Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Wednesday, August 22, 2012

68. நோவா


லாமேக்கின் குமாரன்

முக்கிய வசனம்
நோவா தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் செய்து முடித்தான்.” (ஆதியாகமம் 6 : 22)

சுருக்கமான குறிப்புகள் 
v  நோவா உத்தம மனிதன். (ஆதி 6 :9)
v  அவன் தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்தான். (ஆதி 6 : 9)
v  அவன் அதிக, நீண்ட நாட்கள் உயிரோடிருக்க ஆசீர்வதிக்கப்பட்டிருந்தான்.
v  நோவாவும், அவன் குடும்பத்தாரும் வெள்ளத்திலிருந்து தப்பிப் பிழைத்தார்கள்.
v  கர்த்தர் நோவாவோடு உடன்படிக்கை செய்தார். (ஆதி 6 : 18)
v  அவன் குமாரர்கள் சேம், காம், யாப்பேத்.

1.         அறிமுகவுரைஅவன் கதை 
            அநேக வியாக்கியானம் கூறுபவர்கள் அவர் பெயரை `இளைப்பாறுதல்என்பதோடு சம்பந்தப்படுத்தினார்கள் நோவாவின் வாழ்க்கையின் கதை ஒன்றோடு மட்டுமல்ல, இரண்டு பெரிய, பயங்கரமான வெள்ளங்களோடு சம்பந்தப்பட்டிருக்கிறதுநோவா காலத்தில் உலகத்தில் பாவத்தினால் வெள்ளம் ஏற்பட்டதுசிருஷ்டிப்பின் தேவன் பூரணத்துவம், அன்பு ஞாபகம் வைத்திருந்தவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து ஒன்றானதுதேவனின் ஜனங்களில் நோவா மாத்திரம் தான் விடப்பட்டு இருந்தான்கொடூரமான நிலைமையில் தேவனின் ஒத்துழைப்பு 120 வருட நீண்ட கடைசி வாய்ப்புஅந்த நேரத்தில் அவர் வாழ்க்கையின் தெளிவான விளக்கத்தைக் கூற நோவா இருந்தான்முக்கிய நோக்கம் வறண்ட நிலத்தில் ஒரு பெரிய படகு போல் இல்லாமல் வேறில்லைநோவாவுக்கு கீழ்ப்படிதல் ஒரு திட்டத்தின் நீண்ட கால பொறுப்பு எனத் தெளிவாகிறது.

            நம்மில் அநேகருக்கு ஏதாவது ஒரு திட்டத்தில் இணைந்திருப்பது கஷ்டமாயிருக்கிறதுஅது தேவனின் வழிகாட்டுதலா, இல்லையாநோவாவின் கீழ்ப்படிதலின் அளவு, தற்கால மனிதர்களின் வாழ்வுகால அளவை விடப் பெரிதாயிருப்பது சுவாரஸ்யமானதுநீண்ட காலத் திட்டத்தோடு ஒத்துப்போவது நமது முக்கியமான வாழ்க்கைதான்ஆனால் ஒரு வேளை நோவாவின் வாழ்க்கை நமக்குக் கிடைக்கும் பெரிய சவால்தேவனின் கிருபையை ஏற்றுக்கொண்டு வாழ்தல், முழு வாழ்நாட்களிலும் கீழ்ப்படிதலோடும், நன்றியோடும் வாழ்தல்

2.         பலங்களும் நிறைவேற்றுதலும் 
a)    அவன் சந்ததியில் தேவனைப் பின்பற்றுகிறவர்கள் விடப்பட்டிருந்தார்கள்.
b)    மனித சந்ததியில் இரண்டாவது தகப்பன்.
c)    பொறுமை, உறுதி, கீழ்ப்படிதலுள்ள மனிதன்.
d)    கப்பல் கட்டுபவர்களில் முதலாவது தலைவன்.

3.         பலவீனங்களும் தவறுகளும் 
            அவன் குடித்ததினால் அவனுடைய குமாரர்களின் முன்னால் தர்ம சங்கடமான நிலையில் இருந்தான்.

4.         அவன் வாழ்க்கையிலிருந்து பாடங்கள். 
a)    தேவன் அவருக்குக் கீழ்ப்படிபவர்களிடம் விசுவாசமாயிருப்பார்.
b)    தேவன் எப்போதும் கஷ்டத்திலிருந்து காப்பாற்றமாட்டார்ஆனால் பகை மூலம் வரும் கஷ்டங்களில் நமக்காகக் கவலைப்பட்டுக் கவனிப்பார்.
c)    கீழ்ப்படிதல் நீண்ட கால வாக்குத்தத்தம்.
d)    ஒரு மனிதன் விசுவாசமாயிருக்கலாம்ஆனால் அவன் இயற்கையான பாவமானது அவனுடன் கூட பிரயாணம் செய்யும்.

5.         வேதாகமக் குறிப்புகள்:  
நோவாவின் கதை ஆதியாகமம் 5 : 29 – 10 : 32ல் சொல்லப்பட்டிருக்கிறது.  1 நாளா. 1 : 3 – 4; ஏசாயா. 54 : 9; எசேக்கியேல். 14 : 14, 20; மத்தேயு. 24 : 37 -38; லூக்கா. 3 : 36, 17 : 26 -27; எபிரெயர். 11 : 7; 1 பேதுரு 3 : 20; 2 பேதுரு. 2 : 5.  இவைகளில் அவன் குறிப்பிடப்பட்டிருக்கிறான்

6.         விவாதத்திற்குரிய கேள்விகள் 
            6.1       அவன் பின்னணியைப்பற்றி உனக்கு என்ன தெரியும்?
            6.2       முதல் வெள்ளத்தைப்பற்றி உனக்கு என்ன தெரியும்?
            6.3       அவனும் அவன் குடும்பத்தாரும் எப்படி வெள்ளத்திலிருந்து தப்பித்தார்கள்?
            6.4       அவன் எப்படி தேவனுக்குக் கீழ்ப்படிந்தான்?
            6.5       அவன் வாழ்க்கையிலிருந்து நாம் என்ன பாடங்கள் கற்றுக் கொள்ள முடியும்?


மொழிபெயர்ப்பு
திருமதி நாயகம் பட்டு
பரி.யாக்கோபின் ஆலயம்.

No comments:

Post a Comment