Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Thursday, February 3, 2011

51. யோசுவா - மோசேயின் பொறுப்பை ஏற்றவன்




கரு வசனங்கள் - தேவன் கட்டளையிட்டபடி மோசே செய்தான்.
நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம் (யோசுவா 24.15)

வரலாற்றுக் குறிப்பு
v      மோசேயின் பொறுப்பையேற்று யோசுவா தேவ ஜனங்களை வாக்குத் தத்தம் செய்யப்பட்ட நாட்டிற்கு அழைத்துச் சென்றான்.
v      வனாந்திரப் பயணத்தை மேற்கொண்டு, வாக்குத்தத்தம் செய்யப்பட்ட நாட்டை யோசுவா சென்றடைந்தான்.
v      நானும் என் வீட்டாருமோவென்றால் ஆண்டவரையே சேவிப்போம் என்று கூறி தனது மக்களை விசுவாசத்திற்குள் கொண்டு வந்தவன்.

1.      முன்னுரை
ஆரம்பத்தில் அவர் (ஹோசியா) ஓசியா அல்லது இரட்சிப்பு அல்லது  குசலன் என்றழைக்கப்பட்டான். (நெகேமியா 8.17, அப்7.45, எபி8.8). யோசுவா என்றால் யேகோவா அல்லது இரட்சிப்பு என்பதாகும்.

மோசேயின் பொறுப்பை ஏற்ற யோசுவா, எகிப்தை விட்டு வெளியேறும் பயணத்தில் ஒரு முக்கிய பங்காற்றியுள்ளார். இஸ்ரவேல் சேனைத் தளபதி என்று அறிமுகப்படுத்தப் பட்ட அவன் ஒருவன் மாத்திரம், மோசே பிரமாணத்தைப் பெரும் பொருட்டு மலையேறியபோது பாதி வழி வரைக்கும் அனுமதிக்கப்பட்டான். வாக்குதத்தம் பண்ணப்பட்ட நிலத்தை விசாரிப்பதற்கு ஒற்றனாக காளேப்புடன் அனுப்பி வைக்கப்பட்டான். பிற ஆதாரங்கள், அவன் மோசேக்கு நிலையாக பாதுகாப்பு கொடுத்து வந்தான் என்று கூறுகின்றன. தேவ ஜனங்களை வழிநடத்துவதற்குத் தேவையான அடிப்படைப் பயிற்சிகளை முதன்மை நிலையில் பெற்றுக் கொண்டான்.

தலைமைத்துவத்திற்குத் தேவையான அடிப்படைத் தகுதி, தனது பொறுப்பிற்குத் தகுதியானவரைத் தயார்படுத்தி விட்டுக் கொடுப்பதாகும். தனது பொறுப்பை ஒப்படைப்பதற்கத் தகுதியானவரைத் தேர்ந்தெடுப்பதில் மோசே மிகச் சிறந்த முடிவை எடுத்துள்ளான். (எண்27.15-23). தனது ஆளுமையை யோசுவா எப்படி வெளிப்படுத்தினான்?

மோசேயின் தலைமைத்துவத்தை யோசுவா உண்மையோடு பயின்றதோடு, வனாந்திரப் பயணத்திலும் சேர்ந்து கொண்டான். எகிப்தின் அடிமைத்தனத்தை அனுபவித்து, பின்னர் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட நாட்டை நோக்கி பயணித்த இரண்டு முதியவர்களில் அவனும் ஒருவன்.

மோசேயின் பொறுப்பை ஏற்பதற்கு நீண்ட காலம் பிடித்தது. 80 வயதில்தான் அந்தப் பொறுப்பு கிடைத்திருக்கிறது. எகிப்தை விட்டுப் புறப்படும்போது அவனுக்கு வயது 40. இஸ்ரவேலர்கள் அமலேக்கரோடே யுத்தம் பண்ண வேண்டும் என்பதை அறிந்து கொண்ட முதல் மனிதன் (யாத்17.9)

       யோசுவா மோசேயோடு காட்டில் அலைந்து திரிந்தான். பின்னர் ஜனங்கள் மீது முழு அதிகாரம் வழங்கப்பட்டது. (எண்.27.18-23, உபா.31.14). ஆறு வருடங்களாக தேவ சேனையை வழிநடத்தி, ஆறு தேசங்களையும் முப்பத்தோரு அரசர்களையும் தன் ஆதிக்கத்தில் கொண்டு வந்தான். 110 வயதில் மரித்தான்.

