Bishop Datuk Dr. S.Batumalai Ph.D

Bishop Datuk Dr. S.Batumalai Ph.D
பேராயர் டத்தோ டாக்டர் எஸ்.பத்துமலை

மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் திருச்சபையின் உதவிப் பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை

பேராயர் டாக்டர் எஸ்.பத்துமலை நடத்துகிற நீள்விரி இறையியல் கல்விக்கான பாடப் பொருள்களை நான் மொழி பெயர்த்து வருகிறேன். இப்பாடப் பொருள்கள் உலகமெங்கும் வியாபித்துக் கிடக்கிற தமிழ்க் கிறிஸ்த்வர்கள் பயனுள்ளவையாக அமையவேண்டும் என்பதற்காக இந்த வலைமனையில் இவற்றைப் பதிப்பிக்கிறேன்.

Saturday, August 11, 2012

70. ராகேல்


யாக்கோபின் மனைவி

முக்கிய வசனம்:
அந்தப்படியே யாக்கோபு ராகேலுக்காக ஏழு வருஷங்கள் வேலை செய்தான். அவள் பேரில் இருந்த பிரியத்தினாலே அந்த வருஷங்கள் அவனுக்குக் கொஞ்ச நாளாகத் தோன்றினது.” (ஆதி 29: 20)

சுருக்கமான குறிப்பு
v  லாபானின் இளைய குமாரத்தி.
v  யாக்கோபின் விருப்பமான மனைவி, யோசேப்பு, பென்யமீனின் தாய்.
v  அவள் மிகுந்த அழகுள்ள பெண்ணாயிருந்தாள். ஆனால் கொள்கையற்ற நடவடிக்கைக்குத் தகுந்தவளாயிருந்தாள்.
v  அவள் பதான் அராமிலுள்ள ஆரானில் அவள் பெற்றோர்களுடன் வாழ்ந்து வந்தாள்.
v  அவள் யாக்கோபைத் திருமணம் செய்ய ஒத்துக்கொண்டாள்.
v  அவளுடைய மூத்த சகோதரி லேயாள்.
v  எருசலேமுக்குப்  பக்கத்திலுள்ள அவளது கல்லறை இப்பொழுது கூட மரியாதைக்குரியதாய் இருக்கிறது.

1.         அறிமுகவுரை  - அவள் கதை
            அவள் பெயர் `பெண் ஆடுஎன்று பொருள்படும். சரித்திரம் இங்கே தானாகவே திரும்பச் சொல்லப்படுகிறதாகக் காணப்படுகிறதுஒரே குடும்ப கதையிலுள்ள இரு முறை ஆரானிலுள்ள நகரக் கிணறு காட்டப்படுவது விசேஷமான நிகழ்வாகக் காணப்படுகிறதுஇங்கேதான் ரெபெக்காள் ஈசாக்குக்கு மனைவி தேடவந்த ஆபிரகாமின் ஊழியக்காரனான எலியேசரைச் சந்தித்தாள்.  40 வருடங்களுக்குப் பிறகு, ரெபெக்காளின் குமாரன் யாக்கோபு அதே கிணற்றிலிருந்து மாமன் மகள் ராகேலுக்கும், ஆடுகளுக்கும் உதவி செய்து ஆதரவைத் திரும்பச் செலுத்தினான். அவர்களுக்கு இடையில் உண்டான உறவுமுறை, காதல் நவீன காலத்து கண்டுபிடிப்பு என்பதை ஞாபகப்படுத்துவது மட்டுமல்லஆனால் பொறுமை, அன்பு இதைப் பற்றிய சில பாடங்களையும் கூடப் போதிக்கிறது.

            ராகேலுக்கான யாக்கோபின் அன்பு பொறுமை, அனுபவம் இரண்டும் கலந்ததுயாக்கோபு அவளுக்காக ஏழு வருஷங்கள் பொறுமையோடு காத்திருந்தான்அந்த இடைவேளையில் அவன் சுறுசுறுப்பாயிருந்தான். அவன் ராகேலுக்காக எடுத்த பொறுப்பு அவளுக்குள் பலமான விசுவாசத்தைப் பிரகாசிக்கச் செய்ததுஅதினால் யாக்கோபின் மேல் அவள் வைத்த விசுவாசம் கைநழுவிப்போய் அவள் சொந்த அழிவுக்கு இட்டுச் சென்றது. அவள் மலடியாயிருந்ததால் ஏமாற்றப்பட்டு, யாக்கோபின் பாசத்திற்காக, அவள் சகோதரியிடம் போட்டியிட நம்பிக்கையற்றவளாயிருந்தாள்அவள், அவன் முன்னதாகக் கொடுத்திருந்த உண்மையான அன்பை அவனிடமிருந்து பெற்றுக்கொள்வதில் வெற்றியடையப் பிரயாசப்பட்டாள்

