர்மங்கள்

1. வழிபாடு:
இந்துக்கள் தங்கள் இல்லங்களிலும் ஆலயங்களிலும் வழிபடுகின்றனர். வசதி படைத்த பலர் தங்கள் இல்லங்களில் ஒரு பூஜை அறையை ஒதுக்குகிறார்கள். பூஜிப்பது என்பது ஓர் இந்துவின் தனிமனித கிரியை. கிறிஸ்தவர்களைப் போன்று சபையாக ஒன்று கூடும் வழக்கு அவர்களிடம் கிடையாது. தெய்வீக நாமங்களை உச்சரிப்பதும் மந்திரங்களை ஓதுவதும் அவர்களின் ஜெபங்களில் அடங்கும். பாவம் நிறைந்த ஒரு மனிதன் மெய் மறந்து தெய்வ நாமத்தை உச்சரித்த்தின் நிமித்தம் எப்படி முக்தியடைந்தான் என்ற ஒரு புராணக் கதையும் உண்டு. அவருடைய மகனுக்கு இறை நாமமாகிக நாராயணன் என்ற பெயர் வழங்கப்பட்டிருந்த்து. அந்தப் பெயரை உச்சரித்ததால் அவன் முக்கியடைந்தான்.

2. ஆலய ஆராதனை
இந்திய புனித்த் தளங்களுக்குப் பெயர் பெற்றது. கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. உருவத்திலும் உணர்விலும் ஆலயங்கள் பெருமளவில் மாறுபட்டிருக்கின்றன. ஆனால் ஒவ்வொரு ஆலயங்களும் ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணஞ்  செய்யப்பட்டுள்ளது. எனவே, வழிபாடுகளும் அந்த தெய்வத்தை (அல்லது தேவியை) சூழ்ந்தே அமைந்திருக்கும்.

3. பண்டிகைகளும் யாத்திரைகளும்
a) தீபாவளி – அசூரனை கிருஷ்ணன் என்ற கடவுள் ஜெயங் கொண்ட ஞாபகார்த்தத்தில் கொண்டாடப்படும் தீபத் திருநாள்.
b) பல பண்டிகைகள் பருவத்தின் அடிப்படையிலானது. (உம் – கேரளாவில் கொண்டாடப்படும் ஓனமும், தமிழ் நாட்டில் கொண்டாடப்படும் பொங்கலும்)

4. வேற்றுமையில் ஒற்றுமை
இந்து சமயம் (அக்குரோணியம் நிறைந்த) அளவற்ற சமய அனுபவங்களைத் தாங்கி வருகிறது. பல பிரபலமான இந்து தர்மம் இயற்கையான வழிபாட்டோடு இணங்கிப் போகிறது. அவர்களுடைய தத்துவஞானிகள் கடவுளை பூரணம் நிறைந்த உண்மைப் பொருளாகவும் அனைவருக்கும் அப்பாற்பட்ட ’உலக ஆன்மாவாகவும்’ கருதி அவரோடு இணைந்து முக்தி பெற நினைக்கிறார்கள். கல்வியறிவற்ற பாமரர்கள் கடவுளை சாந்தி தரும் அன்பிற்கும் வழிபாட்டுக்கும் உரியவராகக் கருதுகின்றனர். அனைவரும் இந்துக்கள்தாம்.
  
‘சிந்தனைகள் மாறுபடுவது போல, கருத்துகளும் மாறுபடும்’ இதுதான் பொதுவான இந்து பழமொழி. சத்தியம் ஒன்றே: ஞானமுள்ளவன் பல நாமங்களில் அழைக்கிறான் என்று ரிக் வேதம் கூறுகிறது. இதுதான் சர்ச்சைக்குரிய இந்து தர்மத்தின் தீர்மானம். கீதையில் கிருஷ்ணா அர்ஜுணனிடம்:
‘விசுவாசத்தால் எந்த வடிவத்தினாலும் என்னைத் தேடுகிற பக்தனை உறுதிபடுத்துவேன். என்னை நாடுகிற மனிதனை நான் ஏற்றுக் கொள்வேன். அவன் மேற்கொள்ளும் ஒவ்வொரு பயணமும் என்னுடையதே. என்று கூறுகிறான்.

F. இந்து தர்மத்தின் எதிர்காலம்

இந்தியர்களின் மிகப் பரவலான சமயமாக இந்து தர்மம் என்றென்றும் திகழும். இந்நாட்டின் கலாச்சாரம் பெருமளவில் இந்து கலாச்சாரத்தால் தாக்கம் நிறைந்திருக்கிறது. மக்கள் மத்தியில் நிலவுகிற புராணக் கதைகள் இந்துப் புராணங்கள் ஆகும்.
  