விசுவாசம், நம்பகத் தன்மை நிறைந்த நடுநிலை, தெளிவான சிந்தனை ஆகியவை யோசுவாவின் குணாதிசயங்களில் வெளிப்படுகிறது. ஆவியானவர் அவரோடிருந்தார் (யோசுவா 27.18). மோசேயின் கட்டளைக்கு இணங்கி அவன் கானான் தேசத்தைத் தாக்கினான். தாக்குதலுக்கு முன்பாக தனது ஜனங்களுடனான உறவைப் புதுப்பித்துக் கொண்டான். சங்கடம் நிறைந்த நிலையில் சிறப்பு விண்ணப்பம் மூலம் உதவிக்காக மன்றாடினான் (யோசுவா 10.12-14). அவனுடைய விசுவாசமும் தெய்வ பக்தியும் தனது ஜெனங்களுக்கு வழங்கிய இறுதி செய்தியில் காணப்படுகின்றன. இவை, அவன் மீது உள்ள நமது மரியாதையை அதிகரித்துக் காட்டுகிறது.


2.      முடிவுரை

       மோசே எகிப்திய கலாச்சாரத்தில் பயிற்சி பெற்றவன். தான் எதிர்நோக்கிய சவாலில் தேவனின் வழிநடத்துதலில் விசுவாசமாய் இருந்தான். தேவனின் மூலம் உண்டாகும் ஆயத்தமும் ஊக்கமும் செம்மையான தலைமைத்துவத்தை உருவாக்குகிறது. யோசுவாவின் செயலாக்கத்தில் மோசேயின் ஆதிக்கம் அதிகளவில் வெளிப்பட்டது. மோசேயே யோசுவாவிற்கு முன்னதராணத் தலைமைத்துவத்தை வெளிப்படுத்தினார். தேவனிடத்தில் தனது கீழ்ப்படிதல் மூலம் அவருடைய ஜனங்களுக்கு மீட்பையும் சமூக நலனையும வழங்கினான். மோசேயின் தலைமைத்துவத்தை ஏற்பதற்கு யோசுவா பொறுத்தமானவனாக தேவனிடத்தில் காணப்பட்டான்.


3.      வேத மேற்கோள்கள் - யாத்17.9-14, 24.13, 32.17, எண்11.28, உபா1.38, யோசுவாவின் புத்தகம், யூதா2.6-9, 1ராஜா16.34 ஆகிய வேத பகுதிகளிலும் யோசுவாவைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.


4.      விவாதத்திற்கான வினாக்கள்

v      யோசுவா யாருக்குப் பதிலாக பொறுப்பேற்றான்?
v      வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்திற்குள் நுழைய அவன் எப்படி தகுதியுடையவன் ஆனான்?
v      தலைமைத்துவத் தகுதியை யோசுவா யாரிடம் இருந்து கற்றுக் கொண்டான்?
v      யோசுவா 25.15ல் இடம் பெறும் வசனத்தை விளக்குக.
v      யோசுவாவிடம் இருந்து நமது திருப்பணிக்கு என்ன கற்றுக் கொள்ளலாம்?
v      இஸ்ரவேல் ஜனங்களுக்கு அவேன் எப்படி மீட்பைக் கொண்டு வந்தான்?

15. தாவீது - இஸ்ரவேல் அரசர்களில் தலைசிறந்தவர்




கரு வசனம்: இப்போதும் கர்த்தராகிய ஆண்டவரே, நீரே தேவன்; உம்முடைய வார்த்தைகள் சத்தியம்; தேவானே; உமது அடியானுக்கு இந்த நல்விசேஷங்களை வாக்குத்தத்தம் பண்ணினீர்;. இப்போதும் உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படி அதை ஆசீர்வதித்தருளும்; கார்த்தரான ஆண்டவராகிய தேவானே; அதைச் சொன்னீர்; உம்முடைய ஆசீர்வாதத்தினாலே உமது அடியானின் வீடு என்றைக்கும் ஆசீh;வதிக்கப்பட்டிருப்பதாக என்றான்.   (2சாமு. 7:28-29)

முக்கியத் தகவல்கள்
·         எட்டு சகோதரர்களில் இளையவன் (1சாமு17:12).
·         தாவீது சவுலுக்குப் பதிலாகப் பதவியேற்றவர் (33 ஆண்டுகள்)
·         பல வருடங்கள் சரணாகதனாக வாழ்ந்தவர்
·         பத்க்ஷீபாவை தவறான முறையில் மனையாட்டி ஆக்கிக் கொண்டான்.


