Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Wednesday, August 22, 2012

31. ஆமான்



தீய எண்ணம் கொண்ட பிரதம மந்திரி, எஸ்தர் புஸ்தகத்தின் விரோதி.

முக்கிய வசனங்கள்:
ஆமான் மொர்தெகாய் தன்னை வணங்கி நமஸ்கரியாததைக் கண்டபோது, மூர்க்கம் நிறைந்தவனானான்.  ஆனாலும் மொர்தெகாயின் மேல் மாத்திரம் கைபோடுவது அவனுக்கு அற்பக் காரியமாகக் கண்டது.  மொர்தெகாயின் ஜனங்கள் இன்னாரென்று ஆமானுக்கு அறிவிக்கப்பட்டிருந்தபடியால், அகாஸ்வேருவின் ராஜ்யமெங்கும் இருக்கிற மொர்தெகாயின் ஜனமாகிய யூதரையெல்லாம் சங்கரிக்க அவன் வகை தேடினான்.”  (எஸ்தர் 3: 5 – 6)

v  ஆகாகியனாகிய அம்மெதாத்தாவின் குமாரன், எஸ்தர் காலத்தில் பெர்சியாவில் இராஜாவாகிய அகாஸ்வேருவின் கீழ் உயர்ந்த அதிகாரியாக இருந்தான்.
v  இன சம்பந்தமான நீதியற்ற விரோதத்தினால், ஆமான் யூதர்களைச் சங்கரிக்க சதி ஆலோசனை செய்தான்.
v  அவனை வணங்குவதற்கு மொர்தெகாய் மறுத்ததால் அதைப் பெரிய காயமாக நினைத்துக்கொண்டான்.
v  அவன் மொர்தெகாயைத் தூக்கில் போட தீர்மானித்தான்.
v  ஆமான் யூதர்களைக் கொல்ல சதியாலோசனை செய்தது வெளியரங்கமானபோது, அவனையும், அவனுடைய பத்து குமாரர்களையும் மொர்தெகாய்க்கு ஆயத்தம்பண்ணின தூக்குமரத்தில் தூக்கிப்போட்டார்கள்.



சுருக்கமான குறிப்புகள்
1.         அறிமுகவுரைஅவன் கதை
            மிகுந்த கர்வமுள்ள ஜனங்கள், தங்கள் அதிகாரம், செல்வாக்கு மற்றவர்களைவிட மேலானது என்று நினைக்கிறவர்கள் அவர்களது சொந்த எல்லையில்லா மதிப்பை அடிக்கடி மதிப்பிடவேண்டும். ஆமான் அளவுக்கதிகமான கர்வமுள்ள தலைவனாயிருந்தான். அவன் இராஜாவைத் தன் மேலதிகாரியாக அறிந்திருந்தான்.  ஆனாலும் மற்றவர்களுக்குச் சமமான ஒருவராகத்தான் ஏற்றுக்கொள்ள முடிந்தது.  ஒரு மனிதன், மொர்தெகாய் அவனுக்கு மரியாதையாகக் கீழ்ப்படிந்து வணங்க மறுத்தபோது, ஆமான் அவனை அழிக்க விரும்பினான்.  அவன் மொர்தெகாயின் மேல் விரோதம் நினைத்தவனாயிருந்தான்.  அவன் முன்னதாகவே எல்லா யூத ஜனங்கள் மேலும் இன விரோதம் நிறைந்தவனாயிருந்தான்.  ஏனென்றால் யூதர்களுக்கும், ஆமானின் சந்ததியார் அமலேக்கியருக்கும் இடையில் நீண்ட காலமாக விரோதம் நிலைத்திருந்தது.  மொர்தெகாய் தேவனிடம் முன்னறிவித்ததும், எந்த மனிதர்களுக்கும் அடைக்கலம் கொடுக்க மறுத்ததும் ஆமானின் சொந்த நிலையான மதத்திற்குச் சவாலாயிருந்தது.  ஆமான் யூதர்கள் தன் அதிகாரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கிறதைக் கண்டதால் அவர்களைக் கொல்லத் தீர்மானித்தான். 