மொழிகள் பலவாக இருக்கலாம். சமயங்களும் பலவாக இருக்கலாம். ஆனால், சுமார் 1 கோடி மக்கள் வறுமையில் வாடிகின்றனர். இது மிகவும் அதர்மம். இவற்றைச் சமாளிக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன.
  
இந்து தர்மம் மிதவாதமானது என்று கூறப்படுகிறது. இந்த மிதவாதப் போக்கினால் அது தனது எதிரிகளை வெல்லக்கூடியது! வருண (ஜாதி) வேறுபாட்டுச் சிந்தனைகள் வலிந்து நிற்கிறது. கிறிஸ்தவர்களும் பல இடங்களில் வருண பேதத்தில் சிக்கிக் கிடப்பது அதன் வலிமையை வெளிப்படுத்துகிறது. இந்து தர்மத்தை நவீனப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிஜாத்தியா வித்திய பகவான் (இந்திய ஞான மடம்) போன்ற சஞ்சிகைகள் இந்து தர்மத்தையும் கலாச்சாரத்தையும் தாங்கி வருகின்றன.

G. மலேசியாவில் இந்து தர்மம்
    
இந்து தர்மத்தை நவீனப் படுத்தும் முயற்சிகள் இந்நாட்டிலும் மேள்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ  சுவிசேஷப் பணிகளால் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மலேசிய இந்தியர் காங்கிரஸ் (MIC) இந்து தர்மத்தையும், தமிழ் மொழியையும், இந்திய கலாச்சாரத்தையும் தார்மீக அளவில் பேணி வருகிறது.
    
மற்ற சமயங்களைப் போல் இந்து தர்மத்திற்கு இவற்றையெல்லாம் எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. பல இந்துக்களுக்குத் தங்கள் சொந்த சமயத்தில் போதனை வழங்கப்படுகின்றன. தமிழ் மொழியும் மறு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன் வளர்ச்சிக்கு இன்னும் அதிகமான பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன.  சாய் பாபா உபதேசம் சிக்கனம் நிறைந்ததாகக் காணப்படுகிறது.
    
ஆனால், இந்திய மற்றும் இற்துக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. இந்நிலை துடைத்தொழிக்கப்பட வேண்டும்

மேற்கோள் நூல்கள்: 
1.   David Brown, A guide To Religions (TEE Study Guide – 12, SPCK-1995)
2.   T.M.P Mehadevan, Outlines of Hinduism

பேராயர் டத்தோ டாக்டர் எஸ். Batumalai (Ph.D)
ஏப்ரல் 2010


Translated by:
rawangjohnson@yahoo.com

Friday, May 7, 2010

பௌத்தர்களைப் பற்றி அறிந்து கொள்வோம்

Buddisem


அத்தியட்சாதீன நீள்விரி இறையியல் கல்வித் திட்டம்



மலேசியர்களின் சமய நம்பிக்கைகள் தொடர்பான ஓர் அறிமுகம்


முகவுரை
பௌத்தம் கோடிக்கணக்கான மக்களின் மார்க்கமாக இருக்கிறது – ஒரு வேளை 60 கோடியை எட்டலாம். கிறிஸ்தவம் இஸ்லாத்தைப் போன்று இதுவும் பிரச்சாரத்தின் மூலம் பரவியது. இன்று மேற்கத்திய நாடுகளையும் சென்றடைந்துள்ளது.

பௌத்தம் 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்து தோன்றியுள்ளது. ஆற்றல் வாய்ந்த நாகரீக உந்துதலாக செயல்பட்டு, கலை, இலக்கியம், மற்றும் பிற துறை நடவடிக்கைகளையும் எழுச்சியூட்டியுள்ளது. இன்று பர்மா, தாய்லாந்து, தீபெத்து, கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளின் தேசிய மதமாகத் திகழ்கிறது. இலங்கை, சீனா, ஜப்பான் மற்றும் கொரியாவின் பெரும்பான்மை மக்கள் பௌத்தர்கள்.

இரண்டாகப் பகுக்கப்படும் பௌத்த கொள்கையில் பல பிரிவுகளும் உள்ளன. அவை ஹினாயானா மற்றும் மஹாயனா என்றழைக்கப்படுகின்றன.