முன்னுரை - அரசனாக எழுந்த மேய்ப்பன்
அவன் வாழ்க்கையில் பல போதனைகளும், வழிகாட்டுதலும் எச்சரிக்கையும் அடங்கியுள்ளன. அன்பிற்குப் பாத்திரன் என்பது அவன் பெயரின் பொருள். இஸ்ரவேலர்களுக்கு இரண்டாவது அரசனாகப் பதவியேற்ற அவர் தலைசிறந்தவராவார். ஜெசி என்பவரின் மகன், ரூத்திற்கு நாலாம் தலைமுறை வாரிசு, பெத்தலேகெமில் பிறந்தவன், 10 சகோதரர்களின் இளைய மகன்.  தந்தை சொத்தும் செல்வாக்கும் நிறைந்தவராய் இருந்தாலும், தாவீது தனது வாலிப வயதில் ஒரு தொழிலைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான் - கீழ் நாடுகளில் சிறப்பாக அடிமைகளிடமும் பெண்களிடமும் ஒடுக்கப்பட்ட குடும்பங்களிடமும் ஆட்டு இடையனாக சீவனம் பண்ணினான். அப்படியிருந்தும் சாமுவேல் அவனை இஸ்ரவேலின் எதிர்கால அரசனாகக் கொண்டுவரத் தயங்கவில்லை. யாழ் மீட்டுவதில் கைதேர்ந்த அவனை சவுல் துக்கம் அணுசரிக்கும் அரசர்களுக்கு ஆறுதலாக இசை வாசிக்கக் கட்டளையிட்டான். (1 சாமு.16).  தாவீது கோலியாத்தைச் சந்தித்த இடம் எபேஸ் டமிம் (1சாமு.17) ஆகும்.

கலிபோவில் நடைபெற்ற மரண யுத்தத்திற்குப் பிறகு தாவீது சவுல் மற்றும் யோனதானின் மறைவுக்காகக் கதறி அழுதான். இஸ்ரவேல் அரசனான பின்பு எருசலேமைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான். அந்தப் பெட்டி சகல மரியாதையோடும் எருசலேமிற்குள் கொண்டு வரப்பட்டது. அவனின் வெற்றியும் செல்வமும் பாவத்தில் விழச் செய்தது. விபச்சாரத்தோடு ஊரியாவின் மரணத்திற்கும் வழி வகுத்தான் (2சாமு11). தனது பாவத்திற்காக மனஸ்தாபப்பட்டான். மனந்திரும்பி மன்னிப்பு கேட்டான். ஆனால் எஞ்சிய தனது வேதனைகளையும் குடும்ப தகறாறுகளையும் சந்தித்தான். தனது நேசக் குமாரனாகிய அப்சலோம், அவனுக்கு விரோதமாக எழுந்து, நாடு கடத்தி பின்னர் சிறைப்படுத்தினான் (2சாமு15-18). அச்செயலைக் கண்டித்து தாவீது பதவி துறந்து, ஓர் ஆலயத்தை எழுப்பினான். பெத்தலேகேமில் உள்ள தாவீது நகரில் அவன் அடக்கம் செய்யப்பட்டான் (1ராஜா2.10)

தாவீதின் வரலாற்றில் நேசமும் அறிந்து கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டும் முரண்களும் காணப்படுகின்றன. அவனின் பலமும் பலவீனமும் வர்ணிக்கப்பட்டுள்ளன. தேவனின் உள்ளத்திற்குத் தோதுவானவன் என்று தாவீது வேதாகமத்தில் வர்ணிக்கப்படுகிறான்.

அவனின் ஆற்றல்களை முதலில் காண்போம்.

2.      தாவீதின் ஆற்றலும் நடவடிக்கைகளும்
·         இஸ்ரவேலரின் தலைசிறந்த ராஜா. தாவீதின் சாம்ராஜ்யத்தை நிறுவியவன்.
·         இயேசு கிறிஸ்துவின் மூதாதையர்
·         விசுவாசிகளின் சபையில் சேர்த்துக் கொள்ளப்பட்டவன் (எபிரேயர் 11)
·         பாவஞ்செய்தாலும் தமது இருதயத்திற்கு ஏற்ற மனிதன் என்று கர்த்தரால் வர்ணிக்கப்பட்டவன்.
·         மிகச் சிலரிடமே இதுபோன்ற முரண்பாடான குணாதிசயங்கள் காணப்படும்.

ஸ்டேன்லி என்ற ஒரு பல்கலை வேந்தர், தாவீதின் குணாதிசயங்களை வர்ணிக்கும்போது, வாஞ்சை, கணிவு, தயாளம், கம்பீரம், ஆகிய குணாதிசயங்களுக்கு மத்தியில் தாவீது போர் வீரனாகவும், இடையனாகவும், கவிஞனாகவும், அரச வம்சகனாகவும், ஆசாரியனாகவும், தீர்க்கதரிசியாகவும், ராஜாவாகவும், நேசமிகுந்த நண்பனாகவும், செங்கோல் அரசனாகவும், பக்திவிநயமாக தந்தையாகவும் திகழ்ந்திருக்கிறார். பழைய ஏற்பாட்டில் அவனுக்கு நிகரான பாத்திரத்தைக் காணவியலாது. அவன் இயேசு கிறிஸ்துவின் சாயலைத் தரித்திருந்தான். அவன் ஆபிரகாமின் குமாரன் என்றழைக்கப்படாமல் தாவீதின் குமாரன் என்றழைக்கப் பட்டான்.