ராகேல் சம்பாதிக்க முடியாததைச் சம்பாதிக்கப் பிரயாசப்படுவது, நாம் செய்யக்கூடிய மிகுந்த, பெரிதான தவறைப் படம் பிடித்துக் காட்டுகிறது.  அவளைப் போல நாமும் எப்படியாவது அன்பைச் சம்பாதிக்க - தேவனின் அன்பை நாமாகவே பிரயாசப்படக் காணப்படுகிறோம்ஆனால் அவர் வார்த்தையிலிருந்து வேறு விதமாய் நாம் இரண்டு பொய்யான கருத்துகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தோம்ஒன்று அவருடைய அன்பைப் பெற்றுக் கொள்ள நாம் பெற்றுக் கொள்ளத்தக்கதாக நல்லவர்களாய் இருக்கிறோம் என்று நினைப்பது, அல்லது நாம் அவருடைய அன்பைச் சம்பாதிக்க நமக்குத் தகுதி இல்லை. அது நம்முடையதல்ல என்று ஏற்றுக்கொண்டோம் என்று அறிந்து கொண்டோம்வேதாகமம் வேறு ஏதாவது குறிப்பை ஏற்படுத்தவில்லையென்றால் இதை அறைகூவல் விடும்தேவன் நம்மை நேசிக்கிறார்அவருடைய அன்புக்கு ஆரம்பமில்லைநம்பமுடியாத பொறுமையுள்ளது. நாம் செய்ய வேண்டியது ஒத்துழைப்புஎது இலவசமாகக் கிடைக்கிறதோ அதைச் சம்பாதிக்கப் பிரயாசப்படக் கூடாதுதேவன் அநேக வழிகளில் சொல்லியிருக்கிறார்நான் உன்னை நேசிக்கிறேன் என்பதை, அந்த அன்பை உனக்காகச் செய்த எல்லாவற்றிலும் நிரூபித்துக் காட்டியிருக்கிறேன்நான் ஏற்றுக்கொள்ளமுடியாத உனக்காக உன் பாவத்திற்காக என் குமாரன் இயேசுவை விலை மதிக்கமுடியாத தியாகம் செய்தேன்இப்பொழுது என் அன்பினால் வாழ், என்னோடு ஒத்துழை, முழு மனதோடு என்னை நேசி, நன்றி செலுத்துவதில் உன்னை ஒப்புக்கொடு. விலை கொடுப்பது அல்லவாழ்க்கையை முழுவதுமாக வாழ்நீ அன்பாக இருக்கிறாய் என்று சுயாதீனமாக அறிந்துகொள்.”

2.         பலங்களும் நிறைவேற்றுதலும்.
a)     அவள் தன் குடும்பத்திற்கு மிகுந்த விசுவாசம் காண்பித்தாள்.
b)     அவள் அநேக வருஷங்கள் மலடியாயிருந்த பிறகு யோசேப்புக்கும் பென்யமீனுக்கும் தாயாக இருந்தாள்.

3.         பலவீனங்களும் தவறுகளும்.
a)     அவள் பொறாமை, போட்டி அவள் சகோதரி லேயாளோடு உள்ள உறவு முறை தடைபட்டது.
b)     அவள், யாக்கோபின் அன்பு அவள் பிள்ளைகள் பெறத் தகுதியைச் சார்ந்திருக்கவில்லை என்பதை உணர்ந்து கொள்ளத் தவறிவிட்டாள்.

4.         அவள் வாழ்க்கையிலிருந்து பாடங்கள்.
a)     விசுவாசம் எது, உண்மை எது, எது சரியானது என்பவைகளால் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
b)     அன்பு ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். சம்பாதிக்கப் படக்கூடாது.

5.         வேதாகமக் குறிப்புகள்:
ராகேலின் கதை ஆதி: 29  - 35: 20ல் சொல்லப்பட்டிருக்கிறதுஅவள் ரூத் 4: 11ல் குறிப்பிடப்பட்டிருக்கிறாள்.

6.         விவாதத்திற்குரிய கேள்விகள்.
            6.1       அவள் குடும்பப் பின்னணியை விளக்கு.
            6.2       அவள் பிள்ளைகள் யார்?
6.3       அவள் எப்படி தன் குடும்பத்திற்குத் தன் விசுவாசத்தைக் காட்டினாள்?
            6.4       அவளுடைய பலவீனங்கள் யாவை?
            6.5       அவள் வாழ்க்கையிலிருந்து நாம் என்ன பாடங்கள் கற்றுக்கொள்ள முடியும்?


மொழிபெயர்ப்பு
திருமதி நாயகம் பட்டு
பரி.யாக்கோபின் ஆலயம்.

No comments:

Post a Comment