A. பொளத்த மதத்தை நிறுவியவர்
பௌத்தர் கௌதமன் குடும்பத்தைத்ச் சேர்ந்தவர். அவரின் இயல் பெயர் சித்தாத்தர். அவரின் தந்தையாரின் பெயர் சுத்தோஹோத்தனா. அவர் ஓர் இந்து பிரபுகுல தலைவர். தாயாரின் பெயர் மஹாமாயா. தம் மகன் எந்த வேதனையையும் அதிருப்தியையையும் அடையக்கூடாது என்று சித்தாத்தாவை மிகவும் கவனமாக பார்த்துக் கொண்டோர். ஆயினும் அந்தப் பிள்ளையான இளவரசர் வாழ்வின் கொடூர நிதரிசனங்களைக் காணும் நேரம் வந்தது: ஒரு நாள் கந்தலான துணியை மட்டும் இடுப்பில் கட்டித் திரிந்த தலைமயிர் நரைத்த முதியவரைக் கண்டார். இன்னொரு நாள் ஒருவர் மூச்சுத் திணரலால் வேதனையோடு தரையில் கதறித் துடித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். மற்றுமொரு நாள், ஒரு கூட்டத்தார் ஒரு பிரேதத்தைச் சுமந்து செல்வதைக் கண்டார். இவற்றையெல்லாம் கண்ட அவர் சஞ்சலமும் வேதனையும் துக்கமும் அடைந்தார். எல்லா வேதனைகளுக்கும் அவர் பதில் காண முற்பட்டார். வியாகுலத்தின் மத்தியில் அவர் அமைதியான வாழ்வையும், அபாயத்தின் மத்தியில் பாதுகாப்பான வாழ்வையும் வாழ்ந்து வந்த்தை அவர் உணர்ந்தார். அவர் உலகத்தை வெறுத்து விட்டு, அழிந்துபோக்க் கூடிய வாழ்வின் பாடுகளின் மத்தியில் அமைதியையும் பாதுகாப்பையும் தேடப் புறப்பட்டார்.

ஒரு நாள் தம் குடும்பத்தையும் மகன் ராகுலாவையும் விட்டுவிட்டு தத்துவஞானிகளிடமும் துறவிமார்களிடம் ஞானத்தைத் தேடிச் சென்றார். அவர் ஒரு பதிலையும் காண்ட்டையவில்லை. தியானத்திற்குப் பிறகு அவர் வாழ்வின் புதிருக்கு தீர்வு கண்டதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு ஞானம் பெற்றவர் என்ற பொருளைச் சுமக்கும் புத்தர் என்ற பெயரோடு திகழ்ந்தார். அப்போது அவருக்கு வயது 35.


B. புத்த மதப் போதனைகள்

1. மேன்மை நிறைந்த நான்கு சத்தியங்கள்
a. உலக வாழ்வு வேதனை நிறைந்த்து; இது மேன்மை நிறைந்த சத்தியமாகும்
b. வேதனையின் பிறப்பிடத்தை எப்படி ஒழித்துக்கட்ட முடியும்
c. தீர்வானது ஒரு மனிதனுக்கு அமைதியைத் தரும்

2. வேதனையானது ஒரு பொதுவான உண்மையாகும். பாலி மொழியில் இதற்கு துக்கம் என்று பொருள்.

3. மேன்மை நிறைந்த இரண்டாவது சத்தியம் வேதனைக்கான காரணத்தை கூறுகிறது: உலகப் பற்றே அதற்குக் காரணம். அறியாமை பற்றுக்கு வழி வகுக்கிறது; அறியாமை ஆசையைத் தூண்டுகிறது, அது வேதனையை விளைவிக்கிறது.

4. 3வது மேன்மையான சத்தியம், வேதனையிலிருந்தும் அடிமைத்தனத்தில் இருந்தும் விடுதலையடையும் ஒரு நிலை உண்டு என்று பறை சாற்றுகிறது. அதன் இறுதி விளைவு நிர்வாணா (நிபானா) ஆகும். இதனை சமாதானம் என்றும் சந்தோஷம் என்றும் புரிந்து கொள்ளலாம்.

5. 4வது மேன்மையான சத்தியம், நிர்வாணா நிலைக்கு வழிவகுக்கும் பாதையைப் பறை சாற்றுகிறது. அது 8 முனைப் பாதை என்று அறியப்படுகிறது:

நீதி:
5.1 நேர்மையான பேச்சு
5.2 நேர்மையான செயல்
5.3 பிறருக்குத் தீங்கு விளைவிக்காக முறையில் பொருளீட்ட நேர்மையான முறையில் வாழ்தல்.