தாவீதின் பலவீனங்களும் குற்றங்களும்

v      பெத்ஷெபாவோடு விபச்சாரத்தில் ஈடுபட்டான்
v      பெத்ஷெபாவின் கணவனாகிய ஊரியாவைக் கொல்ல சதி செய்தான்
v      மக்கள் கணக்கெடுப்புக்கு தேவன் சொன்ன கட்டளையை நேரடியாக மீறினான்
v      தன் பிள்ளைகளின் பாவங்களைக் கண்டிக்கவில்லை


தாவீதின் வரலாற்றின் மூலம் நாம் பெற்றுக் கொள்ளக் கூடிய படிப்பினைகள்

தன் குற்றங்களை ஒப்புக் கொள்ள மனங் கொண்டான்
பாவமன்னிப்பு அதன் வினைகளை போக்க முடியாது
தேவன் நமது முழு விசுவாசத்தையும் ஆராதனையையும் எதிர்ப்பார்க்கிறார்.


5.      வேதாகம மேற்கோள்கள் - 1சாமுவேல் 16, 1ராஜா 2. அவரைப் பற்றி அம்ப்? 6.5, மத்தேயு 1.1, 6.22, 43-45, லூக்கா 1.32, அப்போஸ்தலர் 13.22, ரோமர் 1.3, எபிரேயர் 11.32 ஆகிய பகுதிகளிலும் குறிக்கப்பட்டுள்ளது.


6.      விவாதத்திற்கான கேள்விகள்
v      அவன் ஏன் இஸ்ரவேலர்களின் தலைசிறந்த அரசன் என்று அழைக்கப்பட்டான்?
v      பாவங்கள் நிமித்தமும், தேவன் ஏன் அவனை தமது உள்ளத்திற்குப் பிரியமானவன் என்று வர்ணித்தார்?
v      அவனின் பிரபலமான மகன் யார்? யார் ஞானி என்று அழைக்கப்பட்டான்?
v      அவனுடைய எந்தக் கவிதையை நாம் இன்றளவும் ஆராதனையில் பயன்படுத்தி வருகிறோம்?
v      அவன் வாழ்வின் மூலம் நாம் கற்றுக் கொள்ளக் கூடியது என்ன?

62. மோசே - தேவ ஜனங்களை விடுவித்தவன்

அவனின் வாழ்க்கைக் குறிப்புகள்

1.     அவனின் பூர்வீகம் - அடிமையின் மகன்
a)    இஸ்ரவேலர் குழந்தைகளைக் கொன்று போட எகிப்தின் அரசனான பாரோன் கட்டளையிட்ட அதே நேரத்தில் பிறந்தான் (யாத்2.1-4).
b)     எகிப்து தேச சட்டத்தின் படி, இஸ்ரவேலர் அடிமைகளின் புத்திரன்.
c)     அவனுடைய முன்னோர்கள் யோசேப்பின் காலத்தில் மேய்ப்பர்களாக வந்து கோசேன் என்ற ஊரில் தங்கினார்கள். 400 வருடமாக அங்கே பாடு பட்டனர். அவர்கள் எகிப்தில் வாழ்ந்த முற்பகுதியில் பாடுகள் அனுபவிக்கவில்லை. யோசேப்பை அறியாத ஓர் அரசன் ஆட்சிக்கு வந்த பிறகே அவர்கள் பாடுகள் அனுபவித்தனர்.


2.     தேவனின் திட்டத்தால் ஓர் இளவரசான வளர்தல்
a)     பாரோனின் மகள் தனது குழந்தையாகத் தத்தெடுத்து, அவனுக்குத் தேவையான உதவிகளை வழங்குதல்.
b)     தேவனின் திட்டத்தின்படி பாரோனின் மகள் மோசேயின் தாயாரிடமே பாலூட்டக் கேட்டுக் கொண்டாள். அவன் மொத்தமாக தனது தாய்மை அன்பை இழக்கவில்லை (யாத்2.10)
c)     எகிப்தியரின் எல்லா ஞானத்திலும் அவன் பயிற்சி பெற்றான்.
(யாத்.2.5-10, அப்7.21-22).
d)     ஓவிய எழுத்துக் கல்வி, இசைக் கல்வி போன்றவை எகிப்தியர் கல்வியில் அடங்கியுள்ளன. மறநிலையின்பம் (ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டு), உடல் வலிமைப் பயிற்சி போன்ற ஆற்றல்களையும் அவன் பெற்றிருக்கக் கூடும். (JD டோக்ளஸ், புதிய வேதாகம அகராதி),  (IVF, லண்டன், 1962, பக். 844 ff).