            தேவன் ஆமானின் வீழ்ச்சியையும், அவன் ஜனங்களின் பாதுகாப்பையும் ஆமான் அகாஸ்வேரு இராஜாவின் அதிகாரத்திற்குக் கீழ் வரும்முன்பே ஆயத்தமாக்கியிருந்தார்.  எஸ்தர், ஒரு யூத ஸ்திரீ இராணியாக ஆனாள்.  மொர்தெகாயின் பங்கு, கொலை முயற்சியை வெளிப்படுத்தியதால் இராஜா அவனிடம் கடமைப்பட்டிருந்தார்.  ஆமான் மொர்தெகாயைக் கொலை செய்வதிலிருந்து காப்பாற்றப்பட்டது மாத்திரமல்ல, அவனை மரியாதை செய்ய, அவமானத்தைப் பிரகடனம் செய்ததால் வருத்தப்பட்டான்.  சில மணிநேரத்திற்குள் ஆமான் மொர்தெகாயைத் தூக்கிலிட ஏற்படுத்தின தூக்குமரத்தில் மரணமடைந்தான்.  அவன் யூதர்களை அழித்துவிடவேண்டும் என்று எண்னினது தடை செய்யப்பட்டது.  எஸ்தர் வித்தியாசமாக எல்லாவற்றையும் தேவனுக்காக எதிர்கொண்டு வெற்றி பெற்றாள்.  ஆமான் எல்லாவற்றையும் தீமையான காரியங்களுக்கு ஒப்புக்கொடுத்து தோல்வி அடைந்தான். 

ஆமானைப் பற்றிய கதையைப் பற்றி நமது முதல் பதில் அவன் தகுதிக்கேற்றதைப் பெற்றான் என்று சொல்லவேண்டும்.  ஆனால் வேதாகமம் ஆழமான கேள்விகள் கேட்க வழி நடத்துகிறது.  எவ்வளவு அதிகமாய் ஆமான் என்னிலிருக்கிறான்?  நீ மற்றவர்களை அடக்கியாள விரும்பினாயா? மற்றவர்கள் என்னை நான் நினைத்தபடி உயர்வாக மதிக்கவில்லை என்றால் நான் அவர்களை அச்சுறுத்தினேனா?  என் பெருமை தாக்கப்படும்போது பழி வாங்க வேண்டும் என்று விரும்பினாயா?  இப்படிப்பட்ட நடத்தையைத் தேவனிடம் ஒப்புக்கொண்டு, அதற்குப் பதிலாக மன்னிப்பைக் கொடுக்கும்படி அவரிடம் கேள்.  அப்படியில்லையென்றால் தேவனின் நியாயத்தீர்ப்பு அந்தக் காரியத்தை முடிவு செய்யும். 

2.         பலங்களும் நிறைவேற்றுதலும்
பெரிய அதிகாரியாக சாதனை பெற்று, பெர்சியாவின் இராஜாவாகிய அகாஸ்வேருவிற்கு இரண்டாவது நிலையில் இருந்தான்.

3.         பலவீனங்களும் தவறுகளும்
a)    மற்றவர்களை அடக்கியாள வேண்டும் என்ற எண்ணமும், உயர்ந்த மரியாதை பெற வேண்டும் என்பதும் அவனது உயர்ந்த நோக்கம்.
b)    அவன் கர்வத்தாலும், சுய மதிப்பினாலும் கன்மூடித்தனமான நம்பிக்கை கொண்டிருந்தான்.
c)    மொர்தெகாயைக் கொல்ல அவனுக்காக தூக்குமரத்தை ஏற்படுத்தத் திட்டம் பண்ணினான்.
d)    சாம்ராஜ்யத்தின் மூலமாக தேவனின் ஜனங்களைக் கொலை செய்யத் திட்டம் தீட்டினான்.

4.         அவன் வாழ்க்கையிலிருந்து பாடங்கள்.
a)    பகை தண்டிக்கப்படவேண்டும்.
b)    தேவன், தீமையான திட்டங்களைத் திட்டமிடுபவர்களைத் திரும்ப அனுபவிக்க ஆச்சரியமான குறிப்பு வைத்திருக்கிறார்.
c)    பெருமையும், சுயமதிப்பும் தண்டிக்கப்பட வேண்டும்.
d)    திருப்தியில்லாத அதிகாரத்தில் தாகம், கெளரவம் சுய அழிவைக் கொண்டு வரும்.


5.         வேதாகமக் குறிப்புகள்
ஆமானின் கதை எஸ்தர் புஸ்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

6.         விவாதத்திற்குரிய கேள்விகள்
            6.1       அவன் குடும்பப் பின்னணியை விளக்கு.
            6.2       அரசாங்கத்தில் அவன் பதவி என்ன?
            6.3       ஆமான் ஏன் மொர்தெகாயை வெறுத்தான்?
            6.4       எப்படி அவனும், அவன் பிள்ளைகளும் கொல்லப்பட்டார்கள்?
            6.5       அவன் வாழ்க்கையிலிருந்து ஒருவர் என்ன பாடங்கள் கற்றுக்கொள்ள முடியும்?

மொழிபெயர்ப்பு
திருமதி நாயகம் பட்டு
பரி.யாக்கோபின் ஆலயம்.

No comments:

Post a Comment