ஒருவந்தச் சிந்தனை:
5.4. நேர்மையான முயற்சி: உம். பொல்லாத சிந்தனையைத் தவிர்த்தல்
5.5. நேர்மையான சிந்தனை – உடல், உணர்வு, சிந்தையின் ஒவ்வொரு நிலையிலும் விளிப்பான கவனம் செலுத்துதல்
5.6. நேர்மையான ஒருவந்தம்: உம். தியானம்
5.7. நேர்மையான கருத்து: நான்கு சத்தியத்தைப் புரிந்து கொள்ளுதல்
5.8. நேர்மையான சிந்தனை (உம். இச்சை, கொடுமையில் இருந்து விடுதலை)

ஒருவன் வாழ்வின் வழியைப் பெற, தனக்குத் தானே ஆசானாகச் செயல்பட வேண்டும் என்று பௌத்தம் கூறுகிறது. ஒவ்வொருவரும் தங்கள் சொந்த கிரியைகளினாலே இரட்சிப்பைத் தேடிக் கொள்ள வேண்டும். தான் செய்ய வேண்டியதை பிற ஒருவனாலும் செய்ய இயலாது. இதனைச் சொந்த முயற்சி அல்லது சொந்த வெற்றி என்று கூறுவர். ஆனாலும், மஹாயானா கோட்பாட்டில் ஓர் இரட்சகரின் பங்கு செருக்கப்படுகிறது. தேர்வடா கோட்பாட்டில், நான் புத்தரில் சரணடைகிறேன் என்று ஓர் உபாசகன் கூறுகிறான்.

ஆன்ம மறுப்புச் சித்தாந்தம்:
மனிதனின் ஆன்மா நிலையானது என்று பொளத்தம் போதிக்கவில்லை. மாறாக, ஆன்ம மறுப்பை (அன்னாத்தா) வலியுறுத்துகிறது அனைத்தும துக்கத்தைச் (வேதனை, அழிவு, மரணம்) சார்ந்த்து என்று நம்ப்ப்படுகிறது.

கர்ம்மும் வினையும்: கர்மத்தை, வினையும் விளைவும் விதியாகக் காணலாம். மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். (கர்மம் – செயல், வினை, கிரியை)

இப்போராட்டத்தை எப்படி நிறுத்துவது: 8 முனைப் பாதையின் இறுதியிலக்கு நிர்வாணா ஆகும். நிர்வாணா என்பது பேராசை என்ற வளிமைத்தை நிர்மூலமாக்கும் நிலை வாழ்வு, இச்சை, பேராசை, சுயநலம், பசிதாகம் ஆகிய எல்லாவற்றையும் ஒருவன் நிர்மூலமாக்க வேண்டும்.

புனிதத்திற்கான பாதை: இந்த 8 முனைப் பாதையில் வெற்றி பெறுபவன், 4 புனித நிலைகளிலும் வெற்றி பெறுகிறான்:

a. முதல் நிலையில் ஒருவன் இந்த 3 தடங்கல்களில் இருந்து சுதாகரித்துக் கொள்கிறான்
i. உண்மையில் தனக்கு மாறாத ஆன்மா இருக்கிறது என்ற மூட நம்பிக்கை;
ii. புத்தர் மீதுள்ள ஐயம்
iii. வேதானைகளில் இருந்து விடுபட மேற்கொள்ளும் அதிகப்படியான சடங்குகள்

ஒருவனை எல்லா தடங்கல்களில் இருந்தும் விடுவிப்பதே இந்த எல்லா முயற்சிகளின் இலக்கு. நிர்வாண நிலையை அடைவதே அதன் இறுதி இலக்கு.



C. புத்த தர்ம சாஸ்திர நூல்கள்
புத்த சீடர்கள் முதலாவதாக, துறவறத்திற்காக தங்கள் எஜமானரின் தீர்க்கமான ஒவ்வொரு வார்த்தைகளின் மற்றும் கட்டளைகளின் ஆதாரங்களையும் தேடினர். இரண்டாவதாக, தலைமைக் கல்விமான்கள் அவருடைய போதனைகளுக்கு வழங்கிய விளங்கங்களைத் திரட்டினர். இவை தேர்வடா சாஸ்திரங்கள் என்றழைக்கப்படுகின்றன. இந்தத் தலைமைக் கல்விமான்கள் மூப்பர்களின் பண்டசாலை சட்ட அறிஞர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். ஆனாலும், பல்வேறு தேசங்களின் பௌத்தர்கள், தங்கள் பண்டசாலைப் பெருக்கத்திற்காக சொந்த நூல்களைச் சேர்த்துக் கொண்டனர்.