3.     தன் ஜனங்களுடனான மோசேயின் எபிரேய இன உணர்வு
a)     பாரோனின் அரண்மனையில் வளர்க்கப்பட்டாலும், தன் சொந்த ஜனங்களின் பாடுகளில் பரிதாபப்பட்டான்.
b)     ஓர் எபிரேயன் எகிப்தியனிடம் வதைக்கு ஆளான போது மோசேயின் முதல் அழைப்பு ஏற்பட்டது. எபிரேயனை வதைத்துக் கொண்டிருந்த எகிப்தியனை மோசே கொன்று, அவன் உடலை மண்ணில் புதைத்தான். (யாத்2.13).
c)     சிறைப்படுத்தப்படுவதில் இருந்து தப்பித்துக் கொள்ள மீடியன் என்ற ஊருக்குத் தப்பிச் சென்றான்.


4.     தேவன் அழைப்பதோடு நில்லாமல் இஸ்ரவேல் ஜனங்களை விடுவிக்கும் பொருட்டு மோசேக்குப் பொருத்தமான பயிற்சியையும் வழங்கினார்.
a)     தனிமையும் எளிமையும் மோசே இஸ்ரவேலர்களை விடுவிப்பதற்கு ஏதுவான கட்டளையைப் பெற வழிவகுத்தது. 
b)     தன் ஜனங்களின் பாடுகளைக் குறித்து மோசே அனுதாபங் கொண்டாலும் பாலைவனத்தில் ஆடுகள் மேய்த்துக் கொண்டிருக்கும் போதுதான் அவர்களை விடுவிக்க அழைப்பு கிடைத்தது. எந்த இடத்திலும் அழைப்பு கிடைக்கலாம். ஆமொஸ் விவசாயியாக இருக்கும்போது அழைப்பைப் பெற்றான். விழித்திருப்பதோடு எதிர்பார்த்தும் வாழ வேண்டும்.
c)     தொடக்கத்தில் தனது ஜனத்தை விடுவிப்பதற்கான அழைப்பை மோசே ஏற்கமறுத்தான் (யாத்3.11). தன் குடும்பத்தை விட்டு எகிப்திற்குச் செல்ல நேர்ந்தது. எகிப்திற்குத் திரும்பும்போது, யாரும் அந்தக் கொலையை அறியாததுபோல் காணப்பட்டது.


5.     தேவன் சக்திவாய்ந்த நிலையில் மோசேயை அழைத்தார் (வெளி3.7-10)
a)     என் ஜனங்கள் எகிப்தில் படும் துன்பங்களை மெய்யாகவே நான் கண்டேன்.
b)     அடிமைத் தனத்தால் அவர்கள் கூக்குரல் என் காதுக்கு எட்டிற்று. அவர்கள் துன்பத்தில் எனக்குக் கருத்துண்டு.
c)     அவர்களை இரட்சித்து, இத்தேசத்தில் இருந்து விடுவித்து பாலும் தேனும் ஓடுகிற கானானியர்களின் தேசத்திற்குள் கொண்டு வந்து சேர்ப்பேன்.
d)    இப்போது அவர்களின் கூக்குரல் என் காதுக்கு எட்டிற்று.
e)     எகிப்தியர்கள் அவர்களை அடிமைப்படுத்தும் விதத்தைக் கண்டேன் (யாத்3.9)
f)     என் ஜனங்களாகிய இஸ்ரவேலர்களை எகிப்தில் இருந்து விடுவிப்பதற்கு நான் உன்னை பாரோனிடத்தில் அனுப்புகிறேன்.
g)     நான் உன்னோடு இருப்பேன் (யாத்3.12)


6.     பல வலிமைப் பயிற்சி பெற்றிருந்தாலும் மோசேயிடம் சில ஊனங்கள் காணப்பட்டன (யாத்4.18-31)
a)     சில நேரங்களில் சிலர் தடங்கல்களையும் சிரமங்களையும் கூறி, அழைப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள முயல்வர். (உம் - மோசேயின் நாவூனம்).
b)     என் நாவூனத்தினால் பாரோன் எனக்கு செவி சாய்க்காமல் போகக் கூடும்? ஆரோன் மோசேயைப் பிரதிநிதித்துப் பேசினான். (யாத்5.30)
c)     அவருடைய பெரும் பணிக்காக என்ன பேச வேண்டும், எப்போது பேச வேண்டும், அதன்  நோக்கத்தை வெளிப்படுத்த தேவன் நமக்கு ஒரு தேற்றவாளனை வழங்குவார்.