தேர்வடா சாஸ்திரம்: இந்த விதி திரிப்தாக்கா (3 கூடைகள்) என்றும் அறியப்படுகிறது. இதில் மூன்று வெவ்றேறு நூல்கள் அடங்கியுள்ளன. அவை:

a. விநாய கூடை (கட்டொழுங்குக் கூடை) துறவிமார்கள் மற்றும் கன்னிகாஸ்திகளின் வாழ்வுக்குரியது
b. சுத்தா கூடை (பிரசங்கக் கூடை) பொளத்தரின் பிரசங்கங்களின் தொகுப்புகளோடு பழமொழிகளும் அவரின் ஏனைய போதனைகளும் அடங்கியுள்ளது.
c. அபிதம்மா கூடை (நுண்பொருள் தத்துவக் கூடை) பிந்திய கால வம்ச மரபு பண்டிதர்களின் தத்துவ நூல்களைக் கொண்டுள்ளது.



மஹாயானா சாஸ்திரம்
a. ஆரம்ப கால சாஸ்திரங்கள் கி.மு. 100 – 800ல் வடமொழியில் எழுதப்பட்டது.
b. ஒரு மஹாயானா கோட்பாடு உண்டு. ஒவ்வொரு தேசங்களும் தங்கள் சொந்த மொழிகளில் உரைகளைத் தொகுத்துக் கொண்டன. (உம் – சீனா, திபேத்து, நேப்பாளம், கொரியா, ஜப்பான்).

c. இந்த சாஸ்திரங்கள் 3 பெரிய குழுக்களாகப் பிரிக்கப்படுகின்றன:
• விநயா: சமய முறைகளின் விதிகள்;
• சுத்ரா: பொதுவாக தேர்வடா சுத்தா கூடையில் அடங்கியுள்ள உபதேசம்
• சாஸ்திரங்கள்: தத்துவ விவாதங்கள்


D. முக்கிய பொளத்த பிரிவினைகள்

I. பௌத்த போதனைகள் பெரும்பாலும் தென்னக வளாகத்தில் நிலைத்திருக்கின்றன (இலங்கை, பர்மா, தாய்லாந்து)

II. மஹாயானா பௌத்தம்: (பெருஞ் சக்கரம்)
a. அவருடைய பிறப்புக்கும் வாழ்வுக்கும் 200 ஆண்டுகளுக்குப் பிறகு இது பிற நாடுகளில் வளர்ந்த்து.
b. இது ஒரு மிதவாத போதனை (உள்ளூர் கலாச்சாரத்தையும் தத்துவத்தையும் உள்வாங்கிக் கொள்ளும்).
c. இது, விசுவாசமும் தியானமும் ஒரு பௌத்தனை உச்சநிலை ஆன்மீக இலக்கைச் சென்றடையச் செய்யும் என்று போதிக்கிறது.
d. விசுவாசத்தின் மூலம் இரட்சிப்பைப் பெறுதல் என்பது மஹாயானா பௌத்த கோட்பாட்டின் முக்கிய போதனைகளில் ஒன்று.
e. தேர்வாடா பௌத்தத்தின் இறுதி இலக்கு நிர்வாண நிலை.
f. இப்போதனையின் இலக்கு போதி சாஸ்திரம். (கருணை நிறைந்த மனிதன்).
g. எல்லா நல்ல பௌத்தர்களும், துறவிகளும், சராசரி மனிதர்களும் இந்த சுவர்க்கத்திற்குப் போக முடியும்.
h. ஜெபம், வழிபாடு, ஆராதனை – இவை மஹாயானா தியானத்திற்கு முக்கிய ஆதாரங்கள்.


III. ஷென் பௌத்தம்: சீனாவில் தொடங்கி ஜப்பானில் பரவியது

a. ஷென் என்றால் ஜப்பானிய மொழியில் ஆழ்ந்த சிந்தனை என்று பொருள். (இது ஒரு ஞானம் பெரும் நிலை)

b. ஒழுக்கப்பூர்வமான தியானத்தில் மூழ்கியிருக்கும் போது ஒருவனுக்கு மின்னலைப் போன்று ஞானம் தோன்றும்.



IV. தாய்லாந்தின் நவீன இயக்கம்

a. இது தியானத்தின் எழுச்சி நிலை. இரண்டு விதமான தியான நிலையங்கள் தோன்றியுள்ளன: 1). ஆழ்ந்து உற்றுநோக்கும் தியானம், 2). உள்நோக்கிப் பார்க்கும் தியானம்.

b. கல்வி: பௌத்தர் மற்றும் அவருடைய சீடர்களைப் பற்றிய தொடர்ச்சியான கல்வியும் உதவியுள்ளது. பௌத்தர்களும் தங்கள் சொந்த பல்கலைக் கழகங்களை நடத்துகின்றனர்.