7.    தேவனால் அழைக்கப்பட்ட மனிதரும் குற்றம் புரியலாம் (எண்20.1-13)
a.    மோசே மெர்பியாவில் மும்முனை குற்றங்களில் ஈடுபட்டான்:
b.    வெறுமனே கட்டளையிடுவதினால் மாத்திரம் பாறையில் நீர் கசியுமா? என்று மோசே சந்தேகங் கொண்டான்;
c.    அவன் தேவையில்லாமல் பாறையை இரண்டு முறை தட்டினான். இது தேவையில்லாத பொறுமையிழப்பைக் காட்டுகிறது. தேவன் அவன் மீது கடும் சினம் கொண்டார்.
d    தான் செய்த அற்புதங்களை தேவ மகிமைக்குப் பயன்படுத்தவில்லை. மாறாக தன்னையும் தன் சகோதரனையும் பெருமைப்படுத்திக் கொண்டான்.



8.     தயக்கம் காட்டிய தேவ விடுதலையாளன்
a.    தேவன் அவனை ஆண்டுகொண்டார் (யாத்4.1-7)
b.    தேவன் மோசேக்கு அற்புதம் செய்யும் ஆற்றலை வழங்கினார். - தேவன் அவனுக்கு வல்லமையையும் அதிகாரத்தையும் வழங்கினார்.
c.    சராசரி மனிதனான மோசே மாபெரும் வல்லமையோடு எழுந்தான்.
d.    தேவன் அவனுக்கும்  அவன் சகோதரனுக்கும் ஆதாரப் பொருள்களையும், கரத்தையும் நீரையும் வழங்கினார்.
e.    மோசே ஆரோனோடு பங்காளித்துவ ஆதாயத்தைப் பெற்றான்.


எப்படி துலங்குவது?
மோசேயைப் போல் நாமும் அழைப்பை ஏற்கலாம், தேவன் தேவையான ஆதாரப் பொருள்களையும், ஆற்றலையும், ஆதரவையும் வெற்றி பெறும் பொருட்டு வழங்குவார்.


9.     மோசே பல சவால்களை எதிர்கொண்டான் (யாத்5.1-23)
a)     முதலில் பாரோனோடு வாக்குவாதம் உருவானது (யாத்5.1)
b)     ஆராதனை செய்யும் பொருட்டு ஜனங்களை வனாந்திரத்திற்குப் போகச் சொன்னது பெருமளவில் பொருளாதாரத்தையும் மனித வளத்தையும் சீர்குலைக்கும் (வ3,5, 7)
c)    எகிப்திய ஆட்சியாளர்களிடம் இருந்து ஜனங்கள் கொடுமையான உழைப்புக்கு உட்படுத்தப்பட்டனர்.
d)    சுதந்திரத்திற்கான கிரயம் - ஊக்கம், பொறுமை, விடாமுயற்சி, மனப்பூர்வமான சம்மதம் தேவ மீட்புக்கான திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஆற்றலில் நம்பிக்கை வேண்டும். (Hugh, R. Page Jr. Exodus: The People's Bible Commentary BRF, London, 2006).
e)    இயற்கையின் சீற்றம் (யாத்7.25-8.13) வாதகைளால் பல தொல்லைகள் (8:16-32) . தேவனுடைய கரங்களை அவர்களை வழிநடத்திற்று.


10.     வனாந்திரத்தில் ஒரு விஷேச பயணம் (13.17-14.4)
a)     செங்கடலைக் கடத்தல் (அதி15)
b)     மேகம், அக்கினி மூலம் தேவன் அவர்களை வழிநடத்தினார்.
c)     பத்துக் கட்டளைகள் (அதி20)
d)    ஜனங்கள் அந்நிய தெய்வங்களை வணங்கத் தூண்டப்பட்டனர் (அதி33)  - தங்கத்தில்     செய்யப்பட்ட கன்றுக்குட்டி


11. தேவன் முழுமையான மாற்றத்தைக் கொண்டு வந்தார் (34.29-35)
a)     மோசேயின் முகம் பிரகாசித்தது.
b)    அவன் நற்செய்தியில் சார்ந்திருந்தான்.
c)    அவனின் புனித கடமைக்குத் தேவையான ஆதாரங்கள் வழங்கப்பட்டன (35-36.7)


12.    முடிவுரை
    மோசேயின் மூலமும் யோசுவாவின் மூலமும் தேவன் தமது நோக்கத்தை நிறைவேற்றினார். அவர்கள் இருவதும் வெவ்வேறு காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


13.    விவாதத்திற்கான கேள்விகள்
v    மோசேக்குப் பாலூட்டியது யாரு?
v    எகிப்தியர்களின் கல்வி தேவ ஜனங்களை விடுவிப்பதற்கு எவ்வாறு அவனுக்கு உதவிற்று?
v    40 ஆண்டுகால வனாந்திரப் பயணத்தில் அவன் எதிர்நோக்கிய சவால்கள் என்ன?
v    அவனால் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்திற்குள் பிரவேசிக்க முடிந்ததா?
v    பத்துக் கட்டளைகளை எழுதுக.
v    அனுதாபத்தையும் ஜெப மன்றாட்டையும் தவிர்த்து நாம் எப்படி துன்பப்படும் மக்களுக்காக கடமையாற்றலாம்?