E. வழிபடும் முறைகள்
a. நடத்தையில் தியானமும் கவனமும் செலுத்துவதோடு, நல்ல சிந்தனையும் பௌத்தர்களின் ஜீவியத்தில் இடம் பெறுகிறது. இது பௌத்த துறவரத்தில் காணப்படுகிறது.

b. தேர்வாடா தேசங்களில் சராசரி பௌத்தர்கள் தங்கள் எஜமானரை மனிதனுக்கும் அப்பாற் பட்டவராகக் கருதுகிறார்கள். அவரை வாழ்ந்துணர்ந்து அன்பு காட்டிய தேவாதி தேவனாகவும் எல்லா வணக்கத்துக்கும் பாத்திரராகவும் நம்புகிறார்கள்.

1. சரணாதிகதி உபதேசங்களும்

மூன்று சரணாதிகதி நிலைமை உள்ளன:

• நான் சரணடைய பௌத்தரை நாடுவேன்.
• நான் சரணடைய சித்தாந்த்த்தை நாடுவேன்.
• நான் சரணடைய துறவர சகோதரர்களை நாடுவேன்.


அவர்களுக்கு ஐந்து உபதேசங்களும் உள்ளன:

• உயிரைக் கொல்லக் கூடாது
• திருடக் கூடாது
• விபச்சாரம் செய்யக் கூடாது
• பொய்யுரைக்கக் கூடாது
• மது அருந்தக் கூடாது


2. காணிக்கை: வழிபடுபவர்கள் எல்லா வழிபாட்டு நிலையங்களிலும் காணிக்கை வழங்குகிறார்கள். (உம்- மெழுகுவர்த்தி, சாம்பிராணி, உணவு போன்றவை)

3. ஜெபங்களும் தூபமிடுதலும்: வழிபடுபவர்கள் சாம்பிராணி தூபமிட்டு மனித தேவைகளுக்கும் பொருளாதார ஆசீர்வாத்த்திற்கும் வேண்டுகிறார்கள்.

அவர்கள் மும்மூர்த்திகளின் சிந்தனை, சொல், வார்த்தைகளால் உண்டான பாவங்களுக்கும் மன்னிப்புண்டாக ஜெபிக்கிறார்கள் (பௌத்தர், சித்தாந்தம், துறவிமார்கள்).

4. பெலனீட்டு மாற்று: இந்தக் காணிக்கைகளால் உண்டான பெலனை மரித்தவர்களுக்காகவும், தெய்வங்களுக்காகவும், பிற உயிர்களுக்காகவும் ஈடுகொடுக்கிறார்கள்.



5. யாத்திரிகள் (பயணிகள்): பௌத்தர்

பௌத்தர், உணர்ச்சிப்பூர்வமாக நோக்க வேண்டிய 4 இடங்களைப் பிரகடனப் படுத்துகிறார். அவை, அவர் பிறந்த இடம், ஞானம் பெற்ற இடம், முதலாவது பிரசங்கித்த இடம், மற்றும் அவர் நிர்வாண நிலையில் மரித்த இடம் ஆகும்.

ஒவ்வொரு பௌத்த தேசங்களிலும் தியானத்திற்கான சிறப்புப் பீடங்கள் உள்ளன. (உதாரணத்திற்கு இலங்கையில் உள்ள அதாமின் அமைதி பீடத்தைக் குறிப்பிடலாம்).


F. சிறப்பு பௌத்த பீடங்கள்:

ஒவ்வொரு பௌத்தருக்கும் தனக்கென்று ஒரு சிறப்பு பீடம் இருக்கும். ஆயினும் ஒரு பௌத்த ஆலயத்தில், பௌத்தரோடு தொடர்புடைய 3 காரியங்கள் காணப்படும்.

a. பாதுகாக்கப்பட்ட அவருடைய உறுப்புகளின் ஆராதனை: கவனமுடன் பாதுகாக்கப்பட்ட அவருடைய பல், தலை முடிகள், கழுத்துப் பட்டை எழும்பு)
b. போதி மர மரபு. ஒவ்வொரு ஆலயத்திலும் மடாலயம் இருக்கும். ஒவ்வொரு போதி மரத்திலும் தேவன் குடியிருக்கிறார் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.
c. புத்த உருவ ஆராதனை. ஆரம்ப காலத்தில் புத்த உருவம் கிடையாது. எந்த வகையிலும் தம்மை ஆராதிக்க வேண்டும் என்று அவர் விரும்பவில்லை. பாறைகளில் செதுக்கப்பட்ட சக்கர வடிவம், பாத வடிவம், தாம் அமர்ந்த இருக்கை போன்றவற்றின் மூலம் அவர் காட்டப்பட்டார். பௌத்தரின் உருவங்கள் மூன்று அங்க ஸ்திதி நிலைகளில் காட்டப்படுகின்றன: 1). நிற்றல், 2). அமர்தல் மற்றும்3). சாய்ந்து ஓய்வெடுத்தல்.



G. பௌத்தர்கள்
“வேதனைப்ப்டுதலும் வேதனையைத் தாங்குதலும்” இது எல்லா பௌத்த மத மற்றும் கோட்பாடுகளையும் தொகுத்து விடுகின்றது. ஒவ்வொரு பௌத்தரின் குறியிலக்கும் வேதனையில் இருந்து விடுதலை பெறுவது ஆகும். முழு விழிப்புணர்வோடு தனது பிறவி பலனை அடைவதற்கும் மறுபிறப்பில் சுகபோகங்களை அனுபவிக்கவும் அவன் கடுமையாக உழைக்கிறான்.

பெரும்பாலானோர், தங்கள் வாழ்வு நிறைவடைந்தவுடன் மீண்டும் வாழத் தொடங்குகிறார்கள் என்று நம்புகின்றனர். இது இறப்பு ஜெபங்களின் போது துக்கம் அணுசரிக்கிறவர்கள் மறுபிறப்பில் மீண்டும் தங்கள் அன்பானவர்களைச் சந்திக்கும்படி வேண்டிக் கொள்வதன் மூலம் தெள்ளந் தெளிவாக காணப்படுகிறது.

முடிவுரை
ஒரு மாணவர் பௌத்த ஆலயத்தைச் சென்று காண்பதும் அவர்களின் ஏதாவது ஒரு சாஸ்திர நூலை வாசிப்பதும், ஒரு பௌத்த சமையத்தவரோடு பேசுவதும் உதவியாக இருக்கும். அவர்களில் சிலர் தாவோ மார்க்கத்தார்.



பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை (ஏப்ரல் 2010)



Translated by: rawangjohnson@yahoo.com

Thursday, May 6, 2010

நமது மகளீர்களைத் தேவனின் தூதுவர்களாகக்க அதிகாரம் கொடுப்போம்

Empower Women For Gods Mission

2020க்குள் அற்புதமான காரியங்கள் நடக்கப் போகின்றன என்பதை அறிவதில் நாம் களி கூறுகிறோம். மேற்கு மலேசிய மாகாணம் நமது இலட்சியம். இது எப்படி ஆகக் கூடும்?


மகளீர்களும் அதிகரம் பெறவுள்ளனர்

1. தேவனின் செய்தியைக் கூறுவதில் புதிய ஏற்பாட்டுப் பெண்கள் விஷேசமான முறையில் பங்காற்றியுள்ளார்கள். இயேசு சிலுவையில் அறையப்படும்போதும் (லூக்கா 23.27), உயிர்த்தெழுத போதும் (லூக்கா 24.9-10) அவர்கள் அங்கே இருந்திருக்கிறார்கள். புருஷர்மார்கள் பின்வாங்கியபோது ஸ்த்தீர்மார்கள் துணிகரமாக கல்லறைக்குச் சென்றிருக்கிறார்கள். தேவனின் இரட்சிப்புண்டாக்கும் உண்மையை பகிர்ந்து கொள்ள அவர்களுக்கு நாம் அனுமதி வழங்க வேண்டும் – மேலும் அதிகமான ஆடவர்களும் மகளீர்களும் இரட்சிக்கப்பட இந்த அங்கீகாரம் அவர்களுக்குத் தேவை. உயிர்த்தெழுதலின் முக்கிய சாட்சியாகத் திகழ தேவன் ஒரு சாதாரண பெண்ணையே தேர்ந்தெடுத்தார். அதே போல், பின்னர் மகதலேனாளாகிய மரியாளுக்கும் கட்டளையிட்டார். அவளே தேவனின் முதலாவது தூதுவள். இயேசு உயிர்த்தெழுந்தார் என்ற செய்தியைத் தனது சகோதரர்களுக்கு அவளே முதலாவது அறிவித்திருக்கிறாள். நம்பிக்கைக்கும் ஜீவனுக்கும் உண்டான செய்தியை அறிவிக்க அவளே பொறுப்பாக்கப் பட்டாள். நான் கர்த்தரைக் கண்டேன் (யோவான் 20.18) அவளே முதலாவது அறிவித்திருக்கிறாள்.