வேதாகமம் பற்றிய அறிமுகம்

1. பழைய ஏற்பாடு , புதிய ஏற்பாடு என்று பரிசுத்த வேதாகமம் பிரிக்கப்பட்டுள்ளது. பழைய ஏற்பாட்டில் 39 புத்தகங்களும் புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்களும் அடங்கியுள்ளன. வேதாகம்ம் ஒரு புத்தகசாலை. பழைய ஏறப்டு இயேசு கிறிஸ்து பிறப்புக்கு முன்பே எழுதப்பட்டது. புதிய ஏற்பாடு அவரின் பிறப்புக்குப் பின் எழுதப்பட்டது.

2. பழைய ஏற்பாட்டில் சட்ட திட்டம், வரலாறு, கவிதை (சங்கீதம்), ஞானோபதேசம், மற்றும் தீர்க்கதரிசன புத்தகங்கள் அடங்கியுள்ளன. பழைய ஏற்பாடு (இனி பஏ என்று குறிப்பிடப்படும்) ஒரு தலை சிறந்த பண்டைய இலக்கியம். இதற்கும் முந்திய புத்தகங்கள் இருக்கலாம். ஆனால் அவற்றைப் பெருமளவில் வாசிப்பவர்கள் கிடையாது.

3. வேதாகமத்தை ஒரு புத்தகம் என்று கூறவியலாது. 66 புத்தகங்களைக் கொண்ட ஒரு தொகுப்பு. ஆபிரகாம், மோசே, யோசுவா, தாவீது போன்ற நாயகர்களின் மகா புராணக் கதைகளில் இருந்து, இயல்புத் தன்மை வாய்ந்த யோபு, பிரசங்கி, போன்ற அனைவருக்கும் ஏற்றவை இப்புத்தகங்கள் இங்கு உண்டு.

4. பழைய ஏற்பாட்டு ஆசிரியர்களைப் பொறுத்த வரை, அவர்களுடைய சமுதாய, பொருளாதா, அரசியல் புரட்சியனால் மட்டும் அவர்களுடைய சமுதாயம் நிலைத்திருக்கவில்லை என்று நம்புகிறார்கள். அதற்கும் மேலாக, அவர்களுடைய தோற்றத்திற்கு கர்த்தரும் அவருடைய நடவடிக்கையும் காரணம். இவை ஒரு சமய புத்தகமும் கூட. இந்த உலகமும் அதன் நடவடிக்கையும் ஒரு தற்செயலான நடவடிக்கைத் தொடர்களால் ஏற்பட்டதாக இப்புத்தகங்கள் கருதவில்லை. அவை யாவும் மகா வல்லமை பொருந்திய கர்த்தரின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கியுள்ளது. அவர் அறியப்படாத வெகு தொலைவில் உள்ள தேவன் அல்லர். மனிதர்களோடு உறவாடக் கூடிய வல்லவர் அவர். இந்தச் செய்தி ஆதியாகமத்தின் முதல் சில பத்திகளிலே காணப்படுகிறது. மேலும் பின்வரும் பத்திகளில் காணப்படுவது போல் பல முறை விளக்கப்பட்டுள்ளதோடு வலியுறுத்தவும் பட்டுள்ளது.

5. கர்த்தருடைய புராணம் (கதை) மனிதர்களிடம் அவர் வெளிப்படுத்தும் அன்பின் உறவாகும். மிக ஆழமான நுண்ணறிவினால் ஓசியா தீர்க்கதரிசி கர்த்தரை அன்பான தந்தையாகவும், இஸ்ரவேலர்கள் அவருடைய புத்திர்ர்களாகவும் (ஓசியா 11.1-4) குறிப்பிடுகிறார். இந்த உவமானத்தை கேட்டின் மகனுடைய உவமானத்தோடு ஒப்பிடவும்.

6. பழைய ஏற்பாடு ஆர்வத்தைத் தூண்டும் புத்தகங்களாகும். யுத்தங்களும் அனுபவங்களும் நிறைந்து காணப்படுகின்றன. மனிதனுக்கும் கர்த்தருக்கும் இடையிலான மாபெரும் உறவின் அடிப்படையில் அவை எழுதப்பட்டுள்ளன.