2. இறையியல் பயிற்சிகளில் மகளீர்களே முதன்மையாய் நிற்கிறார்கள்
மலேசிய இறையியல் பயிற்சியிலும், அத்தியட்சாதீன நீளவிரி இறையியல் பயிற்சியிலும் மகளீர்கள் வந்து கலந்து கொள்வதில் நாம் நன்றியுடையவர்களாய் உள்ளோம். மொத்தம் 68 மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மகளீர்கள். இது ஓர் அர்த்தம் வாய்ந்த எண்ணிக்கை. அங்கீகாரம் தரும் பயிற்சியை மேற்கொள்வதில் அவர்கள் தேவனின் அழைப்புக்கு இணங்கியுள்ளனர். அவர்கள் மேலும் கனம் பண்ணப்பட்டு ஊக்கப்படுத்தப் பட வேண்டும். இந்த அங்கீகாரம் மேலும் அதிகமான மகளீர்களை நீளவிரி இறையியல் பயிற்சிக்கு வழி நடத்தும். அத்தியட்சாதீன ஆலோசனா சபா, அதன் துணைக் குழுக்கள், மற்றும் மாகாண ஆலோசனா சபாவின் பல்வேறு பகுதிகளுக்கு அவர்கள் அனுப்ப்ப்பட வேண்டும். ஆயர்மார்களாகவும், குருமார்களாகவும், உபதேசகர்களாகவும் சுகமளிப்பவர்களாகவும் அவர்களை உயர்த்த வேண்டும். ஒவ்வொருவரையும் சீர்படுத்தி மாற்ற மகளீர்களுக்கு நியாயமான உரிமை வழங்கப்பட வேண்டும். கிறிஸ்துவின் சாயலுக்கு ஒவ்வொருவரையும் சீர்படுத்தி மாற்றுவது நமது கடமையாய் இருக்கிறது. பல அபலைகள் தங்கள் நாவுகள் கட்டப்பட்டுள்ளதாக உணர்கிறார்கள். 2020க்குள் 200 பேர் லே பாஸ்டர்களாகவும் லே ரீடர்களாகவும் அமர்த்தப்படுவதோடு 50 மகளீர் டீக்கன்மார்களும் தேவைப்படுகிறார்கள். மகளீர்கள் மத்தியில் உபாசகர்கள் மற்றும் சட்ட நிபுணர்களைப் பற்றி நினைத்துப் பார்க்க முடிகிறதா?

3. நம் நாட்டில் அதிக அளவிலான மகளீர்கள் உயர்க் கல்வியைப் பெற்று வருகிறார்கள். ஆடவர்கள் தேவ அழைப்புக்கு இணங்க இது இன்னும் அதிகமான சவாலாக அமையக் கூடும். மகளீர்களும் ஆடவர்களுக்கு நிகராக கடின உழைப்பிலும் அர்ப்பனிப்பிலும் ஈடானவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர். உலகப் பிரகாரமான தலைமைத்துவத்திலும் மகளீர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்கள் தேவனின் ஒளியாகவும் உப்பாகவும் திகழ சபை அவர்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். பல்வேறு நிலைகளில் அவர்கள் தேவனின் காரியஸ்தராகவும் தூதுவராகவும் திகழ சபை அங்கீகாரம் வழங்க வேண்டும். 

4. நற்செய்தியான - சுவிசேஷப் பணிகளை நிறைவேற்றுவதில் பெண்கள் ஆற்றல் மிக்கவர்கள்.
1970ம் ஆண்டுகளில் நான் ஈப்போவில் பணியாற்றிய காலத்தில், பரிசுத்த ஆவியானவர் சபையின் மகளீர்கள் தோட்டப் புறங்களில் சுவிசேஷப் பணிகளை மேற்கொள்ள அமர்த்தப்பட்டனர். ஆடவர்கள் முன் வாசலில் அழைக்கப் பட்ட நேரத்தில், மகளீர்கள் பின்னால் உள்ள சமையலறை வாசலில் தேவனுடைய பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு விட்டனர். சுவிசேஷப் பணியைத் தொடங்குவதற்குச் சமயலறை சிறந்த இடமாகும். அவர்கள் மகளீர்களின் உள்ளத்தை நன்கு அறிவர். உணவு பறிமாறி, மகளீர்களின் பிரச்சனைகளுக்குச் செவி கொடுப்பதன் மூலம் அவர்களின் உள்ளத்தைத் தொட்டு விடுவர். சரீர ஆன்மீகத் தேவைகளைச் சந்திப்பதன் மூலம் பல மகளீர்களைக் கிறிஸ்துவண்டை அழைந்து வந்து விடுவர்.


மகளீர்களுக்கு அதிகாரத்தை வழங்குவோம்:

• நற்செய்தியைக் கூறி ஆடவர்களின் உள்ளத்தைத் தொட....
• இறையியல் பயிற்சியைப் பெற....
• உலகப்பிரகாரமான துறைகளைத் தலைமைத் தாங்க...


பேராயர் டத்தோ பத்துமலை.
ஏப்ரல், 2010


Translated by: rawangjohnson@yahoo.com
Diocesan TEE Programme- Empower our women for God’s Mission in the Diocese