7. புராணங்களை (கதைகளைப்) புரிந்து கொள்ளுதல்:
a. பழைய ஏற்பாடு (ப.ஏ.) யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் பொதுவான வேதமாகும். அவிற்றில் தமது ஜனங்களின் வளர்ச்சியையும் கர்த்தர் இஸ்ரவேலர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கைகளையும் காண்கிறோம். இந்த உடன்படிக்கைகள் நிறைவேறுவது தொடர்பான புரிந்துணர்வுகளில்தான் கிறிஸ்தவர்களுக்கும் யூதர்களுக்கும் வித்தியாசம் காணப்படுகிறது.
b. கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை ப.ஏ. நமது வேதாகமத்தின் முதல் பாதி பகுதியாகும். கிறிஸ்தவக் கண்ணோட்டத்தில் இவ்விரண்டு ஏற்பாடுகளும் ஒன்றுக்கொன்று ஊக்கப்படுத்துவதற்கு உதவுகின்றன.

8. ப.ஏ. எழுதப்பட்ட காலக்கட்டம் மிகவும் நெடுகலானது. பு.ஏ. எழுதி முடிக்கப்பட்ட காலக்கட்டம் 60-70 ஆண்டுகளாக குறுகியிருக்க ப.ஏ. நூற்றாண்டுகள் இடைவெளியைக் கொண்டிருக்கிறது.

9. பல உலக நாகரீகங்கள் தோன்றி முதிர்ந்த நிலையில்தான் இஸ்ரவேலர்களின் வரலாறு தொடங்கிற்று. யுப்ரத்தஸ் நதியோரத்தில் வாழ்ந்த பாபிலோனியர்களின் கலாச்சாரமும் நூல்களும் பழைய ஏற்பாட்டில் குறிக்கப்பட்டுள்ளன.

10. தேவன் எவ்வாறு மனித வர்க்கத்திற்குத் தம்மை வெளிப்படுத்தினார் என்பதை அறிவதற்கே யூதர்களுககும் கிறிஸ்தவர்களுக்கும் ப.ஏ.ஐ பயன்படுகிறார்கள். உலகம் முழுவதற்கும் இந்தச் செய்தி கூறப்படுகிறது. (யோவான் 3.16).

11. ஆனாலும், ப.ஏ. வாழ்க்கை முறை தற்காலத்தை விட மிகவும் மாறுபட்டிருக்கிறது. இந்த மாறுபாடுகளை நாம் உணர்ந்திருக்க வேண்டும். அதே நேரத்தில் இதை வாசிக்கிற அனைவரோடும் பொதுவான மனித தன்மையைப் பகிர்ந்து கொள்கிறோம்.

12. புராணமும் விசுவாசமும். ப.ஏ. புத்தகங்களைக் காண்போம்:
a. ஆகமங்கள்: ஆதியாகம்ம், யாத்திராகம்ம், லேவியராகம்ம், எண்ணாகம்ம், உபாகமம்.
b. வரலாறு: யோசுவா, நியாயாதிபதிகள், ரூத், சாமுவேல் 1, சா.2, ராஜாக்கள் 1, ரா2, நாளாகம்ம், எஸ்ரா, நெகேமியா, எஸ்தர்.
c. ஞானப் பாட்டுகள்: யோபு, சங்கீதம், நீதிமொழிகள், பிரசங்கி, சாலேமனின் சங்கீதம்.
d. தீர்க்கதரிசிகள்: ஏசாயா, எரேமியா, புலம்பல், எசேக்கியேல், தானியேல், ஓசியா யோவேல், ஆமொஸ், ஓபதியா, யோனா, மீகா, நாகூம், ஆபகூக், செப்பனியா, ஆகாய், சகரியா, மல்கியா.

13. வரலாற்றுக்கும் அப்பாற்பட்ட விஷயங்கள் ப.ஏ.இல் கூறப்பட்டுள்ளன. கற்பனை வளத்தோடு பாடப்பட்ட தங்கள் பேரானந்த்த்தையும் ஆராதனைப் பாடல்களையும் பற்றிய பதிப்புகள் இதில் காணப்படுகின்றன.

14. மேற்கோள் புத்தகங்கள்:
a. டேவின் எஃப் வின்சன், பழைய ஏறப்டு – அறிமுகம் (நீள்விரிக் கல்வி வழிகாட்டி 7), (எஸ்பிசிகே) 1973.
b. ஜான் டிரேன், பழைய ஏற்பாட்டைப் பற்றிய அறிமுகம் (லயன் புத்தகம்), 1987.
c. ஜெ.அல்பெர்த்தோ சொகின், பழைய ஏற்பாட்டைப் பற்றிய அறிமுகம், (எஸ்சிஎம், 1980).

15. நாம் பழைய ஏற்பாட்டில் விசுவாசத்திற்குத் தந்தையான ஆபிரகாமைப் பற்றி முதலில் கற்கப் போகிறோம்.

பேராயர் பத்துமலை
2010 அத்தியட்சாதீன நீள்விரிப் பயிற்சி

மொழி பெயர்ப்பு:
வி.பி.ஜான்சன் விக்டர்,
பரி.யாக்கோபின் ஆலயம்
03.02.2011